சென்னை: தற்காலத் தமிழ் எழுத்தாளர்கள் சிலர் தமது படைப்புகளை மின்புத்தகங்களாக வெளியிடுவதில் ஆர்வம் காட்ட ஆரம்பித்துள்ளனர்.இவர்களின் தமிழ் படைப்புகளை மின்புத்தகமாக வெளியிடுவதற்கு சென்னையில் இருந்து இயங்கும் www.freetamilebooks.com என்ற இணையதளம் உதவி வருகிறது.
எழுத்தாளரின் படைப்புகளை பதிப்பு நிறுவனம் ஒன்று புத்தகமாக அச்சிட்டு வெளியிட்டால் மட்டுமே அவற்றுக்கு வாசகர்கள் கிடைப்பார்கள் என்றிருந்துவந்த நிலையை மாற்றுவதாக மின்பதிப்பு வந்துள்ளது.இந்த புதிய முறையில் எழுத்தாளர்களின் படைப்புகளை அவர்களே மின்புத்தகமாக மாற்றி தமது வலைப்பூக்களிலோ, மின் புத்தகங்களை விற்பனை செய்வதற்கான இணையதளங்களிலோ விற்பனை செய்ய முடியும்.
எழுத்தாளரின் படைப்புகளை பதிப்பு நிறுவனம் ஒன்று புத்தகமாக அச்சிட்டு வெளியிட்டால் மட்டுமே அவற்றுக்கு வாசகர்கள் கிடைப்பார்கள் என்றிருந்துவந்த நிலையை மாற்றுவதாக மின்பதிப்பு வந்துள்ளது.இந்த புதிய முறையில் எழுத்தாளர்களின் படைப்புகளை அவர்களே மின்புத்தகமாக மாற்றி தமது வலைப்பூக்களிலோ, மின் புத்தகங்களை விற்பனை செய்வதற்கான இணையதளங்களிலோ விற்பனை செய்ய முடியும்.
