Saturday, April 9, 2016

வாழ்வில்

வாழ்வில்
எல்லா நிலைகளிலும்
வரும் துன்பங்களின்
வலி பொறுத்தவனே
பிறர் வாழ்வதற்கான
வழிக்காட்டும்....
தகுதியினையடைகின்றான்
இருந்தும்.......
அகவலியின் வேதனைகளை
தம் முகப்புன்னகைத்
தலைப்போரம்
மறைத்து......
சரி செய்து கொள்கின்றான்!...
----------------------------


உனது துன்பங்களை
அக்கரையோடு
கேட்பவர்கள்
அனைவருமே
அனுதாபத்தோடு
கேட்பவர்கள் என்று நினைத்து
எல்லாவற்றையும்
உளறிக் கொட்டாதே
முகத்துக்கு முன்
அனுதாபியாகவும்
முன் விட்டுப் பின்
ஆனந்தமடைபவர்களும்
நம்மில் சிலர் உண்டு!...
---------------------------------------

சிந்தித்து உணராத
தன்மையுள்ளவர்களிடம்
பேசிப் புரியவைக்கும்
முயற்ச்சியில் இறங்கி
உன் நேரங்களை
வீணடித்து விடாதே
அது சிலநேரம்
உன்னையே அறிவீனர்கள்
பட்டியலில் சேர்ப்பித்து விட
காரணமாகி விடும்.!!
------------------------

தமிழ் பிரியன் நசீர்

No comments: