அமைந்தகரை சந்தையின் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தேன், யாரோ என் வேட்டியை இழுத்தது போல உணர்வு, திரும்பிப் பார்த்த போது கிழிஞ்சல் ஆடைகளோடு சுமார் 90 வயது மதிக்கத்தக்க எலுமிச்சை வியாபாரம் செய்யும் பாட்டி
"பாய் தம்பி எலுமிச்சம்பழம் வேணுமாய்யா" என்ற ஏக்கமான குரலை கேட்டவுடன் அருகிலேயே அமர்ந்து விட்டேன்,
ஏன் பாட்டி இன்னமும் வியாபாரம் முடியலயா?
"இல்லய்யா. நாங்கலாம் அன்னன்னைக்கு காலைல கடனுக்கு வாங்கி கடை போடுவோம். ஆயிரம் ரூபாய்க்கு குறையாமல் விக்கும். கடனும் வட்டியும் கொடுத்துட்டு வீட்டுக்கு அரிசி பருப்பு வாங்கிக்குவோம். இப்பலாம் வாங்கனது எதுவுமே விக்க மாட்டேங்குது. யாரும் இங்க வர மாட்றாங்க. என் வயசுக்கு வீட்டு வேலைலாம் செய்ய முடியாததால சாக்குல கடை போட்ருக்கேன். " என கூறி முடிக்கும் முன்பே கண்கள் கலங்கியது
Tuesday, November 29, 2016
Sunday, November 27, 2016
ஃபிடல் காஸ்ட்ரோ குறித்த தலைவர் கலைஞரின் கவிதை :
உயிரோடிருக்கும் உலகத் தலைவர்கள் வரிசையில்
உங்களைக் கவர்ந்த ஒருவரின் பெயரைக் கூறுக என்றார்;
உயிரோடிருப்பவர் மட்டுமல்ல; என் உயிரோடும் மூச்சோடும் கலந்துள்ள
ஒரு தலைவர் உண்டு; அவர் தான் பிடல் காஸ்ட்ரோ என்றேன்.
இளம்பிராயத்திலேயே அவர் எழுச்சி முரசு! புரட்சிக் கனல்!
இனங்கண்டு எதிரிகளை வீழ்த்திக் காட்டும் மூளைக்குச் சொந்தக்காரர்!
இருளில் சர்வாதிகாரியாகவும், வெளிச்சத்தில் ஜனநாயகவாதியாகவும்
இரட்டை வேட அரசியல் நடத்திய 'பாடிஸ்டா' எனும் பசுத்தோல் வேங்கை;
அந்த விலங்கின் வேஷத்தைக் கலைக்கத் துணிந்து; அதற்கோர்
அணியைத் தயாரித்துப் போரிட்டுத் தோல்வியுற்று; சிறைப்பட்டு;
நீதி மன்றத்தில் நிறுத்தப்பட்ட போது தான்
"வரலாறு என்னை விடுதலை செய்யும்" எனும்
வைர வரிகளைச் சரித்திரப் புத்தகத்தில்
வையம் புகழ் சித்திரமாகப் பதிய வைத்தார்; காஸ்ட்ரோ!
பாடிஸ்டா ஆட்சியில் பிடலுக்கு பதினைந்தாண்டு சிறை என்றதும் -
பற்றி யெரிந்த மக்களின் புரட்சி நெருப்புக்கு;
ஈடு கொடுக்க முடியாமல் இரண்டே ஆண்டுகளில்
சிறைக் கதவு திறந்தது, சிங்கம் வெளியே வந்தது - அந்த
சிங்கத்துக்கோர் சிறுத்தை துணை சேர்ந்தது; அதன் பெயர்தான் சேகுவேரா!
தங்கத் தம்பியாம் ராவ் காஸ்ட்ரோவையும், தம்பி போன்ற சேகுவேராவையும்,
அங்கம் வகிக்கச் செய்து ஆர்த்தெழுந்து போரிட்டு முன்னேறவே;
பங்கமுற்ற பாடிஸ்டா பயந்து நடுங்கி - இனி
கியூபா மக்களிடம் தன் சேட்டைகள் செல்லாதென்று
நீயும் வா என்று ஆணவத்தையும் அழைத்துக் கொண்டு;
நாட்டை விட்டே ஓடி விட்டான்; நல்லாட்சி மலர வழி விட்டு!
கேட்டைக் களைந்தெறிந்த காஸ்ட்ரோ; தலைமை வழி காட்டியானார்!
கடமையும் பொறுப்பும் வந்தவுடன்
கடந்த காலத்தை மறந்து விடாமல்;
சோதனைகளை சந்தித்து மறைந்த
ஜோஷ் மார்ட்டியின் தலைமைக்கும்,
சாதனைகள் புரிந்து மறைந்த
சிபாசின் வழிகாட்டுதலுக்கும்,
மதிப்பும் மரியாதையும் அளித்திட
மறக்காத மாவீரர் தான் பிடல் காஸ்ட்ரோ!
'கியூபா' சின்னஞ் சிறிய நாடு
என் எழுத்தும் முகமது அலி அண்ணனும் பின்னே ஞானும் ....!
ஒரு சில வருடங்களுக்கு முன்னர் முகநூலில் இணைந்து கவிகள் புனைய ஆரம்பித்த காலத்தில் இரண்டு மூன்று வரிகளில் எழுதி ' செந்தமிழும் நா பழக்கம் ' என்பதற்கிணங்க குறும்பாக்களை எழுதி வந்தேன். அண்ணன் முகமது அலிMohamed Ali நீடூர் அவர்கள் எனது படைப்புகளை இனம்கண்டு மேலும் சீரியதாக பெரிதாக தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதுதற்கு அவர்கள் தந்த ஆக்கத்திலும் ஊக்கத்திலும் கொஞ்சம் பெரிதாக எழுத என்னை நானே பழக்கிக் கொண்டேன்.
எனது குறும்பாக்களை தொகுத்து அவர்களது வலைத்தளத்தில் பகிர்ந்து எனக்கு மிகவும் வியப்பையும் நன்றியுணர்வையும் தந்தது.
அன்றுமுதல் நானும் எழுதிவர அவர்களும் ஆதரவு தந்து அழகு பார்க்கும் அன்பை நேசிக்கும் தம்பிகளில் ஒருவன்
எனது குறும்பாக்களை தொகுத்து அவர்களது வலைத்தளத்தில் பகிர்ந்து எனக்கு மிகவும் வியப்பையும் நன்றியுணர்வையும் தந்தது.
அன்றுமுதல் நானும் எழுதிவர அவர்களும் ஆதரவு தந்து அழகு பார்க்கும் அன்பை நேசிக்கும் தம்பிகளில் ஒருவன்
ராஜா வாவுபிள்ளை
ராஜா வாவுப்பிள்ளைThursday, November 24, 2016
விடியல் வேண்டும் ....!
விடியல் வேண்டும் ....!
சரித்திரம் திரும்பட்டும்சாதிக் கொடுமைகள் திரும்பவே கூடாது
நாகரீகம் முன்னேறலாம்
பின்னேறி பிரிவினைக்கு வழிவகுக்கலாமோ
உயர்வு தாழ்வில்லை பிறப்பில்
ஏனிந்த கொடுமை சாதீயில்
வாக்குகள் பெற்றதால்
வானரங்கள் வானைத்தொட்டிட முடியுமோ
உழைப்பாளிகளுக்குமரியாதை
பணம் செல்லாது என்ற கவலையோ
பேங்க் வாசல்ல நிக்கணுமே என்ற கவலையோ இல்லாமல் தேனீக்களைப்போல் சுறுசுறுப்பாக
இயங்கிக் கொண்டிருக்கும் பத்திருபது பேரை இன்று எங்கள் வீட்டு முற்றத்தில் பார்த்தேன்.
அத்தனை பேரும் ராஜஸ்தானிகள்.
புதிய டிரான்ஸ்பார்மருக்கு புதிய மின் கம்பிகளை இணைக்கும் வேலையை அநாயசயமாக செய்து கொண்டிருந்தார்கள்.
அவர்களிடம் சோர்வில்லை.
முகத்தில் வருத்தமில்லை.
வேலையில் சுணக்கமில்லை.
பெரிய மின் கர்பிகளை வெறும் கைகளால் இழுத்து முறுக்கி இணைத்துக் கொண்டிருந்தார்கள்.
ஒரு பத்து நிமிஷம் அந்த வேலையை நாம் செய்தால் நம் கைகள் கிழிந்து
ரத்தம் கொட்டும்.
பேங்க் வாசல்ல நிக்கணுமே என்ற கவலையோ இல்லாமல் தேனீக்களைப்போல் சுறுசுறுப்பாக
இயங்கிக் கொண்டிருக்கும் பத்திருபது பேரை இன்று எங்கள் வீட்டு முற்றத்தில் பார்த்தேன்.
அத்தனை பேரும் ராஜஸ்தானிகள்.
புதிய டிரான்ஸ்பார்மருக்கு புதிய மின் கம்பிகளை இணைக்கும் வேலையை அநாயசயமாக செய்து கொண்டிருந்தார்கள்.
அவர்களிடம் சோர்வில்லை.
முகத்தில் வருத்தமில்லை.
வேலையில் சுணக்கமில்லை.
பெரிய மின் கர்பிகளை வெறும் கைகளால் இழுத்து முறுக்கி இணைத்துக் கொண்டிருந்தார்கள்.
ஒரு பத்து நிமிஷம் அந்த வேலையை நாம் செய்தால் நம் கைகள் கிழிந்து
ரத்தம் கொட்டும்.
நலமாக இருக்கிறாயா அம்மா
நலமாக இருக்கிறாயா
அம்மா
ஆறும்
ஆறுக்கு வந்த ஆறும்
பெற்றெடுத்தப் பதினாறும்
உன்னை
முதியோர் இல்லத்திற்கு
அனுப்பவில்லை
நீ இருக்கும் இடத்தையே
முதியவள் இல்லமாய்
மாற்றிவிட்டு
வெளிநாடுகளுக்குப் பறந்துவிட்டன
நலமாக இருக்கிறாயா
அம்மா
அம்மா
ஆறும்
ஆறுக்கு வந்த ஆறும்
பெற்றெடுத்தப் பதினாறும்
உன்னை
முதியோர் இல்லத்திற்கு
அனுப்பவில்லை
நீ இருக்கும் இடத்தையே
முதியவள் இல்லமாய்
மாற்றிவிட்டு
வெளிநாடுகளுக்குப் பறந்துவிட்டன
நலமாக இருக்கிறாயா
அம்மா
Monday, November 21, 2016
ஆயிரம், ஐநூறு செல்லாது என அறிவிக்கப்பட்ட அன்று .
Priya Thambi
November 14 at 5:39pm ·
ஆயிரம், ஐநூறு செல்லாது என அறிவிக்கப்பட்ட அன்று என்னிடம் செல்லும் நோட்டுக்குள் 316 ரூபாயும், செல்லாத சில ஆயிரங்களும் இருந்தன. இரண்டு நாட்களில் தான் சரியாகி விடுமே அதுவரை டெபிட் கார்டில் பார்த்துக் கொள்ளலாம் என சாதாரணமாக எடுத்துக் கொண்டேன்.
மறுநாளில் இருந்து எங்கும், எப்போதும் கார்டு. பிக் பாஸ்கெட் ஆன்லைன் ஆப்பில் தான் கடந்த சில மாதங்களாக மளிகை, பழங்கள் வாங்குகிறேன். கையில் பணம் இல்லாததால் இந்த முறை காய்கறியும். ஆன்லைனில் மொத்தமாக வாங்கினால் பிரச்னை இல்லை. ஆனால் ஒவ்வொன்றாக வாங்கும்போது ஒவ்வொரு முறையும் டெலிவரி சார்ஜ் தனியாகத் தந்தாக வேண்டும். கூடவே மினிமம் அளவு என ஒன்றை வைத்திருக்கிறார்கள். ஆகவே எனக்குத் தேவையானதைத் தவிரவும் அதிகம் வாங்க வேண்டியதாயிற்று.
இன்று மின்னுவுக்கு பள்ளியில் ‘pot painting'. ஒரு பானை வாங்குவதற்காக சனிக்கிழமை ரங்கராஜபுரத்தில் ஒரு கடைக்கு சென்றோம். பானையின் விலை எழுபது ரூபாய். என் கையில் இருக்கும் நூற்று சொச்சத்தை தர பயமாக இருந்தது. குறைந்தது ஐநூறு ரூபாய்க்கு வாங்கினால் கார்டு எடுத்துக் கொள்வதாக கடைக்காரர் சொன்னார். ‘’அந்த பானையில நாலு, இந்த விளக்குல இரண்டு, அந்த சட்டி என்னா விலை’’ என 590 ரூபாய்க்கு மண் பொருட்கள் வாங்கினேன்.
பானையில் அடிக்க பெயிண்ட் வாங்க வேண்டும். ஃபேப்ரிக் பெயின் பத்து இணைந்த பாக்ஸ் 190 ரூபாய்.. ‘’மினிமம் 300 ரூபாய்க்கு வாங்கினா தான் கார்டு எடுப்போம்’’.. ‘’இரண்டு பிரஷ், ஒரு பென், ஒரு பேட்’’ என நானூறு ரூபாயை இழுத்து வைத்தேன். இதேபோல் எங்கும், எங்கும் ‘’கார்டு எடுத்துப்பீங்களா?’’ என்கிற கேள்வியோடு செலவை இழுத்துக் கொண்டே இருக்கிறேன். ஒரு காஃபிக்கு கார்டு எப்படி எடுத்துப்பாங்க, வயிற்றில் இடம் இருக்கோ இல்லியோ... குறைந்தது இருநூறு, முந்நூறு ரூபாய்க்கு சாப்பிடு.... இப்படியாக...
Subscribe to:
Comments (Atom)

