தொப்புள் கொடி சமாச்சாரம்
ஒரு காலத்தில், குழந்தை பிறந்த சற்று நேரத்தில் தொப்புள் கொடியை வெட்டி, குழந்தையை பிரித்தெடுத்த பின்னர் தாயின் கருப்பையில் அடுத்த வெளியேற்றத்திற்காக காத்திருக்கும் ஓரு சிறு மாமிச பிண்டம் போல் தோற்றம் தரும் நச்சுக்கொடியை விரைந்து அகற்றி அதை மண்ணில் புதைத்து விடுவது வழக்கமாக இருந்தது.
முன்னெல்லாம் குழந்தை பிறந்தவுடன் தொப்புள் கொடியை வெட்டி விடுவார்கள் . அது தவறு, சற்று நேரம் தாமதித்து கொடியை வெட்டினால் குழந்தைக்கு நச்சுக் கொடியிலிருந்து சற்று அதிக இரத்தம் ஓடி வர வாய்ப்புண்டு.அந்த இரத்தம் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு நன்மை பயக்கும். இதுபோக ஒரு 50மில்லி அளவு இரத்தம் நச்சுக்கொடியில் தேங்கி கிடக்கிறது.