Monday, December 10, 2018

இறைவனை பழிக்காதீர்!!!


 Colachel Azheem
***************************
இறைவன் படைப்பினில்
இயற்கை சிறந்தது.
மனிதனின் சுயநலம்
நாநிலம் நசிந்தது.
காற்று சுழல்வதும்
நிலங்கள் அதிர்வதும்
புயலும் பெருமழையும்
இறைவன் சக்தியே!



உண்ண உணவும்
உடுத்தும் உடையும்
வசிக்க இடமும்
குடிக்கும் நீரும்
சுவாசிக்க காற்றும்
நேசிக்கும் உறவும்
தந்தவனும் தருபவனும்
இறைவன் அவனே. ..

இடறில் வேதனையும்
பேரிடறில் சோதனையும்
இழப்பில் வலியும்
பேரிழப்பில் சோகமும்
அழிவில் அபயமும்
பேரழிவில் உபயமும்
தந்தவனும் தருபவனும்
இறைவன் அவனே ..

நானென்ற அகந்தை
எனதென்ற மமதை
நாநிலம் மாநிலம்
நானே காப்பாளி
எங்கும் ஒலித்த போது
தான் தான் பெரியவன்
என்பதை இறைவன்
உணர வைத்த நிமிடம்...

தயவுசெய்து இறைவனை பழிக்காதீர்
இயற்கையை நேசிப்போம்...
இயன்ற வரை...

Colachel AzheemColachel Azheem

No comments: