Showing posts with label பேய். Show all posts
Showing posts with label பேய். Show all posts

Tuesday, April 29, 2014

பாவம் உண்மையும் அவரோடு சேர்த்து புதைக்கப்பட்டு விட்டது!

காத்து,கருப்பு
பேய், பிசாசு இல்லை
பில்லியாவது, சூனியமாவது
எல்லாம் சுத்த ஹம்பக்-என்று
எப்போதும் மூட நம்பிக்கைகளுக்கு
எதிராகவே பேசிவந்த
மூலை வீட்டு தாத்தா
திடீரென்று ரத்தம் கக்கி
செத்துப்போனார் போனார்...

Sunday, November 17, 2013

பேய் என்றால்...

பெண் என்றால் பேயும் நடுங்கும்
பெண் என்றால் பேயும் இரங்கும்
பெண் என்றால் பேயும் மயங்கும்
பேய் என்றால் பெண்ணும் பயப்படுவாள்
பேய் என்றால் வக்கிரம் கொண்ட(காம வெறியன்கள்)ஆணாவான்

பேய் என்பது பொய்யானாலும்
பேய் என்பது அச்சம் தரக் கூடியதற்கு உருவகப் படுத்தப் படும்

வக்கிர புத்தி இருபாலர்களுக்கும் உண்டு
அதனால்தான் ஆண் பேய், பெண் பேய் என்கிறார்களோ!

மிரட்ட வரும் பேய் !? திகில் தொடர் !


இது மூடநம்பிக்கைக்கு மூட்டைகட்டும் கற்பனைப் திகில் தொடர்! மனிதமனம் உருவாக்கும் பேய் தான் மனிதர்களை ஆட்டிப் படைக்கிறது. இந்தக் கற்பனையான பேயை விரட்டுவதாகச் சொல்லி பிழைப்பு நடத்து கின்றவர்கள். சமூகத்தில் இவற்றை போலியான பிரம்மையை ஏற்படுத்தி பிறரை பயமுறுத்தி வருகின்றனர். இவர்களுக்கு சரியான சாட்டையடி கொடுக்கும் நோக்கில் மக்களிடயே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நன்நோக்கில் இந்த தொடர் வெளிவர உள்ளது. தொடராக வெளிவர உள்ள இவற்றை தைரியமாக நீங்கள் வாசிக்கலாம்.

நடுநிசி இரவு 12.30 மணி சிறுநீர் கழிக்க போகவேண்டும். தூக்கம் கண்களில் நிறைந்தபடியே முழு நினைவு வருமுன்பாகவே எழுந்து வீட்டுப் பின்புறக் கதவைத் திறந்து கொண்டு நடந்தான் அவன். வீட்டு பாத் ரூம் வீட்டுப்பின்பகுதியில் குட்டையான மதில்சுவற்றை ஒட்டியுள்ளது. அதன் வெளிப்புறப்பகுதி முழுதும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அடர்ந்த கருவேலன்காடு. ஜில்லென்ற காற்று மட்டும் தேகத்தை வந்து தீண்டிக்கொண்டிருந்தன. எதையும் உணராதவனாக தூக்கக் கரக்கத்திலேயே பாத் ரூமுக்கு சென்று விட்டு வெளியே வந்தபோது...