Showing posts with label கீழ்ப்படிதல். Show all posts
Showing posts with label கீழ்ப்படிதல். Show all posts

Friday, June 28, 2013

குழந்தைகளுக்கு நன்னடத்தை ஊட்டுதல்


1. குழந்தைகளைக் கீழ்ப்படிதல் உள்ளவர்களாக வளர்த்த வேண்டியது ரொம்ப முக்கியம். அதற்காக என்னென்ன செய்ய வேண்டுமோ அவற்றைச் சிறு வயதிலேயே செய்யுங்கள். “அடி உதவற மாதிரி அண்ணன் தம்பி உதவ மாட்டான்” என்றொரு பழமொழி உண்டு. குழந்தைகளை பெற்றோர் கண்டித்து, தண்டித்து வளர்ப்பதில் தவறில்லை. ஆனால் அது சின்ன வயதிலேயே ஆரம்பிக்க வேண்டும். வளரும் வரை செல்லம் கொடுத்துவிட்டு வளர்ந்தபின் தண்டிக்காதீர்கள். அது அவர்களை ரொம்பவே பாதிக்கும்.

2. குழந்தையை அப்பா கண்டிக்கும் போது அம்மா தடுக்கக் கூடாது. இருவரும் ஒரேமாதிரி நடந்து கொள்ளவேண்டும். தப்பு செய்தால் இரண்டுபேருமே தண்டிப்பார்கள் எனும் நிலை வேண்டும். அதே போல நல்லது செய்தால் இருவரும் பாராட்ட வேண்டும். அது தான் குழந்தை குழம்பாமல் நல்ல செயல்களை விரைவில் கற்க உதவும்.