Showing posts with label கவிதைத் துளிகள். Show all posts
Showing posts with label கவிதைத் துளிகள். Show all posts

Wednesday, April 30, 2014

யாசர் அரபாத் அவர்களின் கவிதைத் துளிகள் (படத்துடன்)

இப்போதும்
இல்லையெனில் – பின்
எப்போது…

எனையறியாமல்
முட்டி நிற்கும் கண்ணீர்
சுவனத்தைத்
தட்டி திறக்கும்
சாவியாகட்டும்!!



மனதை திற
மணம் கமழ…

தன் விழி
நோக்கிய மாத்திரத்தில்;
உள்ளத்தைப் படிக்கவேண்டுமென
விரும்புபவர் – மனைவியை
முதலில் படித்திருக்க வேண்டும்!!


உணர்வு உணரும்…

ஆறுதல் என்பதை
வார்த்தைகளால்
அலங்கரிக்க முடியாது!!



புரிந்தவருக்கு மட்டும்;
உங்களுக்கு விளங்காது…

மருத்துவரின்
கணிப்புகள்
கானல்நீராக வேண்டி;
இறந்தப்பின்னும்
எழுந்துவிடுவான் எனும்
நம்பிக்கையிலே தாய்!!