Thursday, November 30, 2017

இதுவும் கடந்துபோகும் என்ற தத்துவார்த்தமான வரி பொய்யில்லைதான்.

இதுவும் கடந்துபோகும் என்ற தத்துவார்த்தமான வரி பொய்யில்லைதான்.
காலம் விரைந்து கொண்டே இருக்கிறது. அதில் எத்தனை நிகழ்வுகள்......!
இப்படி எல்லாமே வந்து கடந்து போய்க்கொண்டுதான் இருக்கிறது. அப்படிக் கடந்து போகையில் நல்லதோ கெட்டதோ, அதனதன் பாதிப்பை, விளைவை ஏற்படுத்திக் கொண்டேதான் செல்கிறது.......

மௌனம் என்பது


மௌனம் என்பது ஒன்றும் செய்யாமல் இருப்பது என்பதல்ல. தன்னிலே  ஆழ்ந்து இழந்திருப்பது. துளை இடப்பட்ட மூங்கில் அதாவது புல்லாங்குழலை பாருங்கள் அது எங்கு இருந்தாலும்  தனக்குள் எதுவுமே இல்லாத தாய் ஆழ்ந்த மௌனத்தில் தன்னிலே மூல்கியே இருக்கும். தன்னை ஒருவர் இசைக்கின்ற வரை.

இதுபோலத்தான் நீங்கள் இறைவணக்கத்தில் இருக்கும்போது உங்களுக்கு ஆழ்ந்த மௌனத்தில் தன்னிலே மூழ்கி இருக்க வேண்டும். அப்போதுதான் உங்கள் உடல் உறுப்புகள் மறைந்து வெற்றிடமாக மாறும். இந்நிலையில் இருக்கும்போது மனம் அமைதி அடைந்து. மனம் ஆழ்ந்த மௌனத்தில் தன்னிலே மூழ்கி மனம் இல்லாமல் போகும். உங்கள் ஆன்மாவை உணர்ந்து ஆன்மாவில் இறை உணர்வை உங்களால் உணர முடியும்.

Wednesday, November 29, 2017

அன்று ஒரு ஹாதியா

 ஒரு நாள் மக்காவிலிருந்து பெண்ணொருவர் மதீனா வந்து சேர்ந்தார். நிறைய அலைச்சல், உளைச்சலுடன் கடினமான, தன்னந்தனியான பயணம். அவ்வளவு இன்னலுக்கும் அவருக்கு இருந்த ஒரே காரணம் – அதற்குமேல் தடுத்து வைக்க இயலாமல் அவர் வெளிப்படுத்த விரும்பிய உண்மை.
நீண்ட காலத்திற்கு முன்னரே அவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டிருந்தார். திருமணம் ஆகாமல் குடும்பத்தினர் பாதுகாவலில் இருந்துவந்த அவரால் தம்மிச்சையாக ஏதும் செய்ய இயலாத நிலை. ‘எத்தனை காலம்தான் பொறுத்திருப்பது; பொங்கியெழு’ என்று ஒரு கட்டத்தில் தோன்றிவிட்டது. தடைகளை எல்லாம் கட்டுடைத்து நபியவர்களிடம் சென்றுவிட வேண்டும்; பகிரங்கமான முஸ்லிமாய் முஸ்லிமுக்குரிய அனைத்து உரிமைகளுடனும் வாழவேண்டும் என்று திட்டவட்டமான முடிவு மனதில் ஏற்பட்டுவிட, கிளம்பி மதீனாவுக்கு வந்து சேர்ந்து விட்டார்.

படித்தால் மட்டும் போதுமா .............இல்லை

Iskandar Barak

இவரை சந்தித்தேன் ..தோஹா
கையில் பைல்
தோளில் லேப் டாப்
காலில் ஷூ
கழுத்தில் டை
புல் கை சர்ட்
அழகிய உயர்தர பேண்ட்
ரோட்டில் 11.30 மணி மதியம் கொஞ்சம் வேகமான குளிர்கால வெயிலில் நடந்து வந்துகொண்டிருக்கிறார் ..வழியில் போகும் கார்களை கை காட்டுகிறார் யாரும் நிறுத்தல
சற்று ரஷ் இல்லாத இடமென்பதால் சற்று தள்ளி அவசரபார்க்கிங்கில் என் காரை நிறுத்தச்சொன்னேன்
சற்று நடையில் வேகமெடுத்தவர் காரில் வந்து ..
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் ...யெனச்சொல்லி ஹவ் ஆர் யூ சார் ..யென ஆங்கிலத்தில் பேச ...
வஅலைக்குமு்ஸ்ஸலாம் வரஹ் ..யென பதில் தந்து ..அல்ஹம்துலில்லாஹ் ...பிரதர் ..யென பதில் தந்து

Tuesday, November 28, 2017

வாழ்வியல் தத்துவங்கள் !


மனதின் மாசை மாற்று
எண்ணத்தில் எழிச்சி வரும் !

பார்வையில் பரிவுகாட்டு
பந்தங்கள் சேர்ந்திருக்கும் !!
*
எண்ணத்தை நேர்படுத்து
செயலை சீர்படுத்து !

வாழ்வில் வளம்சேரும்
வாழ்வாங்கு வாழ்ந்திடலாம் !!

வாழ்க வளமுடன் என்பது எதைக் குறிக்கிறது.

வாழ்க வளமுடன் என்பது எதைக் குறிக்கிறது.

வாழ்க என்பது வாழ்த்துச் சொல்.

வளமுடன் என்பது ஒரு நிறைவுத் தன்மையைக் குறிக்கும்.

வாழ்க வளமுடன் என்று ஒருவர் வாழ்த்தினால் நிறைவுத் தன்மையுடன் வாழ்க என்று ஒருவர் வாழ்த்துகிறார் என்று அர்த்தம்.

ஒருவன் எப்போது நிறைவுத் தன்மை அடைய முடியும்?

தேவைகள் பூர்த்தியடையும் போது நிறைவுத் தன்மை ஏற்படும்.

தேவைகளை எப்படி பட்டியலிடுவது.

வாழ்வியல் தத்துவங்கள் !


வாழ்வியல் தத்துவங்கள் !

மனதின் மாசை மாற்று 
எண்ணத்தில் எழிச்சி வரும் !

பார்வையில் பரிவுகாட்டு
பந்தங்கள் சேர்ந்திருக்கும் !!
*
எண்ணத்தை நேர்படுத்து
செயலை சீர்படுத்து !

வாழ்வில் வளம்சேரும்
வாழ்வாங்கு வாழ்ந்திடலாம் !!

இழந்தது எல்லாம் திரும்பத் தா எனக் கேட்டேன்

இழந்தது எல்லாம் திரும்பத் தா எனக் கேட்டேன்
இழந்தது எவை என இறைவன் கேட்டான்

பலவும் இழந்திருக்கிறேன் கணக்கில்லை என்றேன்

பட்டியல் ஒன்றிட்டுச் சொல்லவா இயலும்🦀

கால மாற்றத்தில் இளமையை இழந்தேன்🦀

Monday, November 27, 2017

சில்லென சிலிர்க்க வைக்கும் குவைத்

மேற்குதொடர்ச்சியின் கோடைக்கானலும் நீலகிரியின் உதகையும் ஒன்றிணைந்து சங்கமித்து வந்ததுபோல் ஓர் உணர்வு இன்று!
தென் பொதிகையாம் திருக்குற்றாலத்தின் சாரல் கரும் முகிலாய் மாறி! சற்றே தள்ளி பயணித்து அரபகமாம் குவைத்திற்குள் நுழைந்து! தான் வாரி வந்த நீரையெல்லாம் வீதிதோறும் வீச! பாலை நிலமெங்கும் ஒரே மழை வாசம்!
உதயம் வந்த வேளையிலும் பகலவனை காணவில்லை! அவன் உச்சி மாறும் வேளையிலும் எங்கு சென்றான் புரியவில்லை! அந்தி மங்கும் நேரத்திலும் அவன் முகமே தெரியவில்லை!

Saturday, November 25, 2017

நபிகள் நாயகம் ( ஸல் ) வரலாற்றுச் சுருக்கம்

*நபிகள் நாயகம் ( ஸல் ) வரலாற்றுச் சுருக்கம்


- தொகுப்பு மௌலவி அ. அப்துல் அஜீஸ பாகவி


பெயா : முஹம்மது

( பாட்டனா சூட்டிய பெயர் . அரபு மொழியில் புகழப்படுபவா என்று பொருள் )

பிறந்த தேதி: 570 ஏப்ரல் 20 ரபீஉல் அவ்வல் 12 திஙகள் கிழமை

பிறந்த இடம் மக்கா - சவூதி அரேபியா

தகுதி:

1 - 40 வயதில் நபி

( இறைவனது செய்திகளை மக்களுக்கு சொல்வதற்கு தோவு செய்யப்பட்ட மனிதா )

2 - ரஸுல் - இறைத்தூதா ( புதிய சட்ட அமைப்பு வழஙகப்பட்டவா./
3 - இறுதித் தூதா


கல்வி :எழுதப்படிக்க கற்காதவா

தந்தை : அப்துல்லாஹ் பின் அப்துல் முத்தலிப்

உகாண்டா நினைவுகள் ....! வீடும் நாடும்

வீடும் நாடும்
அது ஒரு பழங்காலத்து வீடு. இன்னும் மெருகு குலையாமல் அப்படியே இருந்தது. அதைக் கட்டியவன் கொலோனியல் காலத்து ஆங்கிலேயனாக இருக்கலாம் அனால் இப்போது வசிப்பது இந்திய வம்சாவளியினர், என் மக்கள் உட்பட.
அந்நகரத்திலேயே மிகவும் வசதிபடைத்தவர்கள் வசிக்கும் அந்த மலையின் மேல் ஒருபக்கத்து சாய்வில் அமைந்திருந்தது.
அழகிய வராந்தாவும், விசாலமான அரங்குகளும் கொண்டிருந்தது. இயற்கையினால் குளிரூட்டப் பட்டிருந்தது இயற்கையாகவே.
அந்த வீட்டின் சிறப்பு அம்சமும் எனக்கு மிகவும் வியப்பை தந்ததுமாவது,

*முகநூலும் நானும்*


முகநூலிலும்
நாம்
நல்ல முகங்களை
உருவாக்கலாம்

ஆனந்த நிமிடங்களை
முகநூல் அள்ளித் தருகிறது
ஆனால் நான்
யாதொரு கேளிக்கைக்காகவும்
முகநூலில் இல்லை

Tuesday, November 21, 2017

எழுத்துக்கும் பேச்சுக்கும் மேக்கப்!



* மனப்பாடம் செய்து பயின்ற ஃபார்முலா மொழியில் இருந்து நாம் விடுபட வேண்டும்.

* மக்களிடம் பேசுவதற்கு கற்றுக் கொள்ள வேண்டும். ஃபார்முலாவான இலக்கிய மொழியில் அல்ல. பேசக்கூடிய ஒவ்வொரு சொல்லும், கருத்தும் இலட்சக்கணக்கானோருக்கு புரியும் விதத்தில், அவர்களது சிந்தனையை கிளறும் விதத்தில் இருக்க வேண்டும்.

* மக்களுக்கு புரியக்கூடிய மொழியில் நமக்கு பேசத் தெரியாவிட்டால், நம்மை மக்கள் ஏற்றுக் கொள்வது இயலாத காரியம்.

* கூடியிருக்கும் கூட்டத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் பொத்தாம்பொதுவாக பேசுவதோ, தேவையற்ற சொற்களால் பக்கங்களை நிரப்புவதோ, சுய அபிப்ராயத்தை பொதுக்கருத்தாக நிலைநிறுத்துவதோ, வெற்றுரை ஆற்றுவதோ கூடாது.

உகாண்டா நினைவுகள் ....! (மாசாக்கா) புது இடம் புது பாடம் .

புது இடம் புது பாடம் .
உகாண்டாவின் தலைநகரம் கம்பாலாவில் ஒரு வருடம் வேலைபார்த்து கிடைத்த பதவி உயர்வோடு வந்த இடமாற்றம் விரும்பியோ விரும்பாமலோ புறப்பட்டு 120 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மாசாக்கா எனும் ஊருக்கு வந்து சேர்ந்தேன். அங்கு ஏற்கனவே இருந்து எங்களது நிறுவனத்தின் ஏஜெண்டாக வாணிபம் செய்துவந்த உள்ளூர் ஹாஜியிடம் ஒப்படைக்கப்பட்டேன். நாலுமாடி கட்டிடத்தில் தரத்தளத்தில் எங்கள் ஏஜென்ட்டின் கடையும் முதல் தளத்தில் அவரது வீடும் இரண்டாம் தளத்தில் அவரது பணியாட்களும் மூன்றாம் தளத்தில் எனக்கான வீடும் மேலும் நிலத்தடியில் அமைக்கப்பட்டிருந்த பொருட்கிடங்கின் மேலாளனாக நானும் இருந்தோம்.
கண்ணைக்கட்டி காட்டில் விட்டதுபோல புது இடம். காண்பதெல்லாமே புதிராகவும் புதிதாகவும் இருந்தது.

Monday, November 20, 2017

மதவாதமும் இனவாதமும் நமக்கு புரியாத ஒன்று

என் எழுத்துக்கள் பேச்சுக்கள் செயல்கள் சிந்தனைகள் பொதுவானவையே அனுபவம் சார்ந்தவையே இதில் சார்பு யென்பதே கிடையாது அதில் எனக்கு உடன்பாடேயில்லை
சார்பென்பது சுயநலத்தையும் எதிரியையும் உண்டாக்குமே தவிர ஒருபோதும் நிம்மதியையும் நல்லெண்ணத்தையும் தரவே தராது
இதை புரியாதோரை நான் நட்பில் வைப்பதேயில்லை
மதவாதமும் இனவாதமும் நமக்கு புரியாத ஒன்று

#உகாண்டா_நினைவுகள் ....! (மசாக்கா)


பதவி உயர்வு.
முதல் பதவி உயர்வை எல்லோரும் பசுமையாக நினைவில் வைத்திருப்பார்கள். எனக்கும் அப்படித்தான்!
வேலையில் சேர்ந்து முதல் வருடத்திலேயே வேலைபார்க்கும் நிறுவனத்தின் முதல் கிளையின் மேலாளராக பதவி உயர்வு, மிகவும் மகிழ்வான தருணம்.
1980 - 81 ல் உகாண்டாவில் வாழ்ந்து தொழிலோ வேலையோ பார்த்துவந்த இந்தியர்களின் எண்ணிக்கை இரட்டை இலக்கத்தில்தான் இருந்தது. உகாண்டாவின் தலைநகரம் கம்பாலாவில் ஒருவருடம் வேலைப்பார்த்தாலும் ஊர் ஞாபகம் அதிகம் வாட்டியதில்லை, நாங்கள் ஏழுபேர் ஒரே ஊர்வாசிகள் ஒரே குடும்பமாக ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்து ஒரே வீட்டில் வசித்து வந்தோம்.

இருளின் வெளிச்சம்

வெளிச்சத்தைவிட
இருளே
எனக்கு விருப்பம்.
விதை வளர்கிறது
மண்ணறை இருட்டில்.
குழந்தை வளர்கிறது
கருவறை இருட்டில்.

Sunday, November 19, 2017

அகங்காரத்தின் விளைவுகள்...

அகங்காரம் உள்ளவன் தன்னையே ராஜாவாக
நினைத்துக்கொண்டு பிறரை தனது அடிமை
போல நினைத்து செயல்படுபவன்..
அகங்காரம் இருப்பவனால்,பிறர்மீது நல்லஎண்ணம வைக்கமுடியாது.
, அகங்காரம் வந்து விட்டால் அங்கே நன்மை,தீமையை பகுத்தறியும் சக்திஇருக்காது .
அகங்காரம் இருக்குமிடத்தில் ஆவேசம் இருக்கும்.
அகங்காரம் இருக்கும் இடத்தில் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இருக்காது.. இரக்கத்திற்கும்,கருணைக்கும் அங்கே வேலையில்லை..
. வாயில் எப்பொழுதும் பிறரை மதிக்காத வார்த்தைகளே வெளிவரும்..
இதுவே வெளி அகங்காரம்.

Saturday, November 18, 2017

கோபம் எதனால் வருகிறது ....


கோபம் எதனால் வருகிறது என்று ஒரு ஆராய்ச்சி நடத்தப்பட்டது. 

அதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பதில் தந்திருந்தார்கள். 

ஒருவர் கூறினார், 

நான் பணிபுரியும் அலுவலகத்தில் நான் கூறுவதை யாரும் கேட்பதில்லை. 

நான் ஒன்று சொன்னால், 
அவர்கள் ஒன்று செய்கிறார்கள்.
இதனால் கோபம் உடனே வந்துடுது என்றார்.

மற்றொருவர், 

யாராவது என்னை தவறா சொல்லிட்டாங்கன்னா பட்டுன்னு கோபம் வந்துடும் என்றார். 

*எதுவும் கடந்து போகும்..!*


நம்முடைய  வாழ்க்கையை திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும்.

எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்...!
எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன !

வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறதல்லவா?

எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்?

Friday, November 17, 2017

நாயகம் எங்கள் தாயகம் --வலம்புரிஜான்


6. வள்ளல் வளர்ந்தார் !
(பக்கம் - 69)
O
முகம்மது வளர வளர
அற்புதங்கள் தங்களுக்கு
அரைஞாண்கயிறு
கட்டிக்கொண்டன ...
அற்புதங்களா ?
இயற்கையே ஓர் அற்புதம்தான்.
ஆளில்லாக் காட்டிற்குள்
ஆயிரமாய் பூமலரும்.
ஆருமில்லை பார்ப்பதற்கு
அப்புறம் ஏன் பூக்கிறது?
காதில் முடி வளர்கிறது ...
காது இப்போது வளர்கிறதா ?

Wednesday, November 15, 2017

தீந்தமிழ்ப் பாடங்களைத் தித்திக்கப் புகட்டுமெங்கள் தமிழய்யா

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் புகுமுக வகுப்பில் கனவுகளோடு சேர்கிறேன். அதுவரை தமிழ்வழிக் கல்வியே பயின்ற என்னை ஆங்கிலவழிக் கல்வி என்று காய்ச்சி எடுக்கிறார்கள் பேராசிரியர்கள். ஒரு மண்ணும் புரியவில்லை. கண்களில் ஒரே இருட்டு. அப்போது மதியத்திற்குப்பின் ஒரு தமிழாசிரியர் வந்து அழகு தமிழ் பேசுகிறார். நம்புங்கள் மக்களே சொர்க்கம் என்பது செத்ததும் கிடைக்கும் ஏதோ ஒன்றல்ல. இப்படி அவ்வப்போது கிடைக்கும் பாக்கியம்தான்.

அந்தத் தமிழ்ப் பேராசிரியர் மன்சூர் அலி இளயவராகவே இருந்தார். இங்கே எவராவது கவிதை எழுதுவோர் இருப்பர். அவர்களிடமிருந்து நாளை ஒரு கவிதையை எதிர் பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார். அதோடு கவிதை என்றால் என்ன என்பதை விவரித்தும் கூறியிருந்தார்.

உடனே அமர்ந்து ஒரு கவிதையை அன்று மாலையே எழுதினேன். அந்தக் கவிதைதான் இது. அவர் அடுத்தமுறை வகுப்பு வந்ததும் இந்தக் கவிதையை நீட்டினேன். அவரோ அப்படியே சட்டைப்பையில் செருகிக்கொண்டு ஒன்றுமே சொல்லாமல் சென்றுவிட்டார். என் பத்தாம் வகுப்புத் தமிழாசிரியராய் இருந்திருந்தால், அப்போதே வகுப்பில் அதை அலசிப் பேசி என்னை மகிழ்வித்திருப்பார்.

Tuesday, November 14, 2017

கார் டயர் வாங்குவதற்கு முன் சில யோசனைகள்(ஆங்கிலத்தில் ) -எம்மெஸ் சலீம்


எம்மெஸ் சலீம் ...உகாண்டா தமிழ் சங்கத்தின் தலைவர்
நாகர்கோயிலில் தொழிலதிபராக இருந்தவர் இன்று உகாண்டாவில் பணிபுரிகிறார்.
திறமைமிக்கவர்.
பல துறைகளில் விற்பன்னர்.
பொது நலப் பணிகளில் ஈடுபாடுள்ளவர்.
சென்ற இடமெல்லாம் சிறப்புகளை பெற்று வரும் சலீமைத் தேடி புதிய சிறப்பொன்று வந்திருக்கிறது.
அது ...
உகாண்டா தமிழ் சங்கத்தின் தலைவர் பொறுப்பு.

கார் டயர் வாங்குவதற்கு முன் சில யோசனைகள்(ஆங்கிலத்தில் ) -எம்மெஸ் சலீம்

தேடல் ....! (பாகம் - 5 )

வெற்றியின் தேடலில்
வெறிகொண்டு துரத்தினேன்
வேறொன்றிலும் இல்லை
தன்னம்பிக்கையில் கண்டேன்

அனுபவத்தின் தேடலில்
அகிலமெல்லாம் அலைந்தேன்
தன்செயலால் விளைந்த
பட்டறிவில் கண்டேன்

நிதர்சனத்தின் தேடலில்
நித்தமும் சஞ்சரித்தேன்
நிழல்களின் மாயையிலில்லை
என்னுள்ளில் கண்டேன்

Monday, November 13, 2017

தமிழின் பக்தி இலக்கியங்களை ஆய்ந்தவர்கள்

தமிழின்
பக்தி இலக்கியங்களை
ஆய்ந்தவர்கள்
தமிழ் ஒரு பக்தி மொழி
என்கிறார்கள்

புறநாநூறு போன்ற
போரிலக்கியங்களை
ஆய்ந்தவர்கள்
தமிழ் ஒரு வீர மொழி
என்கிறார்கள்

கிழக்கிலிருந்து மேற்காக

கிழக்கிலிருந்து மேற்காக
மேற்கிலிருந்து வடக்காக
வடக்கிலிருந்து கிழக்காக
கிழக்கிலிருந்து தெற்காக
உருண்டு உருண்டு
புரண்டு  புரண்டு
விழுந்து எழுந்து
கவிழ்ந்து நிமிர்ந்து
எப்படிப் படுத்தாலும்
முழு இரவுக்கும்
வருவேனா என்று
முரண்டு பிடிக்கும்
தூக்கம்

நாளைக்கு இதைப் பற்றித்தான் எல்லோருடையப் பேச்சும் இருக்கும்

பூகம்பத்தை உணரவில்லை, பூகம்பத்தை உணர்ந்தவர்களின் வார்த்தைகளில் பூகம்பத்தை உணர்ந்தேன்.
உணவகத்தில் இரவு உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது தம்பியிடமிருந்து அழைப்பு வந்தது, பேச்சில் பதட்டம்.
எங்கே இருக்கிறாய்?. வீட்டிற்கு வந்துவிட்டேன் என்றேன்.
அடுத்து பேசுமுன் மனதுக்குள் பல எண்ணங்கள் மனதைக் கலவரப்படுத்தியது.
வீட்டில் இருக்கிறாயா?, வெளியில் இருக்கிறாயா?.
என்ன விஷயம் என்றுக் கேட்டேன்.
நில நடுக்கம் வந்து நாங்களெல்லாம் கட்டிடத்திலிருந்து வெளியேறி மைதானத்தில் நிற்கிறோம்.
நீ உனரவில்லையா?. இல்லையென்று சொல்லிவிட்டு மனதில் தோன்றியக் கலவர எண்ணங்கள் கட்டுக்குள் வந்தது.

ஆபத்து வந்தால் மட்டுமே அநேகரும் உணர்கிறோம் இறைவனின் மகிமையை.!

குவைத் அதிரக்கண்டேன் தோழா...!

அதிர்ந்தது நிலம் ஒரேயொருமுறை நேற்றிரவு...! ஒட்டுமொத்தமாக அத்தனை மனிதரும் விதி விடும் வழி தேடி வீதிக்கு வந்தார்கள் சப்தம் கூட்டியவர்களாக!
எனது... தனது... உனது... என்று தேடியதை எல்லாம் ஆங்காங்கே அப்படியே விட்டுவிட்டு ஒரே ஓட்டத்தில் அத்தனைக்கும் பொதுவாய் இருக்கின்ற வீடான வீதிக்கு வந்தவனர் அநேகரும்!
வந்தவர் முகத்தில் எல்லாம் ஒரே பீதி! கீரியின் பிடியில் இருந்து தப்பிய கோழியை போல ஒரே உதறல்! வந்த சிலரில் மேல் சட்டை கூட அணியாது விட்டு வந்தவரும் அடக்கம்! இயற்கையின் உபாதை விஞ்சியது சிலபேருக்கு வாயால் மொழிந்து கொண்டனரே தவிர தவறியும் தன் வசிப்பிடம் செல்ல மனமில்லை! காரணம் மரண பயம்!

Sunday, November 12, 2017

இஸ்லாத்தில் பிரிவே இல்லை

இஸ்லாத்தில் பிரிவே இல்லை ஆனால் முஸ்லீம்களின் இறை வணக்க செயல்முறைகளில் .கொள்கையில் சரித்திர நம்பிக்கையில் சில மாறுபாடுகள் தடுமாற்றங்கள் இருக்கின்றது என்பதை மறுக்க முடியுமா?
அதன் காரணங்களை ஆய்வு செய்வது முக்கியமல்ல அதனை ஆய்வு செய்ய முற்பட இன்னும் பிரிவுகள் உண்டாகலாம் .
சரித்திர நிகழ்வுகளை பார்த்து கேட்டு சொன்னவர்கள் அதற்க்கு விளக்கம் கொடுத்தவர்கள் சிலவற்றிற்கு மாறுபட்டிருந்தாலும் இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை மற்றும் நம்பிக்கை சிறப்பாகவும் மாற்றத்திற்கு இடமில்லாதவையாகவும் இருக்கின்றன .

திருமணத்தில் தீய பழக்கங்கள்

சடங்குகளிலும் சம்பிரதாயங்களிலும் மூழ்கிப் போன சமூகத்தினர் கூட ‘சீர் திருத்தத் திருமணங்கள்” என்னும் பெயரில் இந் நாகரீகக் காலத்தில் மூடப் பழக்கங்களை விட்டொழித்து விட்டனர். ஆனால் உண்மையான சீர் திருத்தத் திருமணங்களை உலகுக்கு நடத்திக் காட்டிய உத்தம நபி (ஸல்) அவர்களின் வழியைப் பின் பற்றி நடப்பதாகக் கூறும் நம் சமுதாயத்தினர் பலர் இன்னமும் அநாச்சாரங்களிலும் மூடப் பழக்கங்களிலும் மூழ்கிக் கிடப்பதைக் காணுகிறோம்.

Saturday, November 11, 2017

கல்வியும் செல்வமும்.

பொருளும் பொருள் சார்ந்தவை மட்டுமே வாழ்க்கையின் தேடல் என்றாகிப்போன பொருளை ஆதாரமாக கொண்டு செயல்படும் உலகில் கல்வியை கற்பிப்பதும் காசுக்குதான் என்பதில் ஆச்சர்யம் எனக்கு எழவில்லை.
உங்களுக்கும் அதேதான் எண்ணமென்றே எண்ணுகிறேன்.
மேலும், பொருளீட்டுவது மட்டுமே கல்வி கற்பதன் நோக்காமாக கருதப்படுவதே தற்கால மனிதர்களிடையே காணப்படும் வேற்றுமைகளின் முக்கிய காரணமாக இருக்கிறது என்பதிலும் எனக்கு சந்தேகமில்லை.

வாழ்க்கை.

வாழ்க்கை வாழ்க்கை என்று வையகத்தில் உழன்று, கிடைக்கப் பெற்றுள்ளவற்றில் எதையுமே அனுபவிக்காமல், நொடிக்கு நொடி என்ன நடக்குமோ? என்னவாகுமோவென ஒவ்வொரு கணமும் எண்ணியபடி மரணித்துக் கொண்டிருப்பதல்ல வாழ்க்கை!
மரணம் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்பதை உணர்ந்து அனுமதிக்கப் பட்ட அனைத்தையும் துய்த்து மனமார வாழ்வதே வாழ்க்கை. ஒவ்வொருவரும் அவரவர்க்கு கொடுக்கப் பட்டுள்ளதில் நேர்மறை பகுதியை உணர்ந்து கண்டும் களித்தும் வாழவேண்டும்.
நம்மில் பலரும் கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்யிக்கு அலைகிறோம்.

Thursday, November 9, 2017

மகனைக் கொன்ற குற்றவாளியை கட்டி அரவணைத்த தந்தை: நெகிழ்ந்த நீதிமன்றம்

தகவல் செந்தமிழன் கதிரேசன்

அமெரிக்காவில் மகனைக் கொன்ற குற்றவாளியை கட்டி அரவணைத்த தந்தை: நெகிழ்ந்த நீதிமன்றம்
கென்டக்கி: அமெரிக்காவில் மகனைக் கொன்ற குற்றவாளியை தந்தை கட்டி அரவணைத்து மன்னித்த சம்பவத்தைக் கண்டு நீதிமன்றமே நெகிழ்ந்துபோனது. கென்டக்கியில் உள்ள லெக்ஸிங்டன் பகுதியில், கடந்த 2015-ம் ஆண்டு 22 வயதான சலாவுதீன் ஜிட்மவுட் எனும் பீட்ஸா விநியோகிக்கும் நபரிடம் கொள்ளையடித்த 3 பேர், அவரது கழுத்தை அறுத்துக் கொன்றனர். மூன்று பேரும் கைது செய்யப்பட்ட நிலையில் ஒருவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு 31 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Wednesday, November 8, 2017

இசை

---------
இசைமட்டும் இல்லையெனில்
என் இரண்டு காதுகளும்
வேண்டாத உறுப்புகள்தான்
வேறென்ன நான் சொல்வேன்..?
இருபுறமும் கேள்விக்குறியாய்
இடையூறாகத் தொங்கும்
இடைஞ்சல் சதைதான் !
இசை ஹலாலா? ஹராமா..?
எனக்குத் தெரியாது வாதிட
பாட்டில் வருவது மட்டுமா
பண் இசை?
ஊஹூம்…

ஆழ்மனப் பிரளயம் ....!*

சூழலின் சர்வாதிகார
கூர்முனைகள் சீண்டிப்பார்க்க
எத்தனிக்கும் தருணங்களை
தாண்டியடித்து பேரோட்டமாய்
ஓடிக் களைத்திடாமல்
காததூரம் சென்றபின்னும்

Tuesday, November 7, 2017

கருத்து வேறுபாடுகள் ஆபத்தானது கிடையாது ! ...

தக்கலை கவுஸ் முஹம்மத்
கருத்து வேறுபாடுகள் குறிப்பாக அடிப்படை(அகீதா) அல்லாத விஷயங்களில் அது ஆகுமானதே! மாறாக பிிரிவினையும் பகை உணர்வும் தான் ஆபத்தான விஷயங்கள்,. அல்லாஹ்வும் அவனது ரசூலும் எச்சரித்ததும் அவற்றைத்தான்!
எனவே கருத்து வேறுபாடுகள் பற்றிய புரிதலும், அது பற்றிய அறிவும் நம் அனைவருக்கும் இன்று இன்றியமையாதவையாக ஆகிவிட்டன. குறிப்பாக இஸ்லாமிய இயக்கங்களும், இஸ்லாமிய கல்வி நிலையங்களும் இவை குறித்து ஆழ்ந்த அறிவு பெற்றிருத்தல் இன்றைய காலத்தின் கட்டாயம்.

ஜின்னாவின் மனைவி

பெண்ணைக் காதலித்து மணந்து கொண்டார் ஜின்னா. ஆனால்...

 ஜின்னாவின் மனைவி

”கலப்புத் திருமணத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?"

கண கணவென்று எரிந்து கொண்டிருந்த கணப்பில் கைகளைக் காண்பித்துச் சூடேற்றியவாறே கேள்வியை வீசினார் ஜின்னா. வீட்டுக்கு வெளியே மெல்ல மெல்லக் குளிர் டார்ஜிலிங் முழுக்கப் பரவிக் கொண்டிருந்தது. கொளுத்தும் பம்பாய் வெய்யிலிலிருந்து தப்பிக்க டார்ஜிலிங்கிலிருந்த நண்பர் தின்ஷா பங்களாவிற்கு வந்திருந்தார் ஜின்னா.

தின்ஷாவின் அப்பாதான் இந்தியாவில் முதன் முதலாக ஜவுளித் தொழிற்சாலையைத் துவங்கியவர்.  அவர் காலத்திலேயே மெல்ல மெல்ல வளர்ந்து ‘டெக்ஸ்டைல் கிங்’ ஆகிவிட்டது அந்தக் குடும்பம். பம்பாயின் பணக்கார பார்சிக் குடும்பங்களில் ஒன்று சர் தின்ஷாவின் குடும்பம். ஜின்னாவின் நண்பர்களில் அவரும் ஒருவர். அவரது டார்ஜிலிங் பங்களாவில் தங்க வந்திருந்தார் ஜின்னா. அப்போது தின்ஷாவும் குடும்பமும் அந்த பங்களாவில் தங்கியிருந்தது.

நம்பிக்கை

ஒரு ஊரில், மழை வேண்டி, இறைவனிடம் வேண்டுதல் நடத்தப்பட்டது.

2,3 நாட்களுக்கு முன்பே, அனைத்து ஊர்களுக்கும் அறிவிப்பும் செய்திருந்தார்கள்.

மொத்த ஊர் மக்களுமே அன்றைய தினம்,
திறந்த வெளியில் ஒன்றுகூடி இருந்த போது,              
ஒரு சிறுவர் மட்டும்,

கையில் குடையுடன் வந்திருந்தார்.

அதற்குப் பெயர் தான், இறைவன் மீது கொண்ட:
'திடமான நம்பிக்கை' :  FAITH

Monday, November 6, 2017

"தூக்கமே வர்ரதில்லைங்க"

"உறக்கத்தை எதிர்கொள்ளும் போது திருடன் கூட வெட்கப்படுகிறான்.
உறக்கம் சாதாரணக்கலை அல்ல.
அதை நிகழ்த்துவதற்கு பகலெல்லாம் விழித்திருக்க வேண்டும்.
உறக்கம் ஒரு கனத்த சுவரின் ஊடாகவும் தொற்றக்கூடியது."
நீட்ஷேயின் மேற்கண்ட வரிகளைப் படிக்கும்போது ஆழ்ந்த சிந்தனை நம்மை ஆட்கொள்கிறது. சகல வசதிகளும் தொழில்நுட்ப முன்னேற்றங்களும் மிகைத்திருக்கும் இந்நவீன காலத்தில் பெரும்பாலான நடுத்தர வயதினரும் சில இளம் பிராயத்தினரும்கூட "தூக்கமே வர்ரதில்லைங்க" என்று பெரும் சோகத்துடனும் சிவந்த கண்களுடனும் அலைபாயும் பதட்டத்துடனும் ஒரு இரங்கல் நிகழ்வின் மலர்க்கொத்தை சமர்ப்பிப்பதுபோல தனது சுயத்தைச் சமர்ப்பிக்கிறார்கள்.
பகலில் முழு விழிப்புணர்வுடன் செயலாற்றுபவர்களை தூக்கம் ஒரு பூ மலர்வதைப்போல இலகுவாக அரவணைத்துக் கொள்கிறது. பகலில் திக்கற்று அலைபாய்பவர்களையும் ஆற்றாமையுடனும் குற்றச்சாட்டுகளுடனும் சக மனிதர்களைக் கையாளத் தெரியாமல் தவிப்பவர்களையும் பொருந்தாத உறவுகளுடன் வாழ நேர்ந்துவிட்ட வாழ்க்கையை அளவுகடந்த சகிப்புத்தன்மையுடன் அனுசரித்துச் செல்பவர்களையும் இரவின் தனிமை ஒரு ஆட்கொல்லி மிருகத்தைப்போல வதைக்கிறது.

Sunday, November 5, 2017

மனோபலம்.

மனதில் எழும் எண்ணங்களே ஒரு மனிதன் தான் இவ்வுலக வாழ்வில் என்னவாக ஆகவேண்டுமென எண்ணுகிறானோ அதை அடைய வைக்கிறது.
இவ்வுலகில் படைப்பினங்கள் பவற்றையும் படைத்த படைத்தவன் மற்ற உயிரினங்கள் ஒவ்வொன்றும் அவ்வவற்றின் செயல்பாடு மற்றும் வாழ்வியலின் போக்கு அவைகள் படைக்கப்பட்டதில் இருந்து இன்றுவரை மாற்றமேதும் இல்லாமல் ஒரேமாதிரியாகத்தான் இருக்கிறது. ஆனால் மனிதனுக்கு மட்டுமே சிந்தித்து முடிவெடுக்கும் மனமெனும் மாய மந்திரத்தையும் வைத்துப் படைத்தான். மேலும் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு விதமாக சிந்தித்து செயல்படுபவனாக இருக்கின்றனர். ஒவ்வொரு தனியொருவருக்கும் தனித்தன்மை
என்பது தனித்தனியாக கொடுக்கப்பட்டுள்ளது. அதை நல்வழியில் ஈடுபடுத்தி முடியாதது எதுவுமில்லை என்பதை முயற்சியால் எத்தனை தடைகள் வந்தாலும் துணிந்து நின்று தன்னம்பிக்கையுடன் செய்துமுடிப்பதே மனோபலம்.

Saturday, November 4, 2017

என்ன செய்வது ...?

வேலையை இழுத்துப்போட்டு செய்து பழக்கப் பட்டுவிட்டாலும் கூட ஆயிரம் வேலைகள் காத்திருந்தாலும் கூட சில சமயங்களில் 'இப்ப என்ன செய்ய' என்று தோன்றுவது தவிர்க்க முடியாத ஒரு தோன்றல்.
இது ஒரு தன்னிலை கழிவிரக்கம் என்பதில் ஐயமில்லை.
காரணம் என்ன?
செய்யும் தொழிலை வழிபாடாய் செய்திருக்க புண்ணியங்கள் வந்து குமியலாம்.
மாறிவரும் அரசியல் சமூக மாற்றங்கள் சாதாரண மனிதனின் சமசீர் வாழ்க்கை முறையை முற்றிலும் மாற்றிவிட்ட நிலையில் எப்படியாவது பணம் சேர்க்கவேண்டும் என்பதே ஒற்றைக் குறிக்கோளாக இருக்க சிலர் இன்னும் 'இப்ப என்ன செய்ய' என்று எண்ணுகிறோம்.
என்ன செய்கிறோம் ?
வேண்டியதை விட்டுவிட்டு வற்புறுத்தல்களை செய்வது.
விருப்பத்தை விட்டுவிட்டு வருமானத்திற்காக செய்வது.
தன்னிலை மறந்து வறட்டு கவுரவத்திற்காக செய்வது.
எல்லாம் அவசர கதியில் ஓடும் கால மாற்ற காட்டாற்றில் சிக்கிய காய்ந்த மரக்கடை போல் இழுத்து செல்லப் படுகிறோம்.
கஷ்டப்பட்டு உழைத்துப்பெற்ற உணவைக்கூட மென்று உண்ண நேரம் இல்லாமல் அவசரகதியில் விழுங்கி புதிய நோய்கள் புதிதாக தோன்றுவதாக அலுத்துக்கொள்கிறோம்.
இன்னும் பல பாக்கியுண்டு.
என்னதான் செய்யலாம் ?

Who's real Illuminati? | Social Media | Stress | Gopinath Answers to Galatta

Friday, November 3, 2017

live Radio without earphone ல் கேட்க முடியும் Simply Amazing!!😀Proud of Our ISRO

நமது ISRO வின் ஒரு புதிய சாதனை நாம் கீழே உள்ள LINK ஐ Click செய்தால் உலக உருண்டை சுழலும் அதில் பச்சை நிற புள்ளி இருக்கும் அதில் நீங்கள் விரும்பும் இடத்தில் தொட்டால் live Radio without earphone ல் கேட்க முடியும்
Simply Amazing!!😀Proud of Our ISRO
http://radio.garden/live/

இதய ஆலயம்

==ரமீஸ் பிலாலி==
இதய ஆலயம்
இடமும் காலமும் மனிதர்களைக் கட்டுப்படுத்தும் நியதிகளாக இருக்கின்றன. அவை இரண்டையும் தமது கட்டுக்குள் கொண்டு வரும் ஆற்றல் சிலருக்குக் கிடைக்கின்றது.
”மனிதர்கள் மீது கோளங்களும் விண்மீன்களும் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஆனால் இறை பக்தர்களோ அவற்றின் மீது ஆதிக்கம் செலுத்துகிறார்கள்” என்கிறார் சூஃபி ஞானி மவ்லானா ரூமி.
பூமியில் குறிப்பிட்ட சில இடங்கள் பிற இடங்களை விடவும் புனிதமானவையாகக் கருதப்படுகின்றன. மனிதர்கள் தமது தவறுகளைத் திருத்திக்கொள்ளவும், பாவக் கறைகளைக் கழுவித் தூய்மை அடையவும் புண்ணியத் தலங்களை நாடிச் செல்கிறார்கள்.
அதேபோல், காலத்தில் சில குறிப்பிட்ட மாதங்களும் நாட்களும் நேரங்களும் புனிதத் தன்மை கொண்டவையாகக் கருதப்படுகின்றன. மனிதர்கள் தம் வாழ்வின் முக்கிய நிகழ்வுகள் அந்தப் புனிதக் காலங்களில் நிகழவேண்டும் என்று திட்டமிடுகிறார்கள்.
ஆனால், மனிதப் புனிதர்கள் என்னும் நிலையை அடைந்த ஞானிகளின் நிலையோ வேறாக இருக்கின்றது. அவர்களால் காலமும் இடமும் புனிதமடைகின்றன.
ராமனின் அகமியத்தை அறியாத கைகேயி அவன் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செல்ல வேண்டும் என்று வரம் கேட்டபோது “பூழி வெங்கானம் நண்ணிப் புண்ணியத் துறைகள் ஆடி” அவன் தவ வாழ்வு மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டாள். ஆனால், ராமன் இன்னின்ன இடங்களுக்கு வந்தான் என்று குறிப்பிடப்படும் இடங்கள் எல்லாம் இன்று புண்ணியத் தலங்களாகிவிட்டன.
நபிகள் நாயகம் பற்றிக் கவிஞர் மு.மேத்தா எழுதும் வரிகளை இங்கே நினைவு கூர்கிறேன்:
”எந்தச் சிம்மாசனத்திலும்
அவர் அமர்ந்ததில்லை
அவர் அமர்ந்த இடமெல்ல்லாம்
சிம்மாசனம் ஆனது”
காலத்தின் சங்கதியும் இதுவேதான். பிறப்பு இறப்பு உட்பட, எந்தெந்த நாட்களில் ஞானியர் வாழ்வில் பெருநிகழ்வுகள் நிகழ்ந்தனவோ அந்தந்த நாட்கள் புனிதமாகிவிடுகின்றன
ஞானிகள் எல்லா இடத்திலும் இறைவனை தரிசிக்கின்றார்கள், எல்லா நேரங்களிலும் இறையுணர்வுடன் இருக்கின்றார்கள். எனவே அவர்களுக்கு முழு உலகமும் ஆலயம் ஆகிவிடுகிறது, அவர்களின் முழுவாழ்வும் வழிபாடு ஆகிவிடுகிறது.
”பூமி முழுவதும் எனக்குத் தூய்மையாகவும் ஆலயமாகவும் ஆக்கப்பட்டுள்ளது” என்று நபிகள் நாயகம் நவின்றார்கள்.
”அனைத்தும் புனிதமாக்கப்பட்டுள்ளன.
வன விலங்குகள் இதனை அறியும்.
பூமியும் கடலும் மேகங்களும் கூட,
அன்பு நிறைந்ததொரு இதயம்
இதனை அறிவது போல்.
மிகவும் வினோதமாக இருக்கிறது
நம்மிடமிருந்து
இந்த அறிவைப் பறித்துக்கொண்டு
ஏற்கனவே புனிதமாய் இருப்பவற்றை
ஜெபித்துப் புனிதமாக்கும் ஆற்றலை
மதகுரு தனக்கெனப்
பறைசாற்றிக்கொள்வது
என்கிறார் கிறித்துவ பெண் ஞானி சியனாவின் கேத்தரீன். உலகெங்கும் இறைமை நிறைந்திருப்பதை இதயத்தால் உணர்ந்த அவர்,
நான் மண்டியிட்டு வழிபட இயலாத,
அவனது பிரசன்னத்தால்
புனிதமாகாத
இடம்தான் ஏது?
என்று கேட்கிறார்.
ஞானிகளால் எப்படி எல்லா இடத்திலும் இறைமையை உணர முடிகின்றது? என்று நமக்கு வியப்பாக இருக்கலாம். அதன் ரகசியம் ஒன்றே ஒன்றுதான். அவர்கள் இறைவனைத் தமக்குள் ’கண்டு’ விட்டார்கள்.
புற ஆலயங்களுக்குப் பயணம் செய்வது எளிது. அகத்தையே ஆலயமாக மாற்றுவதுதான் ஆன்மிகம். உண்மையான பக்தர்கள் தம்மையே ஆலயமாக ஆக்கிக்கொள்கிறார்கள்.
சூஃபிகளுக்கு “தர்வேஷ்” என்று இன்னொரு பெயர் உண்டு. அச்சொல்லுக்கு ‘வாசல்’ என்று பொருள். அதாவது, அவரே பள்ளிவாசல் ஆகிவிட்டார் என்று பொருள்.
துருக்கி நாட்டில் ஒரு காலத்தில் சூஃபிகளின் தியான மடங்கள் அதிகமாக இருந்தன. அவற்றை “தைக்கா” என்று அழைப்பார்கள். ஆன்மிகத்தை எதிர்க்கின்ற ஆட்சி அங்கே அமைந்தபோது தைக்காக்கள் இடிக்கப்பட்டன. அப்போது சூஃபி ஞானிகளிடையே துருக்கி மொழியில் ஞான வாசகம் உருவானது. அது பிறகு ஒரு பழமொழியாகவே நிலைத்துவிட்டது. “தைக்கா இடிக்கப்பட்டால் தர்வேஷே தைக்கா ஆவார்” என்பதுதான் அந்த ஞான வாசகம்.
”நெஞ்சகமே கோயில்” என்கிறார் தாயுமானவர்.
”உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்” என்கிறார் திருமூலர். அவர்தான் பக்தர்களை ”நடமாடும் கோயில்” என்று ஞானத்தால் சிறப்பித்துப் பேசினார்.
இறைவன் நமக்கு உள்ளே இருப்பதை உணராமல் அவனை வெளியே தேடுவது வெட்டி வேலை. தன்னுள்ளே இறைவனை உணராதவர்களுக்கு அவன் வெளியே எங்கும் எதிலும் தெரியமாட்டான் என்னும் கருத்துப்பட,
”நட்ட கல்லும் பேசுமோ
நாதன் உள்ளிருக்கையில்?”
என்று கேட்டார் சித்தர் கனங்களில் சிறப்புப் பெற்ற சிவவாக்கியார்.
’ஆமாம், நாதன் உள்ளிருப்பதை உணர்ந்தால்தான் நட்ட கல்லும் பேசும்’ என்று சொல்வது போல்,
”உள்ளத்தில் காண்பாய் எனில் – கோயில்
உள்ளேயும் காண்பாயடி”
என்று பாடுகின்றார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை.
செல்வர்கள் சிவனுக்குக்
கோயில்கள் சமைப்பர்
ஏழை நான்
என்ன செய்வேன்?
என் கால்களே தூண்கள்
ஊனுடம்பு ஆலயம்
தலையே
தங்க விதானம்
என்று பாடுகிறார் கன்னட பக்திக் கவி பசவண்ணா.
உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் அரபு நாட்டில் அமைந்துள்ள கஃபா என்னும் ஆலயம் இருக்கும் திசையை நோக்கியே இறைவனைத் தொழுகின்றார்கள். அந்த ‘கஃபா’வே உலகின் ஆதி ஆலயம் என்பது இஸ்லாத்தின் நம்பிக்கை. எனினும், நடமாடும் ஆலயங்களான ஞானியரின் புகழை உலகுக்கு உணர்த்தும் வகையில் நபிகள் நாயகம் நவின்றார்கள், “இறைவனிடம் சில விசுவாசிகளின் இதயங்கள் கஃபாவை விடவும் கண்ணியம் மிக்கவை”.
தமிழில் இந்தத் தத்துவப் பார்வையை நல்கும் சொல் ஒன்று உண்டு. அதுதான் ’அகம்’ என்னும் சொல்.
அகம் என்றால் உள்ளம் என்று பொருள். அகம் என்றால் வீடு என்றும் பொருள். எனவே உள்ளமே வீடு என்றாகிறது.
இல் என்றால் வீடு என்று பொருள். கோ என்றால் அரசர்கெல்லாம் அரசன் என்று பொருள். படைப்புக்கள் அனைத்தையும் படைத்து ரட்சித்து ஆளும் கோ இறைவன் ஒருவனே. எனவே அவனது ஆலயம் ’கோயில்’ எனப்பட்டது. அந்த அர்த்தத்தில் அகம் என்பது கோயில் என்றாகிறது.
கணவனை வீட்டுக்காரன் என்பதும் அகத்துக்காரர் என்பதும் தமிழ் மரபு. ஆன்மாக்கள் எல்லாம் பெண்கள். அவற்றின் ஒரே கணவன் இறைவன் மட்டுமே என்று நாயக நாயகி உத்தி கொண்டு ஞான உறவின் உண்மை உரைக்கப்படும். அகத்துக்காரன் என்றால் அகம் ஆகிய இதயத்தில் இருப்பவன் என்றும் பொருள்படும். எனவே, இறைவனே அகத்துக்காரன் என்றாகிறது.
வீடு என்றால் சொர்க்கம் என்றும் அர்த்தமுண்டு. ’வீடுபேறு’ என்று சொர்க்கத்தை அடைதல் குறிக்கப்படும். எனவே அகம் என்பது சொர்க்கம் என்றாகிறது. இறைவன் இருக்கும் இதயம் ஆலயம் மட்டுமா என்ன? அது சொர்க்கமும்தானே?
அகம் புறம் என்னும் இரு பிரிவும்கூட அறிவின் ஆரம்ப நிலையில் இருப்பவர்க்கே. ஏகத்துவ ஞானம் அருளப்பட்டோர்க்கு அகம் புறம் என இரண்டில்லை. அகமே புறம், புறமே அகம்.
அகத்திலும் புறத்திலும் ஏகனைக் காணும் உண்மை ஆன்மிகம் உற்று உய்க இவ்வுலகு.==ரமீஸ் பிலாலி==
இதய ஆலயம்
இடமும் காலமும் மனிதர்களைக் கட்டுப்படுத்தும் நியதிகளாக இருக்கின்றன. அவை இரண்டையும் தமது கட்டுக்குள் கொண்டு வரும் ஆற்றல் சிலருக்குக் கிடைக்கின்றது.
”மனிதர்கள் மீது கோளங்களும் விண்மீன்களும் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஆனால் இறை பக்தர்களோ அவற்றின் மீது ஆதிக்கம் செலுத்துகிறார்கள்” என்கிறார் சூஃபி ஞானி மவ்லானா ரூமி.
பூமியில் குறிப்பிட்ட சில இடங்கள் பிற இடங்களை விடவும் புனிதமானவையாகக் கருதப்படுகின்றன. மனிதர்கள் தமது தவறுகளைத் திருத்திக்கொள்ளவும், பாவக் கறைகளைக் கழுவித் தூய்மை அடையவும் புண்ணியத் தலங்களை நாடிச் செல்கிறார்கள்.
அதேபோல், காலத்தில் சில குறிப்பிட்ட மாதங்களும் நாட்களும் நேரங்களும் புனிதத் தன்மை கொண்டவையாகக் கருதப்படுகின்றன. மனிதர்கள் தம் வாழ்வின் முக்கிய நிகழ்வுகள் அந்தப் புனிதக் காலங்களில் நிகழவேண்டும் என்று திட்டமிடுகிறார்கள்.
ஆனால், மனிதப் புனிதர்கள் என்னும் நிலையை அடைந்த ஞானிகளின் நிலையோ வேறாக இருக்கின்றது. அவர்களால் காலமும் இடமும் புனிதமடைகின்றன.
ராமனின் அகமியத்தை அறியாத கைகேயி அவன் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செல்ல வேண்டும் என்று வரம் கேட்டபோது “பூழி வெங்கானம் நண்ணிப் புண்ணியத் துறைகள் ஆடி” அவன் தவ வாழ்வு மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டாள். ஆனால், ராமன் இன்னின்ன இடங்களுக்கு வந்தான் என்று குறிப்பிடப்படும் இடங்கள் எல்லாம் இன்று புண்ணியத் தலங்களாகிவிட்டன.
நபிகள் நாயகம் பற்றிக் கவிஞர் மு.மேத்தா எழுதும் வரிகளை இங்கே நினைவு கூர்கிறேன்:
”எந்தச் சிம்மாசனத்திலும்
அவர் அமர்ந்ததில்லை
அவர் அமர்ந்த இடமெல்ல்லாம்
சிம்மாசனம் ஆனது”
காலத்தின் சங்கதியும் இதுவேதான். பிறப்பு இறப்பு உட்பட, எந்தெந்த நாட்களில் ஞானியர் வாழ்வில் பெருநிகழ்வுகள் நிகழ்ந்தனவோ அந்தந்த நாட்கள் புனிதமாகிவிடுகின்றன
ஞானிகள் எல்லா இடத்திலும் இறைவனை தரிசிக்கின்றார்கள், எல்லா நேரங்களிலும் இறையுணர்வுடன் இருக்கின்றார்கள். எனவே அவர்களுக்கு முழு உலகமும் ஆலயம் ஆகிவிடுகிறது, அவர்களின் முழுவாழ்வும் வழிபாடு ஆகிவிடுகிறது.
”பூமி முழுவதும் எனக்குத் தூய்மையாகவும் ஆலயமாகவும் ஆக்கப்பட்டுள்ளது” என்று நபிகள் நாயகம் நவின்றார்கள்.
”அனைத்தும் புனிதமாக்கப்பட்டுள்ளன.
வன விலங்குகள் இதனை அறியும்.
பூமியும் கடலும் மேகங்களும் கூட,
அன்பு நிறைந்ததொரு இதயம்
இதனை அறிவது போல்.
மிகவும் வினோதமாக இருக்கிறது
நம்மிடமிருந்து
இந்த அறிவைப் பறித்துக்கொண்டு
ஏற்கனவே புனிதமாய் இருப்பவற்றை
ஜெபித்துப் புனிதமாக்கும் ஆற்றலை
மதகுரு தனக்கெனப்
பறைசாற்றிக்கொள்வது
என்கிறார் கிறித்துவ பெண் ஞானி சியனாவின் கேத்தரீன். உலகெங்கும் இறைமை நிறைந்திருப்பதை இதயத்தால் உணர்ந்த அவர்,
நான் மண்டியிட்டு வழிபட இயலாத,
அவனது பிரசன்னத்தால்
புனிதமாகாத
இடம்தான் ஏது?
என்று கேட்கிறார்.
ஞானிகளால் எப்படி எல்லா இடத்திலும் இறைமையை உணர முடிகின்றது? என்று நமக்கு வியப்பாக இருக்கலாம். அதன் ரகசியம் ஒன்றே ஒன்றுதான். அவர்கள் இறைவனைத் தமக்குள் ’கண்டு’ விட்டார்கள்.
புற ஆலயங்களுக்குப் பயணம் செய்வது எளிது. அகத்தையே ஆலயமாக மாற்றுவதுதான் ஆன்மிகம். உண்மையான பக்தர்கள் தம்மையே ஆலயமாக ஆக்கிக்கொள்கிறார்கள்.
சூஃபிகளுக்கு “தர்வேஷ்” என்று இன்னொரு பெயர் உண்டு. அச்சொல்லுக்கு ‘வாசல்’ என்று பொருள். அதாவது, அவரே பள்ளிவாசல் ஆகிவிட்டார் என்று பொருள்.
துருக்கி நாட்டில் ஒரு காலத்தில் சூஃபிகளின் தியான மடங்கள் அதிகமாக இருந்தன. அவற்றை “தைக்கா” என்று அழைப்பார்கள். ஆன்மிகத்தை எதிர்க்கின்ற ஆட்சி அங்கே அமைந்தபோது தைக்காக்கள் இடிக்கப்பட்டன. அப்போது சூஃபி ஞானிகளிடையே துருக்கி மொழியில் ஞான வாசகம் உருவானது. அது பிறகு ஒரு பழமொழியாகவே நிலைத்துவிட்டது. “தைக்கா இடிக்கப்பட்டால் தர்வேஷே தைக்கா ஆவார்” என்பதுதான் அந்த ஞான வாசகம்.
”நெஞ்சகமே கோயில்” என்கிறார் தாயுமானவர்.
”உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்” என்கிறார் திருமூலர். அவர்தான் பக்தர்களை ”நடமாடும் கோயில்” என்று ஞானத்தால் சிறப்பித்துப் பேசினார்.
இறைவன் நமக்கு உள்ளே இருப்பதை உணராமல் அவனை வெளியே தேடுவது வெட்டி வேலை. தன்னுள்ளே இறைவனை உணராதவர்களுக்கு அவன் வெளியே எங்கும் எதிலும் தெரியமாட்டான் என்னும் கருத்துப்பட,
”நட்ட கல்லும் பேசுமோ
நாதன் உள்ளிருக்கையில்?”
என்று கேட்டார் சித்தர் கனங்களில் சிறப்புப் பெற்ற சிவவாக்கியார்.
’ஆமாம், நாதன் உள்ளிருப்பதை உணர்ந்தால்தான் நட்ட கல்லும் பேசும்’ என்று சொல்வது போல்,
”உள்ளத்தில் காண்பாய் எனில் – கோயில்
உள்ளேயும் காண்பாயடி”
என்று பாடுகின்றார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை.
செல்வர்கள் சிவனுக்குக்
கோயில்கள் சமைப்பர்
ஏழை நான்
என்ன செய்வேன்?
என் கால்களே தூண்கள்
ஊனுடம்பு ஆலயம்
தலையே
தங்க விதானம்
என்று பாடுகிறார் கன்னட பக்திக் கவி பசவண்ணா.
உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் அரபு நாட்டில் அமைந்துள்ள கஃபா என்னும் ஆலயம் இருக்கும் திசையை நோக்கியே இறைவனைத் தொழுகின்றார்கள். அந்த ‘கஃபா’வே உலகின் ஆதி ஆலயம் என்பது இஸ்லாத்தின் நம்பிக்கை. எனினும், நடமாடும் ஆலயங்களான ஞானியரின் புகழை உலகுக்கு உணர்த்தும் வகையில் நபிகள் நாயகம் நவின்றார்கள், “இறைவனிடம் சில விசுவாசிகளின் இதயங்கள் கஃபாவை விடவும் கண்ணியம் மிக்கவை”.
தமிழில் இந்தத் தத்துவப் பார்வையை நல்கும் சொல் ஒன்று உண்டு. அதுதான் ’அகம்’ என்னும் சொல்.
அகம் என்றால் உள்ளம் என்று பொருள். அகம் என்றால் வீடு என்றும் பொருள். எனவே உள்ளமே வீடு என்றாகிறது.
இல் என்றால் வீடு என்று பொருள். கோ என்றால் அரசர்கெல்லாம் அரசன் என்று பொருள். படைப்புக்கள் அனைத்தையும் படைத்து ரட்சித்து ஆளும் கோ இறைவன் ஒருவனே. எனவே அவனது ஆலயம் ’கோயில்’ எனப்பட்டது. அந்த அர்த்தத்தில் அகம் என்பது கோயில் என்றாகிறது.
கணவனை வீட்டுக்காரன் என்பதும் அகத்துக்காரர் என்பதும் தமிழ் மரபு. ஆன்மாக்கள் எல்லாம் பெண்கள். அவற்றின் ஒரே கணவன் இறைவன் மட்டுமே என்று நாயக நாயகி உத்தி கொண்டு ஞான உறவின் உண்மை உரைக்கப்படும். அகத்துக்காரன் என்றால் அகம் ஆகிய இதயத்தில் இருப்பவன் என்றும் பொருள்படும். எனவே, இறைவனே அகத்துக்காரன் என்றாகிறது.
வீடு என்றால் சொர்க்கம் என்றும் அர்த்தமுண்டு. ’வீடுபேறு’ என்று சொர்க்கத்தை அடைதல் குறிக்கப்படும். எனவே அகம் என்பது சொர்க்கம் என்றாகிறது. இறைவன் இருக்கும் இதயம் ஆலயம் மட்டுமா என்ன? அது சொர்க்கமும்தானே?
அகம் புறம் என்னும் இரு பிரிவும்கூட அறிவின் ஆரம்ப நிலையில் இருப்பவர்க்கே. ஏகத்துவ ஞானம் அருளப்பட்டோர்க்கு அகம் புறம் என இரண்டில்லை. அகமே புறம், புறமே அகம்.
அகத்திலும் புறத்திலும் ஏகனைக் காணும் உண்மை ஆன்மிகம் உற்று உய்க இவ்வுலகு.==ரமீஸ் பிலாலி==
இதய ஆலயம்
இடமும் காலமும் மனிதர்களைக் கட்டுப்படுத்தும் நியதிகளாக இருக்கின்றன. அவை இரண்டையும் தமது கட்டுக்குள் கொண்டு வரும் ஆற்றல் சிலருக்குக் கிடைக்கின்றது.
”மனிதர்கள் மீது கோளங்களும் விண்மீன்களும் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஆனால் இறை பக்தர்களோ அவற்றின் மீது ஆதிக்கம் செலுத்துகிறார்கள்” என்கிறார் சூஃபி ஞானி மவ்லானா ரூமி.
பூமியில் குறிப்பிட்ட சில இடங்கள் பிற இடங்களை விடவும் புனிதமானவையாகக் கருதப்படுகின்றன. மனிதர்கள் தமது தவறுகளைத் திருத்திக்கொள்ளவும், பாவக் கறைகளைக் கழுவித் தூய்மை அடையவும் புண்ணியத் தலங்களை நாடிச் செல்கிறார்கள்.
அதேபோல், காலத்தில் சில குறிப்பிட்ட மாதங்களும் நாட்களும் நேரங்களும் புனிதத் தன்மை கொண்டவையாகக் கருதப்படுகின்றன. மனிதர்கள் தம் வாழ்வின் முக்கிய நிகழ்வுகள் அந்தப் புனிதக் காலங்களில் நிகழவேண்டும் என்று திட்டமிடுகிறார்கள்.
ஆனால், மனிதப் புனிதர்கள் என்னும் நிலையை அடைந்த ஞானிகளின் நிலையோ வேறாக இருக்கின்றது. அவர்களால் காலமும் இடமும் புனிதமடைகின்றன.
ராமனின் அகமியத்தை அறியாத கைகேயி அவன் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செல்ல வேண்டும் என்று வரம் கேட்டபோது “பூழி வெங்கானம் நண்ணிப் புண்ணியத் துறைகள் ஆடி” அவன் தவ வாழ்வு மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டாள். ஆனால், ராமன் இன்னின்ன இடங்களுக்கு வந்தான் என்று குறிப்பிடப்படும் இடங்கள் எல்லாம் இன்று புண்ணியத் தலங்களாகிவிட்டன.
நபிகள் நாயகம் பற்றிக் கவிஞர் மு.மேத்தா எழுதும் வரிகளை இங்கே நினைவு கூர்கிறேன்:
”எந்தச் சிம்மாசனத்திலும்
அவர் அமர்ந்ததில்லை
அவர் அமர்ந்த இடமெல்ல்லாம்
சிம்மாசனம் ஆனது”
காலத்தின் சங்கதியும் இதுவேதான். பிறப்பு இறப்பு உட்பட, எந்தெந்த நாட்களில் ஞானியர் வாழ்வில் பெருநிகழ்வுகள் நிகழ்ந்தனவோ அந்தந்த நாட்கள் புனிதமாகிவிடுகின்றன
ஞானிகள் எல்லா இடத்திலும் இறைவனை தரிசிக்கின்றார்கள், எல்லா நேரங்களிலும் இறையுணர்வுடன் இருக்கின்றார்கள். எனவே அவர்களுக்கு முழு உலகமும் ஆலயம் ஆகிவிடுகிறது, அவர்களின் முழுவாழ்வும் வழிபாடு ஆகிவிடுகிறது.
”பூமி முழுவதும் எனக்குத் தூய்மையாகவும் ஆலயமாகவும் ஆக்கப்பட்டுள்ளது” என்று நபிகள் நாயகம் நவின்றார்கள்.
”அனைத்தும் புனிதமாக்கப்பட்டுள்ளன.
வன விலங்குகள் இதனை அறியும்.
பூமியும் கடலும் மேகங்களும் கூட,
அன்பு நிறைந்ததொரு இதயம்
இதனை அறிவது போல்.
மிகவும் வினோதமாக இருக்கிறது
நம்மிடமிருந்து
இந்த அறிவைப் பறித்துக்கொண்டு
ஏற்கனவே புனிதமாய் இருப்பவற்றை
ஜெபித்துப் புனிதமாக்கும் ஆற்றலை
மதகுரு தனக்கெனப்
பறைசாற்றிக்கொள்வது
என்கிறார் கிறித்துவ பெண் ஞானி சியனாவின் கேத்தரீன். உலகெங்கும் இறைமை நிறைந்திருப்பதை இதயத்தால் உணர்ந்த அவர்,
நான் மண்டியிட்டு வழிபட இயலாத,
அவனது பிரசன்னத்தால்
புனிதமாகாத
இடம்தான் ஏது?
என்று கேட்கிறார்.
ஞானிகளால் எப்படி எல்லா இடத்திலும் இறைமையை உணர முடிகின்றது? என்று நமக்கு வியப்பாக இருக்கலாம். அதன் ரகசியம் ஒன்றே ஒன்றுதான். அவர்கள் இறைவனைத் தமக்குள் ’கண்டு’ விட்டார்கள்.
புற ஆலயங்களுக்குப் பயணம் செய்வது எளிது. அகத்தையே ஆலயமாக மாற்றுவதுதான் ஆன்மிகம். உண்மையான பக்தர்கள் தம்மையே ஆலயமாக ஆக்கிக்கொள்கிறார்கள்.
சூஃபிகளுக்கு “தர்வேஷ்” என்று இன்னொரு பெயர் உண்டு. அச்சொல்லுக்கு ‘வாசல்’ என்று பொருள். அதாவது, அவரே பள்ளிவாசல் ஆகிவிட்டார் என்று பொருள்.
துருக்கி நாட்டில் ஒரு காலத்தில் சூஃபிகளின் தியான மடங்கள் அதிகமாக இருந்தன. அவற்றை “தைக்கா” என்று அழைப்பார்கள். ஆன்மிகத்தை எதிர்க்கின்ற ஆட்சி அங்கே அமைந்தபோது தைக்காக்கள் இடிக்கப்பட்டன. அப்போது சூஃபி ஞானிகளிடையே துருக்கி மொழியில் ஞான வாசகம் உருவானது. அது பிறகு ஒரு பழமொழியாகவே நிலைத்துவிட்டது. “தைக்கா இடிக்கப்பட்டால் தர்வேஷே தைக்கா ஆவார்” என்பதுதான் அந்த ஞான வாசகம்.
”நெஞ்சகமே கோயில்” என்கிறார் தாயுமானவர்.
”உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்” என்கிறார் திருமூலர். அவர்தான் பக்தர்களை ”நடமாடும் கோயில்” என்று ஞானத்தால் சிறப்பித்துப் பேசினார்.
இறைவன் நமக்கு உள்ளே இருப்பதை உணராமல் அவனை வெளியே தேடுவது வெட்டி வேலை. தன்னுள்ளே இறைவனை உணராதவர்களுக்கு அவன் வெளியே எங்கும் எதிலும் தெரியமாட்டான் என்னும் கருத்துப்பட,
”நட்ட கல்லும் பேசுமோ
நாதன் உள்ளிருக்கையில்?”
என்று கேட்டார் சித்தர் கனங்களில் சிறப்புப் பெற்ற சிவவாக்கியார்.
’ஆமாம், நாதன் உள்ளிருப்பதை உணர்ந்தால்தான் நட்ட கல்லும் பேசும்’ என்று சொல்வது போல்,
”உள்ளத்தில் காண்பாய் எனில் – கோயில்
உள்ளேயும் காண்பாயடி”
என்று பாடுகின்றார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை.
செல்வர்கள் சிவனுக்குக்
கோயில்கள் சமைப்பர்
ஏழை நான்
என்ன செய்வேன்?
என் கால்களே தூண்கள்
ஊனுடம்பு ஆலயம்
தலையே
தங்க விதானம்
என்று பாடுகிறார் கன்னட பக்திக் கவி பசவண்ணா.
உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் அரபு நாட்டில் அமைந்துள்ள கஃபா என்னும் ஆலயம் இருக்கும் திசையை நோக்கியே இறைவனைத் தொழுகின்றார்கள். அந்த ‘கஃபா’வே உலகின் ஆதி ஆலயம் என்பது இஸ்லாத்தின் நம்பிக்கை. எனினும், நடமாடும் ஆலயங்களான ஞானியரின் புகழை உலகுக்கு உணர்த்தும் வகையில் நபிகள் நாயகம் நவின்றார்கள், “இறைவனிடம் சில விசுவாசிகளின் இதயங்கள் கஃபாவை விடவும் கண்ணியம் மிக்கவை”.
தமிழில் இந்தத் தத்துவப் பார்வையை நல்கும் சொல் ஒன்று உண்டு. அதுதான் ’அகம்’ என்னும் சொல்.
அகம் என்றால் உள்ளம் என்று பொருள். அகம் என்றால் வீடு என்றும் பொருள். எனவே உள்ளமே வீடு என்றாகிறது.
இல் என்றால் வீடு என்று பொருள். கோ என்றால் அரசர்கெல்லாம் அரசன் என்று பொருள். படைப்புக்கள் அனைத்தையும் படைத்து ரட்சித்து ஆளும் கோ இறைவன் ஒருவனே. எனவே அவனது ஆலயம் ’கோயில்’ எனப்பட்டது. அந்த அர்த்தத்தில் அகம் என்பது கோயில் என்றாகிறது.
கணவனை வீட்டுக்காரன் என்பதும் அகத்துக்காரர் என்பதும் தமிழ் மரபு. ஆன்மாக்கள் எல்லாம் பெண்கள். அவற்றின் ஒரே கணவன் இறைவன் மட்டுமே என்று நாயக நாயகி உத்தி கொண்டு ஞான உறவின் உண்மை உரைக்கப்படும். அகத்துக்காரன் என்றால் அகம் ஆகிய இதயத்தில் இருப்பவன் என்றும் பொருள்படும். எனவே, இறைவனே அகத்துக்காரன் என்றாகிறது.
வீடு என்றால் சொர்க்கம் என்றும் அர்த்தமுண்டு. ’வீடுபேறு’ என்று சொர்க்கத்தை அடைதல் குறிக்கப்படும். எனவே அகம் என்பது சொர்க்கம் என்றாகிறது. இறைவன் இருக்கும் இதயம் ஆலயம் மட்டுமா என்ன? அது சொர்க்கமும்தானே?
அகம் புறம் என்னும் இரு பிரிவும்கூட அறிவின் ஆரம்ப நிலையில் இருப்பவர்க்கே. ஏகத்துவ ஞானம் அருளப்பட்டோர்க்கு அகம் புறம் என இரண்டில்லை. அகமே புறம், புறமே அகம்.
அகத்திலும் புறத்திலும் ஏகனைக் காணும் உண்மை ஆன்மிகம் உற்று உய்க இவ்வுலகு.

எண்ணங்களின் சக்தி - ஓர் அறிவியல் பார்வை!

எண்ணங்களின் சக்தி - ஓர் அறிவியல் பார்வை!
ஏன் ஒரு சிலர் மனதில் நினைப்பதெல்லாம் அப்படியே நடக்கிறது? என்கிற காரணத்தை விளக்குகிறது இந்த வீடியோ பதிவு.
அறிவியல் ரீதியாக பார்த்தோமானால் ஒரு மனிதனுடைய எண்ணங்கள், உணர்வுகள், நம்பிக்கைகள், வார்த்தைகள் மற்றும் பிராத்தனைகளே வடிவமைக்கிறது.
இந்த கருத்தை Masaru Emoto என்கிற ஜப்பானிய விஞ்ஞானி தனது ஆராய்ச்சி மூலம் நிரூபித்து காட்டியுள்ளார்.

‘உங்களின் வழிச் செலவு, எங்களின் வாழ்க்கை செலவு.’

ஒரு டீக்கடையில் எழுதப்பட்டிருந்த வாசகம், டீயை விடவும் சூடாக இருந்தது.
"இருவடை எடுத்து ஒருவடை என்பார்
திருவோடு ஏந்தி தெருவோடு போவார்.!"
மாஸ்டர் டீ போடுகிற நேரத்தில், தட்டிலிருக்கும் வடையில் இரண்டை கபளீகரம் செய்து விட்டு ஒரு வடைதான் என்று காசு கொடுப்பவர்களை கண்டிப்பதற்காக எழுதப்பட்ட வாசகம் இது. சுவாரஸ்யமாக இருக்கிறது என்றாலும் வடை எடுக்கிற எல்லோருக்கும் இது சங்கடத்தையே ஏற்படுத்தும்.
இதைப் படிக்கும்போது உங்களுக்குள் ஏற்படும் மன உணர்விற்கும் இனி வரும் வரிகளை படிக்கும்போது ஏற்படும் மன உணர்விற்கும் உள்ள வித்தியாசத்தினை கவனியுங்கள்.

GLOBAL SPIRITUAL GARDEN (GSG) ஓர் அறிமுகம்

GLOBAL SPIRITUAL GARDEN (GSG) ஓர் அறிமுகம்  

எனக்கு 58 வயதாகிறது. இன்னும் எத்தனை காலம் இந்த உலகில் இந்த உடலோடு இருக்கப் போகிறேன் என்று தெரியாது. நான் இந்த உலகை விட்டுப் பிரிந்து போவதற்குள் என்னால் முடிந்த சேவையை சகமனிதர்களுக்குச் செய்ய வேண்டுமென்ற ஆசை எனக்கு. அதனால்தான் எனக்குத் தெரிந்த தியான முறைகளையும், உண்மையை அறிந்துகொள்ளவேண்டும் என்ற தேடல் கொண்டவர்களுக்கான உதவிகளையும் நான் என்னால் முடிந்தவரை இவ்வளவு காலமாகச் செய்து வருகிறேன்.

இப்போது அதை உலக அளவில், அல்லது குறைந்த பட்சமாக இந்திய அளவில் கொண்டுபோகவேண்டும் என்ற எண்ணம் தீவிரமாகிவிட்டது. அதன்காரணமாக, எனக்குத் தெரிந்த, ஆன்மிகப் பணியிலும் தேடலிலும் என்னோடு இருந்த சிலர், ஆன்மிகத்தில் ஏற்கனவே ஆர்வமும் முயற்சியும் பயிற்சியும் பெற்ற இன்னும் சிலரின் உதவியோடு GSG தொடங்க இருக்கிறது.

இது நல்லவிதமாக வளர்வது உங்கள் கையில்தான் உள்ளது.

இதில் எந்தவிதமான பொருளாதார நோக்கமும் கிடையாது.
இது முழுக்க முழுக்க இலவசமானது.

Thursday, November 2, 2017

பிஏ வேலையே வேணாம்னு சொன்னேன்!- கருணாநிதியின் செயலர் சண்முகநாதன் பேட்டி

சமஸ்

கருணாநிதியின் நிழல் என்று இவரைச் சொல்லலாம். சண்முகநாதன். கருணாநிதியின் செயலர். அவர் இல்லாமல் இவருக்கும் இவர் இல்லாமல் அவருக்கும் முடியாது. சண்முகநாதனுக்கும் இப்போது 75 வயது ஆகிவிட்டது. உடலில் ஏகப்பட்ட கோளாறுகள். முதுமையின் விளைவாக கருணாநிதி மௌனமாகி ஓராண்டு நெருங்கும் நிலையிலும், வழக்கம்போல அன்றாடம் கருணாநிதியின் வீட்டுக்கு வந்துவிடுகிறார் சண்முகநாதன். "தலைவர் சீக்கிரமே தேறிவிடுவார்; கூப்பிடுவார்" என்று கோபாலபுரம் வீட்டில் அவருக்கென உள்ள சின்ன அறையில் எந்த நேரமும் வேலைக்கான ஆயத்த நிலையில் கணினி முன் உட்கார்ந்திருக்கிறார். பத்திரிகையாளர்கள் சூழவே இருந்துவந்தாலும் இதுவரை சண்முகநாதன் தன் வேலையைத் தாண்டி யாரிடமும் பேசுபவர் இல்லை. தன் வாழ்வில் அவர் அளித்த முதல் பேட்டி இது. ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்!’ நூலில் இடம்பெற்றுள்ள அவருடைய நீண்ட பேட்டியை நான்கு நாட்களுக்குத் தொடராக நடுப் பக்கத்தில் கொண்டுவருகிறோம்.

திருக்கண்ணமங்கையிலிருந்து நாம் தொடங்கலாம்...