கரப்பான் பூச்சிக்கு அடுத்ததாக எந்த பேரழிவையும் தாங்கி நிற்கும் சக்தி கொண்டது எலி. எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் உயிர் பிழைத்துக் கொள்ளும் அறிவு எலிக்கு உண்டு. சர்வைவல் இன்ஸ்டிங்க்ட். ஆனால், எதிர்பாராமல் ஒரு நில நடுக்கமோ, சுனாமி போன்ற வெள்ளப் பிரவாகமோ ஏற்படும்போது, அது என்னவென்று தெரியாத குழப்பத்தில் எலிகள் மிரண்டு அங்குமிங்கும் ஓடும்.
பிஜேபி தலைவர்களை அந்த எலிக் கூட்டத்தோடு ஒப்பிட்டு பேசிவிட்டார், பிரியங்கா காந்தி. மிரண்டோடும் எலிகள். அரசியலை ஒதுக்கிவிட்டு பார்த்தால் அழகான சொல் பிரயோகம். இலக்கிய ரசனை மிகுந்தவர்கள் நினைத்து நினைத்து சிலாகிக்கும் கற்பனைச் சித்திரம். பொதுவாக அரசியல்வாதிகள் இத்தகைய வர்ணனைகளை கடன் வாங்குவதுதான் வழக்கம். ஆனால், running like baffled rats என்ற பதத்தை சமீபத்தில் யாரும் பயன்படுத்தியதாக தெரியவில்லை. அந்த வகையில் பிரியங்கா ஒரு கார்ட்டூனிஸ்ட் போல ஒரிஜினலாக சிந்திப்பவர் என்பது தெரிகிறது.
பிஜேபி தலைவர்களை அந்த எலிக் கூட்டத்தோடு ஒப்பிட்டு பேசிவிட்டார், பிரியங்கா காந்தி. மிரண்டோடும் எலிகள். அரசியலை ஒதுக்கிவிட்டு பார்த்தால் அழகான சொல் பிரயோகம். இலக்கிய ரசனை மிகுந்தவர்கள் நினைத்து நினைத்து சிலாகிக்கும் கற்பனைச் சித்திரம். பொதுவாக அரசியல்வாதிகள் இத்தகைய வர்ணனைகளை கடன் வாங்குவதுதான் வழக்கம். ஆனால், running like baffled rats என்ற பதத்தை சமீபத்தில் யாரும் பயன்படுத்தியதாக தெரியவில்லை. அந்த வகையில் பிரியங்கா ஒரு கார்ட்டூனிஸ்ட் போல ஒரிஜினலாக சிந்திப்பவர் என்பது தெரிகிறது.
