Saturday, February 29, 2020

குடியுரிமை திருத்த சட்டம் என்து சட்டம் அல்ல; அது மக்களை தனிமைப்படுத்தும் திட்டம் என்று இயக்குனர் வெற்றிமாறன் பரபரப்பான பேட்டி அளித்துள்ளார்.

குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. டெல்லியில் குடியுரிமை சட்ட ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களிடையே நடந்த மோதலில்  42 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்த நிலையில், இயக்குனர் வெற்றிமாறன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது-

டெல்லி கலவரம் தொடர்பாக மேலும் அறிய வேண்டிய செய்திகள் ....

இஸ்லாம் பற்றி மிகவும் தவறாக செய்திகளை பரப்பப்படுகின்றன,


இஸ்லாம் பற்றி மிகவும் தவறாக செய்திகளை பரப்பப்படுகின்றன,அதே நேரத்தில் நமது சமுதாயத்திற்கு தீங்கு ஏற்படும் விதத்தில் செயல் படுகின்றனர். அதிலும் மிகவும் குறிப்பாக மேற்கத்திய நாடுகள் மற்றும் அதனைச் சார்ந்த ஊடகங்கள் இதில் தொடர்ந்து ஈடுபடுகின்றன.ஆனால் அவைகளின் பொய் பிரசாரங்களை மக்கள் நம்புவதாக இல்லை. இஸ்லாம் பற்றிய உண்மையை தெரிந்து கொள்ள முயற்சிக்கும் மக்கள் இதனால் அதிகமாகியே வருகின்றனர். இதையும் மீறி இஸ்லாம் வளர்ந்து வருகிறது. நாம் உலகின் அனைத்து பகுதிகளில் இருந்து மக்கள் மனதில் இந்த தவறான பொய் பிரசாரங்களை உடைத்தெரிந்து இஸ்லாம் பற்றிய உயர்ந்த உண்மையை பகிர்ந்து கொள்ள ஒரு நாட்டம் மேற்கொள்ளவேண்டும்



“இஸ்லாமிய நண்பர்கள் யாராவது எனக்கு அராபிய நாட்டில் குடியுரிமை வாங்கி தர முடியுமா?”/


இஸ்லாமிய நண்பர்கள் யாராவது எனக்கு அராபிய நாட்டில் குடியுரிமை வாங்கி தர முடியுமா?”// என்று செல்வம் யாதவ் என்ற ஒரு நண்பர் கிண்டலாக முகநூலில் ஒரு பதிவிட்டிருந்தார்.

நண்பரே ! நான் பஹ்ரைன் நாட்டில் கடந்த42 ஆண்டுகளாக வசித்து வருபவன், உங்களுடைய இந்த கேள்விக்கு நான் வசிக்கும் இந்த இஸ்லாமிய நாட்டை வைத்து உங்களுக்கு உதாரணம் காட்ட முடியும். நான் சொல்வது உண்மையா இல்லையா என்பதை இங்கு வசிக்கும் என் தொப்புள் கொடி உறவுகள் அனைவரும் சாட்சி கூறுவார்கள்.

பஹ்ரைன் நாட்டு பிரஜைகளாக மாறிய எண்ணற்ற இந்து சகோதரர்களை இங்கு நாம் காண முடியும். அரபு நாட்டவர் 15 ஆண்டுகள், மற்றும் அரபு மொழியை தாய்மொழியாக கொள்ளாதவர்கள் 25 ஆண்டுகாலம் இங்கு வசித்தால் குடியுரிமைக்காக விண்ணப்பிக்கலாம்.

Libya: A rally for hope | Al Jazeera World

Delhi Violence: அதிர்ச்சியிலிருந்து மீளாத இந்து குடும்பங்கள்

‘Muslims And Hindus Are All Living In Fear’ | Repoters Project

Mr. Sivarajah Ramanathan - Founder of Nativelead Foundation in Paesum T...

தமிழ்த் தாத்தா சாலமன் பாப்பையாவின் கதை | Famous Pattimandram Solomon Pap...

Kathaiyalla Varalaru: டொனால்ட் டிரம்பின் கதை | Donald Trump

உடனடியாக UnInstall செய்ய வேண்டிய APP லிஸ்ட்..! இந்திய அரசியலின் முதல் DEEPFAKE வீடியோ..!Cyber Thirai

Thursday, February 27, 2020

கவலைப்படாதீர்கள்!

*அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின்பெயரால்...*
———————————————-
*தளர்ந்து விடாதீர்கள்! கவலைப்படாதீர்கள்! நம்பிக்கை கொண்டிருந்தால் நீங்களே உயர்ந்தவர்கள்*

وَلَا تَهِنُوا وَلَا تَحْزَنُوا وَأَنْتُمُ الْأَعْلَوْنَ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ

*So do not lose heart, nor fall into despair, for you must gain mastery if you are true in faith.*

(3. *Aal-E-Imran,* Ayah 139)

Wednesday, February 26, 2020

Easy Custard pudding Recipe கஸ்டர்ட் புடிங்

ஆங்கில அடிப்படை இலக்கணம்

அருமையான கருத்துக்கள் கொண்ட பாடல்

" மக்களே .. நல்லதாயிட்டு ஒரு பாட்டுப் பாடணும். நான் அதை பேஸ்புக்கில் போடணும் .. " என்று சொன்னேன்./

Abu Haashima










திருவனந்தபுரம் தலைமைச் செயலகத்தின் முன்னால
25 நாட்களாக CAA , NRC, NPR சட்டங்களுக்கு எதிராக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.
கல்லூரி மாணவ மாணவிகள்
பெற்றோர்கள்
மூத்த குடிமக்கள்
அரசு அலுவலர்கள்
தொழிலாளர்கள்
சமூக ஆர்வலர்கள்
மூதாட்டிகள்
குழந்தைகளென எல்லோருமே வந்து
கலந்து கொள்ளக் கூடிய
ஒரு 24 மணிநேர இடைவெளியே இல்லாத அமைதிப் போராட்டமாக நடைபெற்று வருகிறது.
இன்று நானும் சிறிது நேரம் அவர்களோடு அந்த போராட்டத்தில்
கலந்து கொண்டேன்.

Tuesday, February 25, 2020

நதியாய் நகர்கின்றேன்...

நதியாய் நகர்கின்றேன்...
வாழ்க்கை காட்டும் பாதை தனில் !

இயல்பை மறந்தே அலைகின்றேன் ...
எளிதான பாதை எங்குள்ளதென்று !

பாறைதாண்டி பாதாளத்தில் குதித்து
நிலம் தனில் வீழ்ந்து
நீளமாய் நீண்டு
நிம்மதியை தேடியே நித்தமும் அலைகின்றேன்!

என்னுள் கனத்த சிலவற்றை
அடியில் தள்ளி ஆழத்தில் புதைத்து...
சருகுகள் பலவற்றை கரையோரம் தேக்கி என்
களங்கங்கள் நீக்கி
கரைபுரண்டு ஓடுகின்றேன்.. நான்
கரை தாண்டியே ஓடுகின்றேன்...

அமெரிக்க அதிபர் பற்றிய அசர வைக்கும் தகவல்கள்..! | Facts About Donald Tru...

உளி(Uli) - short film

தமிழின் பெருமை..... பன்னிருதிருமுறைகளின் மகிமை..

Kathaiyalla Varalaru: டொனால்ட் டிரம்பின் கதை | Donald Trump

Sunday, February 23, 2020

உமர்_முஃக்தார்

by.Saif Saif
1912 ல் இத்தாலி லிபியாவைதுருக்கியிடமிருந்து
கைப்பற்றியது.

இத்தாலி ராணுவம் லிபியா மக்களை கொடுமை படுத்துவதை
கண்டு பதைபதைத்து கொதித்தெளுந்தார்
அவர்..

இத்தாலியர்களை லிபியாவில் இருந்து அகற்றவேண்டும் என்று ஒரு பெரும் படையை அமைக்க துவங்கினார்.. அப்போது அவருக்கு வயதோ 60..

லிபியா விடுதலைக்கு உக்கிரமாக போராடியவர், இத்தாலி இராணுவத்திற்கு ஒரு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர்.

கிட்டத்தட்ட 20
ஆண்டுகள் இத்தாலிய அடக்குமுறைக்கு எதிராக கொரில்லா போர் முதல் கொண்டு அனைத்து உத்திகளையும் கையாண்டு போரிட்டு வந்தவர் அவர்..

பெயர் கேட்டாலே லிபியா மக்கள் சிலிர்த்துப் போகின்ற அவர் வேறு யாருமல்ல..

#பாலைவன_சிங்கம் என்று அழைக்கப்படும்
#உமர்_முஃக்தார் தான்..

வஉசி வரலாறு

மருதநாயகம்

மருத நாயகம் -கான் சாஹிப் வரலாறு .

மருத நாயகம் -கான் சாஹிப் வரலாறு .
பட உதவி வலையுகம் ஹைதர் அலி
                                                        வஉசி தொலைக்காட்சி
முகமது யூசுப் கான் என்றழைக்கப்பட்ட மருதநாயகம் ஆர்க்காட்டு படைகளில் போர் வீரராகவும் பிற்காலத்தில் கிழக்கிந்திய படைகளுக்கு படைத்தலைவராகவும் விளங்கினார். 1725 ஆம் ஆண்டு இராமநாதபுரம் மாவட்டம் பனையூரில் பிறந்தார்.][1] ஆங்கிலேயரும் ஆர்க்காட்டு நவாப்புகளும் தமது எதிரிகளான தமிழகத்தினைச்சேர்ந்த பாளையக்காரர்களுக்கு எதிராக மருதநாயகத்தினை போரில் ஈடுபடச்செய்தனர். பிற்காலங்களில் மதுரை நாயக்கர்களின் ஆட்சி முடிவடையும் காலகட்டத்தில் மதுரையை ஆளும் அதிகாரத்தினை ஆங்கிலேயர் இவருக்கு அளித்தனர். தம் வாழ்நாளின் இறுதியில் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியாளர்களுக்கு எதிராக செயல்பட்டார். அக்டோபர் 15, 1764 ஆம் ஆண்டில் மதுரை சம்மட்டிபுரம் பகுதியில் ஆங்கிலேயர்களால் தூக்கிலிப்பட்டார் முகமது யூசூப் கான்.

இளமை தொகு

Saturday, February 22, 2020

From Xi'an to Mecca : The Road to Hajj - China |



Al Jazeera English
In a series of programmes, Al Jazeera follows Muslim pilgrims from around the world as they prepare to undertake the Hajj pilgrimage.

The ancient Chinese city of Xi'an is home to the famous terracotta army and was at the very centre of Chinese civilisation during the Tang dynasty from 618 to 907.

It is also home to about 60,000 ethnic Chinese Muslims and boasts 1,300 years of Islamic history.

Proud of their Islamic heritage and their country's traditions, the Muslims of Xi'an have merged their own ancient Chinese culture with Islam, remaining faithful to the central tenets of their religion.

'Lifetime's responsibility'

Forty-six-year-old Ma Yi Ping is well-known within Xi'an's Muslim community.

''கூடைக்குள் என்ன இருக்கிறது? டன் கணக்கில் பொன் 🕵


முல்லா வசித்து வந்த நாட்டிற்கு பக்கத்து நாடு ஒன்றிற்கு கோழி முட்டைகளை எடுத்துச்செல்வது தடை செய்யப்பட்டிருந்தது, இதை மீறுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டனர். இதனால் அந்த நாட்டில் கோழி முட்டைகளுக்கு நல்ல விலை கிடைத்து வந்தது.

இதனை நன்கு பயன்படுத்திக் கொண்ட முல்லா, அந்த நாட்டின் காவலர்களுக்கு தெரியாமல், கோழிமுட்டைகளை எடுத்துச் சென்று, விற்பனை செய்து, நல்ல லாபம் அடைந்து வந்தார்.

ஒரு நாள் இப்படி வழக்கம்போல முட்டைகளை அவர் எடுத்துச் சென்ற போது, அந்நாட்டு காவலர்கள் அவரைப் பார்த்து விட்டார்கள். உடனே முல்லாவை அழைத்து,

''கூடைக்குள் என்ன இருக்கிறது? எனக் கேட்க, ''கோழிக்குஞ்சுகள் இருக்கின்றன'' என முல்லா பதிலளிக்க, அதற்கு அந்த காவலர்கள், "முட்டைகளுக்குத்தான் தடை கோழிக்குஞ்சுகளை தாராளமாக கொண்டு போகலாம், இருப்பினும் எங்கள் மேலதிகாரி வந்ததும் அவரிடம் சொல்லிவிட்டு செல்லுங்கள்" என முல்லாவை நிற்க வைத்தனர்!

நம்பிக்கையூட்டுங்கள்; அச்சுருத்தாதீர்!

யூசுஃப்..! சுலைஹா

யூசுஃப்..!

கனவுகள் வழி பொங்கியெழும்
ஆன்மாவின் சங்கேத முடிச்சுகளை
மலர்களுக்கும் நோகாமல் கொய்ந்தெடுக்கும்
முழுநிலவின் மென்சுடர் சூழ்ந்தவன் நான்

தகிக்கும் சூரியனும்
மின்னும் பதினொரு நட்சத்திரங்களும் தாள்படிந்து பணிய
தன்னடக்கத்தை மேலாடையாக அணிந்து
மென் நடை பயிலும்
மேலோனின் நம்பிக்கைக்குரிய அடிமை நான்

கோழியிறகையே பார்த்துக் கொண்டிருந்தார் சூஃபி / நிஷா மன்சூர்


கோழியிறகையே
பார்த்துக் கொண்டிருந்தார் சூஃபி
அது கோழியொன்றை வரைகிறது...
கோழிகளின் கொக்கரிப்பு
திசையெங்கும் நிறைகின்றன
கோழிகளைப் பிடிக்கப்
பூனைகளின் கண்கள் நெருங்கிவர
சம்பந்தமில்லாமல்
எலிகள் ஏனோ ஓடித் திரிகின்றன...

மதமா இல்லை மொழியா! / Vavar F Habibullah


உலகில் தாய் மொழிக்காக
உயிர் கொடுத்த ஒரு இனம்
உண்டு என்றால் அது நமது
பக்கத்து நாடு, பெங்காளி
மொழி பேசும் பங்களாதேஷ்
மக்களையேச் சாரும்.

1947 ம் ஆண்டு
ஒன்றிணைந்த இந்திய தேசம்
அன்றைய நமது தேசபக்தர்களால்
இந்தியா, மேற்கு பாகிஸ்தான்,
கிழக்கு பாகிஸ்தான் என பிளவு
பட்ட போது....

தாயைத் தந்து மொழியையும் தந்தவன் இறைவனல்லவா !

Abu Haashima
எனக்கொரு தாயைத் தந்து
மொழியையும் தந்தவன்
இறைவனல்லவா !
அவன் தந்த தமிழால்
அவனை வாழ்த்துவது
என் தமிழுக்கு அழகல்லவா !

இறைவா ...
யா அல்லாஹ் !

மகாக் கவிஞன்
நீதான் !

மனிதர்கள்
கவிதை எழுதினால்
சிலருக்கு
சிரிப்பு வரும்
பலருக்கு
அழுகை வரும்
இதுவெல்லாம்
கவிதையா என்று
தர்க்கம் வரும் !

Sunday, February 16, 2020

முஸ்லிம் பிரதிநிதிகள் முதலமைச்சர் உடன் சந்திப்பு - சந்திப்பு குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி!

SDPI மாநில தலைவர் நெல்லை முபாரக், தேசிய துணை தலைவர் தெஹலான் பாகவி தலைமையிலான முஸ்லிம் பிரதிநிதிகள் முதலமைச்சர் உடன் சந்திப்பு - சந்திப்பு குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி!
https://www.facebook.com/

அபுதாபியில் நடந்த ஓட்டப் போட்டியில் முதல் இடம் பெற்ற தமிழர்



அபுதாபி : அபுதாபியில் அக்ட்வெட் டாக் ரன் என்ற ஓட்டப்போட்டி கடந்த 
10.02.2020 அன்று நடைபெற்றது.
இந்த ஓட்டப்போட்டியில் தமிழகத்தின் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த
செய்யது அலி என்ற இளைஞர் முதல் இடத்தை பெற்றார்.
இவர் 5 கிலோ மீட்டர் போட்டியில் முதல் இடத்தை பெற்றார்.
அவருக்கு விளையாட்டு கவுன்சில் அதிகாரி பதக்கம் வழங்கி கவுரவித்தார்.
இந்த ஓட்டப் போட்டியில் 300-க்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர்.
முதல் இடத்தை பெற்ற செய்யது அலிக்கு பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள்
வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
--
முதுவை ஹிதாயத்

Saturday, February 15, 2020

Mohamed Ali Jinnah / S.E.A. முஹம்மது அலி ஜின்னா



Mohamed Ali Jinnah
S.E.A. முஹம்மது அலி ஜின்னா

S.E.A.Mohamed Ali (Jinnah)B.A.,B.L., (nidurali) Nidur.
Indeed all the praises are due to Allah, we praise him and we seek his assistance and forgiveness, and we seek refuge in Allah. Personal Links *
please visit:

seasonsnidur -- சீசன்ஸ் நீடூர் * SEASONSNIDUR.wordpress.com/category/english-article/ * seasonsnidursite
S.E.A. முஹம்மது அலி ஜின்னா Jazakkallahu Hairan நன்றிS.E.A.MOHAMED ALI JINNAH

Anti-CAA Protest: Vannarapettai is another Shaheen Bagh? | மற்றொரு ஷாஹீன்பாக்கா வண்ணாரப்பேட்டை? |

ட்விட்டரைக் கலக்கும் ‘வீதிக்கு வாங்க ரஜினி’!


வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் காவல்துறையினரால் தாக்கப்பட்ட நிலையில் தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்நிலையில் சமூகவலைதளவாசிகள் ரஜினியை வீதிக்கு வாருங்கள் என அழைத்து வருகின்றனர்.

இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டு அரசியலில் உயிர்ப்பித்திருக்கும் கேள்வி ரஜினி எப்போது அரசியலுக்கு வருவார் என்பதுதான். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், கருணாநிதி முதுமை காரணமாக தீவிர அரசியலில் ஒதுங்கிய நிலையில் 2017ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி அரசியலுக்கு வருவது உறுதி என்றும், போர் வரும்போது வருவேன் என்றும் ரஜினி கூறினார்.

2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கட்சி தொடங்கி போட்டியிடுவதாக அறிவித்தார். தமிழ்நாட்டு மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களைக் காத்துக்கொள்ள எத்தனை எத்தனையோ போராட்டங்களை தினமும் முன்னெடுத்துவரும் போது வராத ரஜினி 2021 தேர்தலில் போட்டியிடத்தான் வீதிக்கு வருவாரா என்று சமூக வலைதளங்களில் சாமானிய மக்கள் கேள்வி கேட்கத் தொடங்கினர்.

வீதிக்கு வாங்க ரஜினி ................... மனுஷ்ய புத்திரன்

....................
வீதிக்கு வாங்க ரஜினி
முதல் ஆளாக இல்லாவிட்டாலும்
கடைசி ஆளாகவாவது.
நீங்கள் காணாமல் போய்விட்டீர்கள் என்றும்
கடத்தப்பட்டு விட்டீர்கள் என்றும்
தலைமறைவாகிவிட்டீர்கள் என்றும்
ஊடகங்கள் விவாதிக்கத் தொடங்கிவிட்டன
இன்னும் நீங்கள்
அமைதியாக இருப்பது நல்லதல்ல

வீதிக்கு வாங்க ரஜினி
வெய்யில் குறைந்து
அந்தி சாய்ந்துவிட்டது
மாலை நடை மூப்புக்கு நல்லது
கடல் காற்று சுவாசத்திற்கு நல்லது
சாலையோர தேநீர் கடையில்
இஞ்சி டீ தலை சுற்றலுக்கு நல்லது

‘வண்ணாரப்பேட்டை வன்முறைக்கு காரணமான காவல் அதிகாரியை பணியிடை நீக்கம் செய்...

சென்னை வண்ணாரப்பேட்டையில் சி.ஏ.ஏ.-விற்கு எதிரான போராட்டத்தில் தயாநிதி மா...

#கருப்பு #இரவின் #குரல்கள் / மனுஷ்யபுத்திரன்

'
மனுஷ்யபுத்திரன்
போக்குவரத்து ஸ்தம்பித்துவிட்டது'
என்ற கூக்குரல் கேட்டு திடுக்கிட்டு விழித்தேன்
அது இன்னொரு கொடுங்கனவின் விழிப்பு

' இஸ்லாமிய அடிப்படைவாதம்
அதிகரித்துவிட்டது' என்ற குரலும்
கூடவே கேட்டது
தேச பக்தர்கள் தங்கள் துருப்பிடித்த ஆணிகளால்
சிலேட்டில் எழுதுகிறார்கள்
பல் கூசுகிறது

எல்லாவற்றையும் தாண்டி
வேறொரு குரலும் கேட்டது

கருப்பு இரவில்
குண்டாந்தடிகள் தலையில் இறங்குகையில்
கேட்கும் கூக்குரல்

Tuesday, February 11, 2020

குடியுரிமை கருப்புச் சட்டத்தை எதிர்த்து உரிமை முரசு கொட்டும் பாடல்

குடியுரிமை கருப்புச் சட்டத்தை எதிர்த்து உரிமை முரசு கொட்டும் பாடல்.
.....................................................................
"எமை அன்னியன் என்பது முறைதானா"

இயற்றிவர் : எஸ்.ஏ.சி ஹமீது
இசை & பாடல் : கலைமாமணி தேரிழந்தூர் தாஜுத்தீன் பைஜி
..
..................................................................
சுதந்திரம் காத்திட
சிறை கண்டு
சிந்திய முஸ்லிம்
ரத்தமெல்லாம்
தந்திர அரசின்
சட்டத்தால் - இன்று
அன்னிய ரென்பதும்
முறை தானோ! (2)

Monday, February 10, 2020

இசையருவி குமரி அபூபக்கர்


இசையருவி குமரி அபூபக்கர்

- அ. நஸீமா சிக்கந்தர் எம்.ஏ, எம்.ஃபில்

மனிதன் கண்டறிந்த அரிய கலைச்செல்வங்களுள் இசையும் ஒன்று. இசைக்கு ஈர்க்கும் தன்மை அதிகம் என்பதால் அது மனிதர்களை மட்டுமன்றி விலங்குகளையும், தாவரங்களையும் தன் வசப்படுத்தும் தன்மையைக் கொண்டதாக விளங்குகிறது.

இவ்வரிய இசைக் கலையின் துணையுடன் நன்னெறிகளையும், இறைவனை வழிபடும் நெறிமுறைகளையும் எளிய முறையில் மக்களிடம் கொண்டு சேர்த்த தமிழ் இளக்கிய வரலாற்றில் தடம் பதித்த பெரியோர் பலர்.

தமிழக முஸ்லீம்களும் இதில் விதிவிலக்கல்லவர். இசைக்கும், இஸ்லாமுக்கும் என்ன தொடர்பு என்றே இன்றளவும் பலர் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். முஸ்லீம்கள் இசைக்கு, குறிப்பாக தமிழிசைக்கு செய்த அரிய பல நற்காரியங்கள் மறக்கப்பட்டன அல்லது மறக்கடிக்கப்பட்டுள்ளன.

அவ்வகையில் தமிழகத்தில் இசைத் துறையில் ஈடுபாடு கொண்டு அருண்பணியாற்றி வரும் முஸ்லீம்களை விரல் விட்டு எண்ணி விடலாம். குறிப்பாக இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தை இசை வடிவில் பாமரரும் புரிந்து கொள்ளும் வகையில் கொண்டு சேர்த்தவர்கள் மிகக் குறைவு. அப்படிப்பட்ட அரிய பெரியோர்களில் ஒருவர், குறிப்பிடத்தக்கவர் குமரி அபூபக்கர்

Saturday, February 8, 2020

யாகோபு சித்தரின் யாகோபு சுண்ணகாண்டம் என்னும் நூலின் கடவுள் வணக்கப் பாடல்.

"ஆனந்தமாய் நிறைந்த அல்லா பாதம்
அடுத்துநின்ற அடுத்துநின்ற சித்தநபிமார்கள்
பாதம்போற்றி தானந்த மகமதுவை தொழுது
போற்றி தாட்டிகமாய் சுண்ணமென்ற காண்டம்
தன்னை வானந்த மாகவே அறுநூறாக
வகயாகப் பாடினேன் வண்மையாகக்
கோனந்த மெய்ப்பொருளா மின்னூல்தன்னை
குறிப்பாகப் பாடினேன் கூர்ந்து பாரே" -யாக்கோபு என்ற இராமதேவர்

இவர் நாகப்பட்டினத்தைத் தாம் வாழ்விடமாகக் கொண்ட சித்தர்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 09:05, 9 சனவரி 2013 (UTC)

கதிகலங்கிப் போயிருக்கும் சைனா

கதிகலங்கிப் போயிருக்கும் சைனா
நீங்கள் எங்கிருப்பினும் அல்லாஹ் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறான்'' (57-04). "அல்லாஹ் அனைத்தின் மீதும் ஆற்றல் உடையவன்'' (2-284, 3-29) "நீங்கள் செய்யும் மறைவான அனைத்தையும் அல்லாஹ் நன்கறிவான்'' (2-271) "அல்லாஹ் அவனின் அடியார்களை உற்று நோக்கியவனாக இருக்கிறான்'' (3-20). "நாம் மனிதனைப் படைத்தோம். அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம். அன்றியும் அவனின் பிடரி நரம்பை விட நாம் அவனுக்கு அருகில் இருக்கிறோம்'' (50-16), "(நபியே) உங்களிடம் என் அடியார்கள் என்னைப் பற்றி கேட்டால் நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன். என்னை அழைத்தால் அந்த அழைப்பாளரின் அழைப்புக்கு விடை அளிப்பேன். ஆதலால் அவர்கள் என்னிடமே பிரார்த்தனை செய்யவும். என்னையே நம்பவும். அவர்கள் நேரான வழியை அடைவார்கள் (2-186). "இறக்கும் நிலையில் உள்ளவனுக்கு அருகில் இருக்கின்றோம். நீங்கள் பார்ப்பதில்லை'' (56-85). சிரமத்தில் சிக்கிய மனிதனின் அபய குரலைக் கேட்டு அல்லாஹ் அவனின் சிரமத்தை நீக்குவான்'' (27-62).

Friday, February 7, 2020

முதல் கோடீஸ்வரி : Emotional Winning Moment | Raadhika Sarathkumar's Kode...

சமூகநீதி என்பது தமிழ்நாட்டில் நடைமுறைக்கு வந்ததன் வரலாறு என்ன ?

நிஷா மன்சூர்

சமநீதி என்பது பெரும்பாலும் அநீதியாகி விடுவதுண்டு
சமூகநீதி என்பது தமிழ்நாட்டில் நடைமுறைக்கு வந்ததன் வரலாறு என்ன ?

#என்னதான் செய்தார் பெரியார் ?
#திராவிடக் கட்சிகள் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருந்தனவா ?? Peena Ghana முழுசா கேளுங்க... 😍😍😍

அத்தாட்சிகள் - திருக்குர்ஆன் கலைக்களஞ்சியம்

அத்தாட்சிகள் - திருக்குர்ஆன் கலைக்களஞ்சியம் 

தொகுப்பாசிரியர் - ஆளூர் அமீர் அல்தாஃப், கோயம்புத்தூர்


4 தொகுதிகள்
2800 பக்கங்கள்
1600 தலைப்புகள்
13,000 வண்ணப்படங்கள்

நான்கு பாகங்கள், 2800 பக்கங்கள், 110 அத்தியாயங்கள், 779 தலைப்புகள், 13,000 வண்ணப்படங்கள்
என மாபெரும் திருக்குர்ஆன் அறிவுக்களஞ்சியத்தை அமீர் அல்தாஃப் படைத்துள்ளார்.

தமிழ், ஆங்கிந்லம் ஆகிய இரண்டு மொழிகளில் 276 நூல்கள், 21 இதழ்கள் துணையுடன் இந்த சாதனை
படைக்கப்பட்டிருக்கிறது.

அறிவியல், புவியியல், வானவியல், மானுடவியல், சமூகவியல், மருத்துவம், நீர் மேலாண்மை,
சுற்றுச்சூழல் உள்ளிட்ட துறைகள் தொடர்பாக திருக்குர்ஆன் பேசுகின்ற வியக்க வைக்கும் தகவல்களை
அமீர் அல்தாஃப் மிகவும் அற்புதமாக தொகுத்தளித்திருக்கிறார்.

ஒவ்வொரு அத்தியாயத்தையும் மனங்களை கவரும் வண்ணப்படங்களுடன் விளக்கியிருப்பது
கூடுதல் சிறப்பு.

Thursday, February 6, 2020

ஜப்பான் தன்னுடைய நாட்டுக்கு விசிட்டில் வரும் முஸ்லீம் மக்களுக்கு பிராத்தனை அறைகளை நிறுவுவதை அதிகரித்து வருகிறது !😍

 தக்கலை கவுஸ் முஹம்மத்
ஜப்பான் தன்னுடைய நாட்டுக்கு விசிட்டில் வரும் முஸ்லீம் மக்களுக்கு பிராத்தனை அறைகளை நிறுவுவதை அதிகரித்து வருகிறது !😍

அல்ஹம்துலில்லாஹ் ...

நாடு முழுவதும் வணிக வசதிகளில் அதிகமான பிரார்த்தனை அறைகள் நிறுவப்பட்டுள்ளன, ஆனால் சரியான விழிப்புணர்வு இல்லாமை மற்றும் இந்த அறைகளை அணுகுவதில் உள்ள சிரமம் போன்ற காரணங்களால் பயனர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. பிரார்த்தனை அறைகள் பெரும்பாலும் தொழுகைக்கு முன் சுத்தம் (ஒளு) செய்வதற்கான பகுதி மற்றும் பிரார்த்தனையின் திசையைக் குறிக்கும் அடையாளம் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. முஸ்லிம்களுக்கான தகவல்களை வழங்கும் ஒரு வலைத்தளத்தின் ஆபரேட்டர் கருத்துப்படி, ஜப்பானில் சுமார் 170 பிரார்த்தனை அறைகள் உள்ளன, மேலும் தென்கிழக்கு ஆசியாவிலிருந்து அதிகமான சுற்றுலா பயணிகள் ஜப்பானுக்கு வருவதால் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

Tuesday, February 4, 2020

Quranic Baby Names » Islamic Boys, Girls Names From Quran Majeed | Get Names.net

Quranic Baby Names » Islamic Boys, Girls Names From Quran Majeed | Get Names.net: Quranic baby names for boys, girls, Modern Islamic girl names from quran and hadith. Top unique Quranic boy names starting with a to z. Urdu baby names in Arabic.


வைரமுத்துவின் கதை | Vairamuthu Story | Poet | Lyricist | கதைகளின் கதை

அமேசான் சாம்ராஜ்யமான கதை | அமேசானின் கதை | The Story of Amazon | jeff b...

தமிழக அமைச்சரவையில் குழப்பத்தை ஏற்படுத்துவது யார்? | 02.02.2020 | Kelvi ...

தமிழக அமைச்சரவையில் குழப்பத்தை ஏற்படுத்துவது யார்? | 02.02.2020 | Kelvi ...

பில் கேட்ஸின் கதை | Bill Gates Success Story | Microsoft | Richest Perso...

The Unknown Facts of Bill Gates || Unknown Facts Tamil

பில்கேட்ஸ் மகள் ஜெனிஃபர் கேதரின் காதல் திருமணம் ...!Jennifer Gates, the eldest daughter of Microsoft founder Bill Gates and his wife Melinda, is engaged to Egyptian show jumper Nayel Nassar.


உலக பெருவணிகர் பில்கேட்ஸ் மகள் ஜெனிஃபர் கேதரின் நிக்காஹ் தேதி ரெடியாம்... மாப்பிள்ளை முஸ்லிமாம் ! நிச்சயதார்த்த ஒப்பந்தமும் முடிந்துவிட்டது .
மாப்பிள்ளை யாருன்னு கேட்டா எகிப்து முஸ்லிம் குதிரைபந்தய வீரர் நேயல் நாஸர்தானாம் !
Gajini Ayub

Bill Gates' daughter Jennifer engaged to Egyptian equestrian Nayel Nassar
Jennifer Gates, the eldest daughter of Microsoft founder Bill Gates and his wife Melinda, is engaged to Egyptian show jumper Nayel Nassar.

Monday, February 3, 2020

“இஸ்லாமிய அன்பர்களே, உண்மையில் இசை பாவச் செயலா?”



அ. குமரேசன்

நஹீத் அஃப்ரின் -அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த 15 வயதுச் சிறுமி. ஒரு தொலைக்காட்சியின் பாட்டுப்போட்டியில் இனிமையாகப் பாடி நேயர்களின் செவிகளையும் மனங்க்ளையும் வென்றவர். இறுதிப்போட்டியில் வெல்ல முடியாமல் போனாலும் நிறையப் பாராட்டுகளை, குறிப்பாகக் குழந்தைகளின் வரவேற்பைப் பெற்றவர்.

வெற்றி வாய்ப்பை இழந்ததை விடப் பெரிய சோகம், 46 முஸ்லிம் குருமார்கள் கூட்டாக வெளியிட்டுள்ள ஒரு துண்டறிக்கை. அல்லா வகுத்த வழியை மீறி இப்படி இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதா என்று அதிலே கேட்கப்பட்டிருக்கிறது.

சிறந்த பாடற்கலைஞராக வளரும் கனவோடு இருந்த அந்தச் சிறுமி தற்போது நொறுங்கிப்போயிருக்கிறார். முதலில் நஹீத்துக்கு எதிராக ஃபட்வா விதிக்கப்பட்டிருபபதாக சமூகவலைத்தளங்களில் தகவல் பரவியது. மாநில முதலமைச்சர் உள்பட பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்தோரும் அதைக் கண்டித்துளளனர், சிறுமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கேட்க மற்றும் படிக்க சில / Some to listen and read


ć