இஸ்லாம் பல நாடுகளில் பரவிய காலங்களில் முன்பெல்லாம் இப்பொழுதுள்ள வசதிகள்
கிடையாது . அதனால் பல நாடுகளிலிருந்து ஹஜ் செய்ய வரும் மக்கள் ஹஜ்
செய்வதற்குரிய போக்கு வரத்து பற்றிய வழிகளை பற்றி ஆய்வு செய்ய
முற்படுவார்கள் . அது முஸ்லிம் மக்களிடையே நிலவியல் ஆராய்ச்சிக்கு வழி
வகுத்தது.முஸ்லிம்கள் நிலவியல் சம்பந்தமான நூல்களை அப்பொழுதே எழுதி
உள்ளனர். பல இடங்களை கடந்து வரும்போது பலதிறப்பட்ட மக்களை சந்திக்கும்
வாய்ப்பினையும் உருவாகியது . அது வியாபார நுட்பங்களையும் மற்றும்
ஒருவருக்கொருவர் உறவாடிக் கொள்வதில் அன்பினைப் பரிமாறிக் கொள்வதோடு ,ஏற்றத்
தாழ்வின்றி ,நிற வேறுபாடின்றி ஒருவருக்கொருவருவர் உதவி செய்துக்
கொள்வதிலும் மனித பண்பினை மேன்மை படுத்தியது . முஸ்லிம்களுக்குள் ஓர்
ஒற்றுமையை உண்டாக்கியதில் ஹஜ் ஓர் பெரிய பங்கினைத் தருகின்றது கிப்லாவினை நோக்கி தொழுவதற்கு திசை கண்டுபிடிக்கும் கருவியினை முஸ்லிம்கள் கண்டுபிடித்தனர்
வாஸ்கோ டி காமா இந்தியாவை நோக்கி பயணம் செய்வதற்கு 'கடலின் சிங்கம்' என்று அழைக்கப்பட்ட ஷிஹாப் அல் டின் அகமது இபின் மஜித் உதவி மிகவும் முக்கியமானதாகும். ஷிஹாப் அல் டின் அகமது இபின் மஜித் அவர்கள் கடலியல் வழிசெலுத்தல் சம்பந்தமாக பல கையேடுகளின் ஆசிரியராவார்.


தேடித்தேடி விண்ணப்பித்து, ஆளைப்பிடித்து, கழுதைக் காலைப்பிடித்து ஒருவழியாய் அந்த மல்டிநேஷனல் கம்பெனியில் நேர்முகத் தேர்விற்கு அழைப்பிதழ் வர, படு டென்ஷனுடன் கிளம்பும் மகனிடம், “அந்த நீலநிறக் கர்சீப்பை மறக்காமல் பேண்டிற்குள் வைத்துக்கொள். உனக்கு நீலம்தான் ராசியான கலர்,” என்று மகனுக்கு அறிவுறுத்தும் அம்மாவிற்கு ஒரு நம்பிக்கை.
தமது ஆராய்ச்சியில் டாக்டர் கார்ல் முக்கியமாய்த் தெரிவித்த தகவல், “நோயாளிகளின் நம்பிக்கைக்கு ஏற்ப அவர்கள் குணமடையும் வேகம் அமையும்.” அதன் அடிப்படையில் அவர் மருத்துவச் சிகிச்சையும் மனவுறுதி ஆலோசனைகளையும் சேர்த்து அளிக்க ஆரம்பித்தார். சென்ற ஆண்டு இந்த டாக்டர் உணவு உண்ணும்போது புரையேறி இறந்து போனார் என்பது மட்டும் சோகமான உபரித்தகவல்.