Wednesday, July 8, 2020

மகன் இறந்த பின் நல்லடக்கம் முடித்த கோவை ரஹ்மத்துல்லா விடுத்த வேண்டுகோள்

அஹ்ஸன் நல்லடக்கத்திற்கு பிறகு தந்தை கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்களின் உள்ளத்தை நொறுக்கும், உருக்கமான சிற்றுரை!
ஆமீன். மனம் மிகுந்த வேதனை தருகிறது. தந்தையின் குரலைக் கேட்க. உம்ரா நிகழ்வு மனதைத் தொட கண்களில் நீர் வழிகிறது. அல்லாஹ் அவருக்கு சுவனத்தை தந்தருள்வானாக. ஆமீன்

 பள்ளி விடுமுறை என்பதால் உங்கள் குழந்தைகளை கவனமாக பார்த்து கொள்ளுங்கள். இது போன்று குழந்தைகளின் அறியாமையால் பெரும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

 சகோதரர் கோவை ரஹ்மத்துல்லாஹ்வின் மகன் அஹ்சனின் இறப்பு நிகழ்ந்தது எப்படி?

மாடியில் உலர வைத்த பூண்டை எடுக்கச் சென்ற சிறுவன் அஹ்சன்.

கீழே சில சிறுவர்கள் பட்டம் விட்டுக்கொண்டிருக்க மின் கம்பியில் சிக்கியுள்ளது. மேலே அஹ்ஸனை கண்டவுடன் கீழே இருந்த சிறுவர்கள் அஹ்ஸனை அழைத்து பட்டத்தை எடுத்து தர கேட்டுள்ளார்கள்.

அறியாமையில் கீழே கிடந்த சென்டிரிங் கம்பியை வைத்து எடுக்க முயற்சி செய்துள்ளான் அஹ்ஸன், கம்பி உயர் மின் அழுத்த மின் கம்பியின் மீது பட்ட அடுத்த கனமே மின்சாரம் பாய்ந்து உயிர் இழந்து விட்டான். 



No comments: