Thursday, April 30, 2020

மரண தருவாயில் திருகுர்ஆன் உடன் மரணித்த இஸ்லாத்தை ஏற்று கொண்ட சகோதரரி..

மரண தருவாயில் திருகுர்ஆன் உடன் மரணித்த இஸ்லாத்தை ஏற்று கொண்ட சகோதரரி..

லண்டனில் உள்ள விஸ்ட் பகுதியில் கிருஸ்துவ குடும்பத்தை சேர்ந்த சகோதரி ஒருவர் தனது வாழ்வியலாக இஸ்லாத்தை ஏற்று கொண்டார் அவர் குடும்பத்தினர் அவரை ஏற்று கொள்ள மறுப்பு தெரிவித்தனர் ஊரின் புற பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கி உள்ளார்..

அவர் இஸ்லாத்தை ஏற்று கொண்டதில் இரூந்து அவரை விட்டு திருகுர்ஆன் பிரிந்து இல்லாத அளவுக்கு அவர் செல்லும் இடம் எல்லாம் திருகுர்ஆன் உடன் தான் பயணித்து உள்ளார் கடந்து சில தினங்களுக்கு முன்பாக கொரோனா காரணமாக நகருகள் அடைக்கப்பட்டன இதனால் குறிப்பிட்ட பகுதியில் உள்ள கடையில் ரமலான்க்கு நோன்பு வைப்பதற்காக பொருட்களை வாங்க சென்று உள்ளார்..

Monday, April 27, 2020

Lockdown intresting Activities for kids 3.0 |Thodamal Thodarvom | Al-bri...

Azhagiya Tamil Magan Movie Songs | Ellapugazhum Video Song | Vijay | AR ...

துபாய் - அல் அமீன் ரெஸ்டாரண்ட்

துபாய்  -  அல் அமீன் ரெஸ்டாரண்ட்

Near Salah Aldin metro station,
Opp to Reef Mall,
near prime medical center.
PH. 04-2714220
WhatsApp : 056 2005628

துபாய் அல் முத்தினா, பகுதியில் தமிழகத்து பாரம்பரிய நோன்புக் கஞ்சியை விநியோகம் செய்து வருகிறது.
இந்த நோன்புக் கஞ்சியுடன், சமோசா அல்லது வடை,  கடலை,  உள்ளிட்டவை வழங்கப்படும்.
ஸஹர் உணவும் உள்ளது.
டெலிவரி வசதியும் உள்ளது.
--
முதுவை ஹிதாயத்

அழியா அற்புதம் அல் குர்ஆன்

அழியா அற்புதம் அல் குர்ஆன்

மௌலவி அல் ஹாஃபிழ் முனைவர்

A.M. அலி இப்ராஹீம் ஜமாலி M.A., M.B.A., M.Phil., Ph.D.

(உதவிப் பேராசிரியர், அரபித் துறை, ஜமால் முஹம்மது கல்லூரி, திருச்சிராப்பள்ளி)

உலகம் தோன்றியது முதல் இன்று வரை எத்தனையோ மதங்கள் மனிதர்களால் பின்பற்றப்பட்டிருக்கின்றன: பின்பற்றப்பட்டும் வருகின்றன. அவற்றுள் பெரும்பாலானவை, ஒரு வேதத்தையே வாழ்வியல்  நெறியாக கொண்டவை. ஆனால் அவற்றுள் எந்த வேதமும் இன்று வரை நிலைத்து நின்றதாக சரித்திரமோ, சான்றுகளோ இல்லை. அப்படி இருப்பதாக கூறப்படக்கூடிய வேதங்களும் திரிக்கப்பட்ட, புனையப்பட்ட, எழுத்துகள் மாற்றப்பட்ட, கருத்துகள் சிதைக்கப்பட்ட குறைப் பிரதிகளாகவே உலா வருகின்றனவே தவிர அவற்றின் அசல் மூலத்தை கொண்டதாக இல்லை.

Sunday, April 26, 2020

கேரளாவிற்கு PR வேலை பார்க்கின்றனவா இடதுசாரிக்கட்சிகள்? | வியூகம்

பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை | BBC Tamil TV News 19/02/2020

Corona Virus: நல்ல செய்தி சொல்லும் 3 நாடுகள்

Corona Virus: நல்ல செய்தி சொல்லும் 3 நாடுகள்

How Vietnam has reported zero coronavirus deaths?

Anbum Arivum song | Ghibran on his coronavirus anthem with Kamal Haasan

யா ரசூலே யா ஹபீபே ரஹ்மதுல் லில் ஆலமீன்/ Nabi - Yuvan Shankar Raja ft. Rizwan | U1 Records



யா ரசூலே யா ஹபீபே
ரஹ்மதுல் லில் ஆலமீன்
யா முசம்மில் யா முதஸ்ஸிர்
கருணையாளர் முஹம்மதே
தாஹா நபியே அல்-அமீனே
ஹாஷிம் குலத்தின் செல்வமே
விண்ணுலகம் சென்ற அற்புத நபியே
மர்ஹபா யா முஸ்தஃபா
யா ரசூலே..

பாரசீகமும் ரோமும் ஆண்ட
காலத்தில் நீர் பிறந்தது
ஆட்டை மேய்த்த முஹம்மதே நீர்
உலகை ஆண்டதும் நடந்தது
ஹபஷா மன்னரின் மாளிகை
எங்கும் தூய இஸ்லாம் நுழைந்தது
கிஸ்ரா நகரமும் மத்யன் மாளிகையும்
உங்கள் முன்னே பணிந்தது
ஏழைகளுடனே சுவனம் செல்லும்
முஹம்மதே நீர் வாழ்கவே
யா ரசூலே..

:இறப்பானது பரிவுடன் பார்க்கப்படாமல் பயத்துடன் பார்க்கப்படும் என்பதை தான் நினைத்துக்கூட பார்க்கவில்லை

வாட்ஸ்அப் வழி வந்த தகவல்
தன்னுடைய மகளின் பிரசவத்திற்காக கடந்த பிப்ரவரி மாதம் கொல்கத்தாவில் இருந்து மனைவியுடன் பெங்களுருவிற்கு வருகிறார் கார்த்திக் மைத்தி (வயது 63). இவருடைய மருமகன் பிண்டு தாஸ் ஒரு நிறுவனத்தில் செக்யூரிட்டியாக பணி புரிகிறார். சில தினங்களுக்கு முன்பு தூக்கத்திலேயே கார்த்திக்கின் உயிர் பிரிகிறது. பிண்டு தாஸ் அக்கம் பக்கத்தினரின் உதவியை நாடுகிறார். கொரோனாவால் இறந்திருக்கலாம் என்று சந்தேகம் தெரிவித்து உதவிக்கு வர மறுக்கின்றனர் அண்டை வீட்டினர்.

Saturday, April 25, 2020

பஞ்சாப் இஸ்லாமியர்கள் பெருந்தன்மை: சிகிச்சை அளிக்க மசூதியை பயன்படுத்திக...

ரமலான் நோன்பு இருக்கும்போது உடலுக்குள் என்ன நடக்கிறது? | Ramzan 2020 | R...

Corona World Update: China, America, Malaysia, Singapore, Bangladesh, In...

ரமலான்

ரமல் என்றால் கருக்குதல் என்று பொருள்.
கரும்பு விளைவிக்கப்பட்ட விளைநிலத்தில் அறுவடைக்குப்பிறகு கருக்குவார்கள்.அது எதற்காக...???
மண்ணின்/நிலத்தின் வளத்துக்காக.அப்போதைக்கு அவை கருக்கப்பட்டாலும் கருக்கப்படுவதன் நோக்கம் மீண்டும் உயிர்ப்புடனும் வளமையுடனும் வளரவேண்டும் என்பதுதான்.

அதுபோல நான்/என்னுடைய என்னும் மாயையான நம் சுயத்தைக் கருக்குவதற்கும் எல்லா படைப்பினங்களுக்கும் மூலமாக இருக்கும் ரட்சகனில் தன்னை அடையாளப்படுத்துவதற்கும் அந்த ரப்புல் ஆலமீன் ஏற்படுத்திக் கொடுத்த ஒரு அற்புதமான பயிற்சிதான் நோன்பு என்பதாகும்

உணர்சிவசப்பட்டோரிடம் பொறுப்பைத் தந்தால்...


தவறு செய்பவர்
தப்பிக்க செய்வார்
தவறாக பேசுவார்

சொல்வார்
சொல்லத்தான் செய்வார்
நினைத்தார்
நடத்தி விட்டார்

செயல் படுவோர் விவாதத்தை தனக்கு சாதகமாக்கிக் கொள்கின்றார்
செயல் படுவோர் விவாதத்தை ஒதுக்கி தான் விரும்பியபடி செயல் படுத்த முயல்கின்றனர்

பாதகம் வர புலம்புவது சிறப்பல்ல
பாதகம் வர வழி வகுத்தவரை திருத்துங்கள்

பாதகத்தையும் சாதகமாக்கிக் கொள்வது திறமையல்ல
பாதகம் தந்தோரை ஏசுவதை விட திருத்த முயலவேண்டும்

பொறுமை வெற்றியைத் தரும்
உணர்ச்சி தவறிழைக்க வழி வகுக்கும்

உணர்சிவசப்பட்டோரிடம் பொறுப்பைத் தந்தால்
பிரச்னை வர பொறுப்பிலிருந்து நழுவிக் கொள்வார்

காலனிய ஆக்கிரமிப்பின் பின்னரான சமூக எழுச்சியில் தமிழ் முஸ்லிம்களின் பங்களிப்பு

Fazhan Nawas

சொர்க்கத்திலிருந்து வரும் காற்று கேட்கலாம்... நாம் அமைதியாக இருந்தால் - யூசுப்

யூசுப்Winds from heaven can be heard... if we are quiet - Yusuf

Easy to memorize surah. Kindly download and teach the kids. May Allah shower his blessing on the kids.

How to perform prayer (Salah)

How to perform prayer (Salah)

ரு கையில் செய்வது மறு கைக்கு தெரியாமல் செய்வது மிகவும் சிறப்புடையது

: இஸ்லாமிய இரத்த பந்த உறவுகளே இந்த ஆண்டு கால சூழ்நிலையால் நிறைய இஸ்லாமியர்கள் ஏதும் சொல்ல முடியாத வறுமையில் இருக்கின்றார்கள் ஆகையால் 2020 இந்த கண்ணியமிக்க ரமலானில் உங்களது தர்மங்களை உடன்பிறந்தோர் உற்றார் உறவினர் அண்டை வீட்டுக்காரர்கள். நமது தெருக்களில் மற்றும் அருகில் உள்ள தெருக்களில் வசிப்பவர்களுக்கும் நிறைய கொடுங்கள் அவர்கள் வெளியில் சொல்ல முடியாமல் அல்லாஹ்விடம் மட்டுமே(துஆ) கேட்கின்றன. ஆகையால் சில இயக்கங்கள் மூலம் செய்வதினால் வசூல் செய்பவர்கள் 20%  30% 40% வரை எடுக்கலாம் எடுக்காமல் கூட இருக்கலாம் ஆகையால் தாங்கள் தாங்களாகவே செய்தால் மிகவும் நல்லது நன்றாக யோசனை செய்து   அல்லாஹ்வுக்கு பயந்து செயல் படுங்கள் 💐ஒரு கையில் செய்வது மறு கைக்கு தெரியாமல் செய்வது மிகவும் சிறப்புடையது 💐தாங்கள் யாருக்கு வேண்டுமானாலும் எந்த இயக்கத்திற்கு வேண்டுமானாலும் எப்போதும் செய்வதையும் நிறுத்தாமல் மேற்கூறியவாறு நமது இஸ்லாமிய உறவுகள் இந்த ஆண்டு ரமலான் எப்படி போகும் என்பவர்களுக்கு தனிபட்ட முறையில் தாங்களே நேரில் சென்று உதவுங்கள் அல்லாஹ் உங்களுக்கு அதை  பல மடங்காக பெருக்குவான்.  💐

தராவீஹ் இ-பயான் 3 -ஆம் நாள் 1441H/2020

கண்ணீர் மறைந்திடுமே/ பாடியவர் தாஜுதீன்

அருமையான தகவல்கள்/ டாக்டர் காதர் இப்ராஹிம்

சொல்ல மனம் இல்லையோ / பாடியவர் தாஜுதீன்

ரமளானை வரவேற் ப்போம்./தேரிழந்தூர் தாஜூதீன் .

துவா

Thursday, April 23, 2020

முகமது நபி விரும்பிய உணவு வகைகள்

Dr.Vavar F Habibullah



முஸ்லிம்கள், புனித மாதமாக
கருதும் ரம்ஜான் துவங்க இருக்
கிறது.நோன்பு முடியும் மாலை
நேரம் (இப்தார்) வீடுகளில் அறு
சுவை உணவு வகைகள் மணம்
பரப்பும்.

ஆனால் முகமது நபி அவர்கள்
வாழ்ந்த அந்த நாட்களில்
சாதாரண நீரை மட்டும்
பருகியே அவர்கள் நோன்பை
நிறைவு செய்வது வழக்கமாக
இருந்தது.

Ramadan / ரமதான் Pious Ramalan begins. Pray before merciful Almighty Allah



ஷார்ஜா மற்றும் அஜ்மானில் தமிழகத்து நோன்புக் கஞ்சி





ஷார்ஜா :

ஷார்ஜா பேலஸ் ரெஸ்டாரண்ட்

அல் முசல்லா சாலை,  டமாஸ் பில்டிங் எதிரில், ரோலா,

06-5615001 / 5631461

ஷார்ஜா பகுதியில் தமிழகத்து பாரம்பரிய நோன்புக் கஞ்சியை விநியோகம் செய்து வருகிறது.

இந்த நோன்புக் கஞ்சியுடன், சமோசா அல்லது வடை, பகோடா, பழம், கடலை, ஜூஸ் உள்ளிட்டவை ஒரு பேக்காக வழங்கப்படும்.

இதன் விலை 8.50 திர்ஹாம்

ஸஹர் உணவும் உள்ளது.



பார்சல் மட்டும்



அஜ்மான் :

அஜ்மான் பலுதியா ரவுண்டவுட் அருகில் உள்ள பைத் அல் ஜவஹர் ரெஸ்டாரெண்டிலும் இதே போன்ற நோன்புக் கஞ்சி வழங்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

052 1010 917

மாண்புமிகு நோன்பு !


 --- கமபம் ஹாரூன் ரஷீத்
உண்ணாமல் இருப்பது மட்டும்

உண்மையான நோன்பல்ல – அது

எண்ணங்களில் மாண்புறுத்தும்

ஏந்துதலாய்த் தவமிருக்கும் !


உணர்வுகளும் நோன்பிருக்கும்

ஊனமில்லா ஞானத்தோடு

மேன்மைமிகு தகைமையினில்

மென்மையாய் மிளிர்ந்திருக்கும் !

Wednesday, April 22, 2020

தலைகீழான காட்சிகள் ——-


இறைவனின் அன்பின் மிகைப்பால்
இயல்பு வாழ்க்கை மாற்றம் கண்டது
கொரோனா நோயின் மூலம் இறைவன்
கொண்டு தந்தான் வசந்த  வாழ்வு

மாறுபட்ட சிந்தனைகள் இது
மறுக்க முடியாத உண்மைகள் இது
மனித உயிர்களின் பலிகள் அது
மனிதாபிமானத்தின் விதைகள்

அருமையான தகவல்கள்/ டாக்டர் காதர் இப்ராஹிம்

ஊடகக் குற்றம்!

ஆக்கம்: நூருத்தீன்

சென்னை தனியார் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் சைமன். அவர் ஒரு சிறந்த நரம்பியல் மருத்துவர். அவருக்கு கோவிட்-19 பரவியது. 15 நாள்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பலனில்லை; உயிரிழந்தார். கனத்த இதயத்துடன் அவரது சடலத்தை அடக்கம் செய்ய அவருடைய நண்பர்கள் சிலரும் ஊழியர்களும் உரிய ஆவணத்துடன் சென்றனர். ஆனால் அச்சடலத்தைத் தங்கள் பகுதியில் அடக்கம் செய்யக்கூடாது என்று தடுத்து, ஏறக்குறைய 50 பேர் கொண்ட கும்பல் கல்லாலும் கட்டையாலும் அவர்களை அடித்துத் தாக்கியது. உடன் சென்றிருந்த சுகாதார ஆய்வாளர் உட்பட 7 பேருக்கு இரத்த காயம். ஆம்புலன்ஸ் கண்ணாடிகள் நொறுங்கின. அவரது சடலத்தைப் போட்டுவிட்டு நண்பர்கள் தப்பித்து ஓடினர்.

ஆபத்து ! ஆபத்து !



--- ஹாஜி மு. ஹிதாயத்துல்லா

இளையான்குடி

பேராசை ஆபத்து ! பிடிவாதம் ஆபத்து !

பெரியோர் சொல் கேளாததும் – மார்க்கம்

பேணாமல் வாழுவதும் பெரும்பாலும் ஆபத்துதான் !


சாராயம் ஆபத்து, சண்டையும் ஆபத்து ! – வீண்

சந்தேகமும் ஆபத்து தான் ! – இங்கே

தன்மானமில்லாமல் பெண்மானை வதைப்போர்கள்

சந்திப்பார் ஆபத்துதான் !

ஏராள நகைபோட்டு எங்கேயும் செல்லாதே !

எந்நாளும் ஆபத்துதான் ! – சிலர்

எங்கேதான் சென்றாலும் ஓசிநகை கேட்கின்றார் !

அதுவும் ஆபத்துதான் !

Tuesday, April 21, 2020

ஸஹர் நிகழ்ச்சியா...?

பள்ளிவாசல் பணியாளர்களையும் பராமரிப்போம்....!

என் மனதில்பட்டதை உங்களுடன் பகிர்கின்றேன்

என் மனதில்பட்டதை உங்களுடன் பகிர்கின்றேன்
நேற்று லண்டனிலிருந்து மிகவும் நெருங்கிய நண்பருடன் வெகுநேரம் பேசினேன்
அதனைத் தொடர்ந்து பல வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்கள் உறவினர்களும் தொடர்புகொண்டு உரையாடினார்கள் .
இந்த குரோணா வைரஸ் தாக்குதலின் விளைவு உறவுகளையும் நட்புகளையும் நம்முடனேயே இருக்க விரும்புகின்றது
எந்த நாட்டிலும் குரோணா வைரஸ் பாதிப்பு சம்பந்தமாக மதத்தையும் இனத்தையும் தொடர்புகொண்டு பேசுவதில்லை .ஆனால் நம் நாட்டில் மட்டும் இதன் நிலை வேறுவிதமாக உள்ளது .மதத்துக்கும் குரோணாவுக்கும் எந்த இன மத உறவு யாருக்கும் இல்லை .ஏன் இந்த நிலை இந்தியாவில் மட்டும்
அதிலும் முஸ்லிம்கள் மட்டும் குறிவைத்து பேசப்படுகின்றனர் .

Monday, April 20, 2020

வீட்டிலேயே நோன்புக் கஞ்சி தயாரிக்க

மருத்துவர்களும் மரணங்களும்

Vavar F Habibullah 
DR.HABIBULLAH
மருத்துவர்களும் மரணங்களும் 

கொரோனா மூன்று நாட்களில்
தமிழ் நாட்டில் பூஜ்ய நிலைக்கு
திரும்பி விடும் என்று சொன்னார்
தமிழக முதல்வர். ஆனால்
கொரோனாவின் பிடியில் சிக்கி
உயிர் பிரியும் டாக்டர்கள் நிலை
இப்போது அதிகமாகி விட்டது.

மரணம் அடைந்த டாக்டர்
நிலையோ மிகவும் பரிதாபகரமாக
ஆகி விட்டது.’வீட்டில் இருங்கள்’
என்று நிமிடம் தோறும் மக்களை
அறிவுறுத்தும் முதல்வர் அவர்களே!
இது டாக்டர்களுக்கும் பொருந்து
மானால், அவர்களால் தங்கள்
உயிரையாவது கொரோனாவிலி
ருந்து காப்பாற்றி இருக்க
முடியும்.

Sunday, April 19, 2020

Nagore Rumi speech | இதயத்தை நோக்கித் திரும்புதல் | நாகூர் ரூமி

தமிழர்களின் அன்பிற்குரியவர் JUSTIN TRUDEAU | Interesting Facts about Can...

அனில் அம்பானி சாம்ராஜ்யம் வீழ்ந்த கதை | Anil Ambani Empire fallen Story

மனதை எளிமைப் படுத்த

Borris Johnson, Britain PM

Borris Johnson, Britain PM
எல்லோரும் போல கடைக்கு சென்று பொருட்கள் வாங்கும் பிரதமர்.
உடல் நலம் பெற்று திரும்பவும் மக்களை சந்திக்கும் நிலைக்கு வரவேண்டும் என்பதே அனைவரும் விரும்புகின்றனர்.

Believe there is good in the world

What a reply /பதில் சொல் இறைவனைப் பற்றி

Do you agree with us ? வயதின் வளர்ச்சியில் ஏற்படும் மாறுதல்கள்


இரத்தத்தின் இரத்தம்

Vavar F Habibullah

மதுரை மருத்துவ கல்லூரியில்
நான் பிஜி படித்து வந்த நேரம்.
எனது பேராசிரியர் பிராமணர்
மிகவும் வைதீகமானவர். மிகச்
சிறந்த மருத்துவர் என்பதை
விட, மருத்துவ விஞ்ஞானி என்று
சொல்லலாம்.அவர் எழுதிய
புத்தகம் இன்றும் மருத்துவ பிஜி
மாணவருக்கான டெக்ஸ்ட் புக்
ஆக இருந்து வருகிறது.

என்னை அவருக்கு மிகவும்
பிடிக்கும்.அவரிடம் பயிற்ச்சி
பெற்றதாலேயே என்னால் ஒரு
நல்ல மருத்துவராக விளங்க
முடிகிறது.

சவுதி அறிஞர் ஆபிதி சஹ்ரானி தன்னை ட்விட்டரில் பின்பற்றுபவர்களைக் கேட்டுக்கொண்டார்.

Haji Mohamed Arif Maricar

வாழ்த்துக்கள்.

ஜி.சி.சி.யில் பணிபுரிபவர்கள் முஸ்லிம்கள் மற்றும் நபிகள் நாயகம் (ஸல்) ஆகியோருக்கு எதிராக வெறுப்பை பரப்புகின்ற அனைத்து இந்துத்துவாவினர் பெயர்களையும் பட்டியலிடுமாறு சவுதி அறிஞர் ஆபிதி சஹ்ரானி தன்னை ட்விட்டரில் பின்பற்றுபவர்களைக் கேட்டுக்கொண்டார்.

அவர் Send Hindutva Back home என்ற ஹேஸ் டேக்கையும் பயன்படுத்தியுள்ளார்.

மற்றொரு ட்வீட்டில், வளைகுடா நாடுகளில் மில்லியன் கணக்கான இந்தியர்கள் பணிபுரிகின்றனர். அவர்களில் சிலர் COVID__19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

20 Questions to Ask Yourself at The End of Every Week

By: Natalie Smith

Once a week, we should all take a moment and pause our daily lives, to breathe deeply and think about the big picture, the essential things in life. The following questions are a great way to capture new goals and achieve success in your personal and professional life, all you have to do is just answer them honestly to yourself. If you make sure to do this every week, you won’t believe what an amazing effect they’ll have!

உணர்வுகளால் உயிர்த்தெழுவோம்


வானமே எல்லை என்ற இலக்கை நிர்ணயித்த மனிதன் இன்று அதனையும் தாண்டி தன் அறிவாற்றலை நிரூபித்துள்ளான். உலகில் இயற்கை வளங்களைப் பாழ்படுத்திவிட்டு இன்னபிற கோள்களில் தண்ணீர் இருக்கிறதா? என்று ஆராய்ந்து கொண்டிருக்கின்றான். உலகில் வியாபித்திருக்கும் வற்றா ஜீவ நதிகளின் பாதையை செப்பனிடாமல் வல்லரசுகள் வானில் தண்ணீரைத் தேடுவது  முரண்பாடுகளாய் தெரியவில்லையா?

தொலை நுட்பங்களின் தொலைநோக்கு சிந்தனை என்ற ஆராய்ச்சியின் தொடர்ச்சியாக கிரகங்களைத் துளைத்து  பிரபஞ்சத்தின் எல்லையைத் தொட்டு விட்ட நிலை. அறிவின் முதிர்ச்சியும் கிட்டத்தட்ட உச்சத்தை அடைந்து விட்டது உண்மை தான் எண்ணியதை எல்லாம் கையகப்படுத்தி விட்டான் மனிதன். ஆனாலும் ஓயவில்லை இறைவனுக்கு சவால்விடும் மமதையை என்ற குணத்தை கையில்  எடுத்தான். குளோனிங் மூலம் பல உயிர்களையும், காய்கறி வகைகளையும் உற்பத்தி செய்தான். என்னால் எல்லாம் முடியும் என்றான். ஆனால், அவன் உற்பத்தி செய்ததில் விளைந்த விஷத்தன்மையை கட்டுப்படுத்த அவனால் முடியவில்லை. வினையை விளைத்து விட்டு பலனை அனுபவித்து கொண்டிருக்கிறான் மீளமுடியாத துக்கத்தில் ஆழ்ந்துள்ளான்

Saturday, April 18, 2020

*எல்லோரும் அவசியம் தெரிந்து கொள்ள* . *கேளுங்களேன்...*

கேட்க அல்லது பதிவிறக்கம் டவுன்லோடு  செய்து கேட்க
திருச்சியில் கொரோனா சிகிச்சை முடிந்து, குணமடைந்து வீடு* *திரும்பிய முக்கிய பிரமுகர் ஒருவர், அளித்த விரிவான பேட்டியை ...* *அரசு வானொலி ஒலிபரப்பியது!யார் அவர்?அவர் பேசும்* *ஒவ்வொரு வைர வரிகளும் என்ன சொல்கிறது ?* *எல்லோரும் அவசியம் தெரிந்து கொள்ள* . *கேளுங்களேன்...*
Audio (1).mp3 v.1v.1

Audio from Mohamed Ali (1).mp3v.    ď

வாட்சப் தேவையா

சகாவு பினராயி விஜயனின் கதை

உலக ஊரடங்கின் கதை!

வைரஸ் போர் ....


அணு ஆயுதங்கள் தயாரித்து பிற நாடுகளோடு போர் தொடுக்க மட்டுமே தீவிர கவனம் செலுத்திய மாபெரும் வல்லரசுகள் உட்பட பாவப்பட்ட நல்லரசுகள் போன்ற
அனைத்து நாடுகளையும்
ஆயுதங்கள் குண்டுகள் பீரங்கிகள்
தரைவழி வான்வழி கடல்வழி
இவைகள் வழியாக தாக்குதல் எதுவும் இன்றி ஆரவாரமான உலகத்தின் நிம்மதியை அமைதியாக குலைத்து உயிரை குடிக்குது கொரோனா வைரஸ் ....

மருத்துவர்களை உருவாக்கவும்
மருத்துவமனைகள் கட்டவும்
மருந்துகளின் உற்பத்திகளை பெருக்கவும்
தவறிய பல நாடுகள் இன்று தமது நாட்டு மக்களையே காப்பாற்ற இயலாமல் தவிக்கிறது ....

மன்னருக்குத் திடீரென ஒரு சந்தேகம்

நாட்டை ஆண்டு கொண்டிருந்த மன்னருக்குத் திடீரென ஒரு சந்தேகம் உதித்தது. உடனடியாக அமைச்சரை வரவழைத்தார்.

“நான் இந்த நாட்டை
இவ்வளவு நன்றாகவும், புத்திசாலித்தனத்துடனும் ஆண்டு வருகிறேன், ஆனால் இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?”

“ஆம் மன்னா!”

“அப்படியானால் அவர்களில் முதல் ஐந்து முட்டாள்கள் யார்? அவர்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கூட்டிக் கொண்டு வருவது உம் பொறுப்பு” என்றார்.

அமைச்சருக்கு ஒன்றுமே புரியவில்லை, புத்திசாலியைக் கொண்டு வரச் சொன்னால் ஏதாவது போட்டி வைத்து வெற்றியாளரைக் கொண்டு வரலாம். முட்டாளைக் கொண்டு வரச் சொன்னால்? என்ன செய்வது..!?

“சரி மன்னா” என்று ஒத்துக் கொண்டார்.

NEED PROFESSIONAS


45 வருடங்களுக்கு முன்னால்
MBBS முடித்தவுடன் அரசு வேலை
தேடி வரும்.IAS எழுதுவது மிகவும்
எளிது.பாஸ் செய்தால் ஒன்று
டாக்டர் ஆகலாம், இல்லையேல்
அரசு அதிகாரி ஆகலாம்.நமது
நாட்டில் அரசியல்வாதியாக
முதல்வராக பிரதமராக கல்வி
மட்டும் தேவை இல்லை.

அரசு பதவியில் இல்லை
என்பதாலேயே பதவியில்
இல்லாதவர்கள் முட்டாள்கள்
இல்லை.

அம்மா...அம்மம்மா!

Dr.Vavar F Habibullah

பேரென்ன
படிப்பென்ன
பட்டமென்ன
பதவியென்ன
பொருளென்ன
புகழென்ன
சொந்தமென்ன
பந்தமென்ன
நீ இல்லை என்றால்...
நான் என்பது தான் என்ன!
என் நிலை தான் என்ன!!

பெற்றெடுத்தாள் அம்மா
வளர்த்து அறுசுவை உணவூட்டி
நோய் தடுத்து பாதுகாத்தாள்
அம்மம்மா!
அம்மம்மா...அவர் கையால் தரும்
தேநீர் சுவை அறிந்து நான் சூடிய
பெயர் தான் ‘சாயாம்மா!’
சாயாம்மா அன்று எனக்கு
ஒரு ‘மருந்தம்மா’
வாரம் ஒரு நாள் அவர் தரும்
மருந்துக் கஷாயம்
மாதம் ஒரு நாள் அவர் தரும்
மருந்துச் சோறு
நோய் வெல்லும் என்றால்
அது,அவர் தம் கை மருந்தா
அல்லது அவர் தம் கைராசியா
மருத்துவம் படித்த எனக்கே
இன்றும் புரியவில்லை.

Thursday, April 16, 2020

தொழுகைக்கான அழைப்பு (பாங்கு அல்லது அதான்)

தொழுகைக்கான அழைப்பு (பாங்கு அல்லது அதான்)
தொழுகைக்கான அழைப்பைக் கொண்டு முஸ்லிம் அல்லாதோர் நேரத்தைக் கணிக்கின்றனர்.
االلهاكبر االلهاكبر
"அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்.. இறைவன் மிகப் பெரியவன் இறைவன் மிகப் பெரியவன்
اشهدانلاالهالاالله
அஷ்ஹது அன்லா இலாஹ இல்லல்லாஹ்..
இறைவன் ஒருவனைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று சாட்சி கூறுகிறேன்.
اشهدانلاالهالاالله
அஷ்ஹது அன்லா இலாஹ இல்லல்லாஹ்..
இறைவன் ஒருவனைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று சாட்சி கூறுகிறேன்..
اشهدانمحمدارسولاالله
அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்..
முஹம்மது (ﺼﻟﻰﺍﷲﻋﻠﻴﻪﻮﺴﻟﻢ)
இறைவனின் தூதூர் என்று சாட்சி சொல்கின்றேன்...
اشهدانمحمدارسولاالله
அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்
முஹம்மது (ﺼﻟﻰﺍﷲﻋﻠﻴﻪﻮﺴﻟﻢ) இறைவனின் தூதர் என்று சாட்சி சொல்கின்றேன்...
حيعلىالصلاة

Surah Yasin سورة يس - Rashid Mishary Alafasy الشيخ مشاري بن راشد العفاسي...

36.Surah Yaseen Tamil Translation | Mishary Rashid Alafasy | சூரா யாஸீன்...

Tuesday, April 14, 2020

இவற்றுள் எந்த பாவம்?



நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ!
வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ!
தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ!
கலந்த சினேகரைக் கலகஞ் செய்தேனோ!
மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்தேனோ!
குடிவரி யுயர்த்திக் கொள்ளை கொண்டேனோ!
ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ!
தருமம் பாராது தண்டஞ் செய்தேனோ!
மண்ணோரம் பேசி வாழ்வழித்தேனோ!

Sunday, April 12, 2020

Nabhinaadhar

எனக்குப்பிடித்த கவிதைகள் :

எனக்குப்பிடித்த கவிதைகள் :

1. “ரேசன் கடைக்காரருக்கு
குழந்தை பிறந்தது….
எடை குறைவாக…!”

2. “வராந்தாவிலேயே
இருந்த
வயதான தந்தை….

இறந்த பின்
ஹாலுக்குள் வந்தார்
புகைப்படமாய்…!”

3. “வீட்டின் பெயரோ
அன்னை இல்லம்..!

அன்னை இருப்பதோ
முதியோர் இல்லம்..!”

வணிக தத்துவம் – அதில்

அளவிலாக் கருணையும் இணையிலாக் கிருபையுமுடைய ஏக இறைவனின் பெயரால் …

 You need to have an inevitable encounter with Math, even if you do not like it!

 To become a Certified/Chartered Accountant, one cannot escape Math.

 வணிக தத்துவம் – அதில்

கணிதம் நிச்சயம்! ( Smile please! )

 எப்படி ஒன்றுமில்லாத பூஜ்யத்தின் தன்மையை – அதன் பரிணாமங்களை, அது காட்டும் பிரமிப்புக்களைப் புரிந்துகொண்டால் எல்லாமே புரிந்துவிடுகிறதோ, அதோ போல கணிதம் கொஞ்சம் தெளிவாகப் பழகிக்கொண்டால் எல்லாப் பாடங்களையும் எளிதாகப் புரிந்துகொள்ளவும் முடியும்!.

 ‘கணக்கு, பிணக்கு, ஆமணக்கு’ என்ற மகாகவி பாரதிபோல சுட்டெரிக்கும் கவிதை பாடாமல், ‘வீழ்வேனென்று நினைத்தாயோ?’ என்ற அவரது வீர உணர்வூட்டும் வரிகள் போல எழுந்து பாருங்கள், கணிதமும் எவ்வளவு எளிதானது இனிமையானது என்பதும் புரியும்.

Friday, April 10, 2020

மூன்று ஜும்ஆ-வை விடும் நிலை! நாம் என்ன செய்வது?

ரமலான் முதல் பிறை

Tamil Islamic Song | இறைவா

Tamil Muslim Devotional Song - Pizhai Poruppai | Rahema

இறைவனிடம் கையேந்துங்கள்

இறைவா உன்னை தேடுகிறேன் -



இறைவா உன்னை தேடுகிறேன் , அந்த ஏக்கத்திலே தான் வாடுகிறேன் அந்த ஏக்கத்திலே தான் வாடுகிறேன்
ஆசையுடன் உன்னை நாடுகிறேன்,  அந்த ஆர்வத்திலே தான் பாடுகிறேன்
இறைவா உன்னை தேடுகிறேன் , அந்த ஏக்கத்திலே தான் வாடுகிறேன் அந்த ஏக்கத்திலே தான் வாடுகிறேன்

Wednesday, April 8, 2020

இஸ்லாமிய நண்பர்கள் கவனத்திற்கு

Shahjahan R
இஸ்லாமிய நண்பர்கள் கவனத்திற்கு

ஷபே-பராத் (Shab-e-Barat) என்பது இஸ்லாமியர்களின் ஒரு பண்டிகை. ரம்ஜான் அல்லது பக்ரீத் போல கோலாகலமாகக் கொண்டாடப்படுவதில்லை. இஸ்லாமிய காலண்டரின் எட்டாவது மாதம் ஷாபான். அந்த மாதத்தில் 14-15 தேதிகளுக்கு இடைப்பட்ட நாளில் வரும் இரவுதான் ஷபே பராத்.

இந்த நாளில் இஸ்லாமியர்கள் மசூதிகளிலும் வீடுகளிலும் சிறப்புத் தொழுகை நடத்தி, இறைவனிடம் மன்னிப்புக் கோருவார்கள். அவர்களின் கடந்தகாலச் செயல்களின் அடிப்படையில் கணக்கை இறைவன் எழுதுவான் என்பது ஒரு நம்பிக்கை.

நாளை ஷபே பராத் இரவு

வழக்கம்போல சிறப்புத்தொழுகைக்கு பள்ளிவாசல்களுக்குப் போய்விடாதீர்கள், கூட்டம் சேராதீர்கள் என்று இஸ்லாமிய நண்பர்கள் தங்கள் சுற்றத்துக்கும் நட்புகளுக்கும் புரிய வையுங்கள். சிறப்புத் தொழுகையை வீட்டிலிருந்தபடியே செய்யலாம்.

நீ வெற்றுப்பிறவி..

நீ வெற்றுப்பிறவி.. Malikka Farook இன்னுமா உனக்குப்புரியவில்லை அற்பனே உணரடா எச்சரித்து எச்சரித்து என்ன பயன் நீ நச்சரிப்புக்கு பிறந்த பொச்சரிப்பாச்சே. மல்லியின் சமூகப்பாடம்.

Welcome to RealTimes


Together we can fight with #COVID19.

50 Voices for the Planet: Anthem Video

Coronavirus and YouTube: Answering Creator Questions

Coronavirus and YouTube: Answering Creator Questions

Biggest Gardening Mistakes - Forgetting the Future

உயரும் சிறகுகள்

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக
almighty-arrahim

*இப்போதெல்லாம் அமைதியாய்ப்போன சாலைகளில் குயில் கூவும் சத்தம் வெகு தூரத்துக்கு கேட்கிறது.


சிட்டுக்குருவிகள் கார்களின் சத்தம் கேட்காதலால் அரிசியை அமைதியாகவே எடுக்கிறது.

எப்போதோ பேச நினைத்த தூரத்து தேசத்துக்கும் டெலிபோனில் பேச முடிகிறது.

மழையின் தொடக்கத்து தூரலில் இருந்து கடைசி துளி வரை ரசிக்க முடிகிறது.

தொழிற்சாலைகளின் சுவாசம் காற்று மண்டலத்தில் சேர்த்த அழுக்கை சுத்தம் செய்ய அவகாசம் கிடைத்து இருக்கிறது.

மனிதனின் அட்டூழியம் பிடிக்காமல் மறைந்து போன மேகங்கள் இப்போதுதான் வெள்ளைப்பஞ்சுப்பந்துகள் போல் வானத்தில் ஊர்வளம் போகிறது.

Sunday, April 5, 2020

ஒரு கிரீடத்தின் கதை

Vavar F Habibullah
ஒரு கிரீடத்தின் கதை


கொரோனா பற்றிய சில
உண்மைகள், வைராலஜி
வல்லுநர்களையே சற்று
மிரட்டத்தான் செய்கிறது.
பேட் எனப்படும் ‘வவ்வால்கள்’
வைரஸ்களை ஏற்றிச் செல்லும்
வைரஸ் ‘ஏர் கார்கோ’ வாகவே
செயல்படுகிறது.இப்படி பறந்து
திரியும் இந்த வவ்வால்கள்
சில வகை மிருகங்களுக்கு
தங்கள் வசம் உள்ள வைரஸ்
களை டெலிவரி செய்கின்றன.

படைத்த ரப்புல் ஆலமீன் தான், இந்த கொரோனா வைரஸின் பாதிப்பிலிருந்து நம் அனைவரையும் பாதுகாக்க வேண்டும்.


அமெரிக்கா ஈராக்கின் அப்பாவி மக்களை கொல்லும் போது, மற்ற நாடுகள் அந்த நாட்டு மக்களை தானே கொல்கிறான்.! நமக்கு என்ன என்று மற்ற நாடுகள் வேடிக்கை பார்த்தார்கள்.

அமெரிக்கா ஆஃப்கான் அப்பாவி மக்களை கொல்லும் போது, மற்ற நாடுகள் அந்த நாட்டு மக்களை தானே கொல்கிறான்.! நமக்கு என்ன என்று மற்ற நாடுகள் வேடிக்கை பார்த்தார்கள்.

அமெரிக்கா வியாட்நாம் அப்பாவி மக்களை கொல்லும் போது, மற்ற நாடுகள் அந்த நாட்டு மக்களை தானே கொல்கிறான்.! நமக்கு என்ன என்று மற்ற நாடுகள் வேடிக்கை பார்த்தார்கள்.

இஸ்ரேல் பாலஸ்தீன அப்பாவி மக்களை கொல்லும் போது, மற்ற நாடுகள் அந்த நாட்டு மக்களை தானே கொல்கிறான்.! நமக்கு என்ன என்று மற்ற நாடுகள் வேடிக்கை பார்த்தார்கள்.

பர்மா ரோஹிங்யா அப்பாவி மக்களை கொல்லும் போது மற்ற நாடுகள் அந்த நாட்டு மக்களை தானே கொல்கிறான்.! நமக்கு என்ன என்று மற்ற நாடுகள் வேடிக்கை பார்த்தார்கள்.

இலங்கை அப்பாவி தமிழ் மக்களை கொல்லும் போது மற்ற நாடுகள் அந்த நாட்டு மக்களை தானே கொல்கிறான்.! நமக்கு என்ன.? என்று மற்ற நாடுகள் வேடிக்கை பார்த்தார்கள்.

இந்தியா, காஷ்மீர் அப்பாவி மக்களை கொல்லும் போதும், குஜராத் வன்முறையில் முஸ்லீம்களை கொல்லும் போதும் மற்ற நாடுகள் அந்த நாட்டு மக்களை தானே கொல்கிறான்.! நமக்கு என்ன என்று மற்ற நாடுகள் வேடிக்கை பார்த்தார்கள்.

சீனா அந்நாட்டு அப்பாவி முஸ்லீம்களை கொல்லும் போது மற்ற நாடுகள் அந்த நாட்டு மக்களை தானே கொல்கிறான்.! நமக்கு என்ன என்று மற்ற நாடுகள் வேடிக்கை பார்த்தார்கள்.

தற்போது உலகில் பெரும்பாலான நாடுகள் தங்களது நாட்டு மக்கள் கொரோனா வைரஸ் எனும் கொடும் கொள்ளை நோயால், கொத்து கொத்தாக இறக்கும் போது, அந்நாட்டு ஆட்சியாளர்கள் கதறுகிறார்கள், மருத்துவ வளர்ச்சி அடைந்தும், தடுக்க இயலவில்லையே என கைசேதப்படுகிறார்கள். பார்க்கவே மனது கனக்கிறது.

படைத்த ரப்புல் ஆலமீன் தான், இந்த கொரோனா வைரஸின் பாதிப்பிலிருந்து நம் அனைவரையும் பாதுகாக்க வேண்டும்.

இதில் நம் அனைவருக்கும் படிப்பினை உள்ளது, அதிகாரம் இருந்தால் என்ன வேணும்னாலும் செய்யலாம் என்கிற அகங்காரம் சாவு மணி அடிக்கப்பட்டு விட்டது. நம்மால் பாதிக்கப்பட்ட மக்களின் துஆக்களுக்கு நாம் அஞ்சிக்கொள்ள வேண்டும் என்கிற பயம் வருகிறது.

நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக் கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக் கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன். திருக்குர்ஆன் 5:2

நாங்கள் சர்வாதிகாரம் படைத்தவர்கள். எங்களிடம் அதிகாரம் இருந்தால் யாரை வேணும்னாலும் கொத்து கொத்தாக கொல்வோம் என்று அகங்காரம் கொண்ட அத்தனை நாடுகளையும் அல்லாஹ் கொரோனா வைரஸ் என்கிற நோயை கொண்டு பயமுறுத்தி வைத்து விட்டான்.

*நீங்கள் விஞ்ஞான வளர்ச்சியில், மருத்துவ துறையில், தொழில் நுட்பத்தில் முன்னேறி இருந்தாலும், நான் தரும் நோய்க்கு முன்பு உங்கள் அறிவியல் வளர்ச்சி எல்லாம் ஒன்றுமில்லை, நீங்கள் எல்லாம் என்னுடைய அத்தாட்சிக்கு முன்பு ஜீரோ தான்.! அகிலத்தின் அதிபதி நான் தான் என்பதை இறைவன் காட்டிக் கொண்டு இருக்கிறான்.*

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, நோயை கொடுத்து சோதிக்கும் படைத்த இறைவனிடமே, பாதுகாவலையும் நிவாரணத்தையும் தேடுவோம்.

*ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்களையும், உயிர்களையும், பலன்களையும் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக!*

திருக்குர்ஆன் 2:155

*"நீங்கள் எங்கே இருந்த போதும் மரணம் உங்களை அடையும். உறுதியான கோட்டைகளில் நீங்கள் இருந்தாலும் சரியே. அவர்களுக்கு ஏதேனும் நன்மை ஏற்பட்டால் "இது அல்லாஹ்விடமிருந்து வந்தது' என்று கூறுகின்றனர். அவர்களுக்கு ஏதேனும் தீங்கு ஏற்பட்டால் "இது உம்மால் தான் ஏற்பட்டது' என்று கூறுகின்றனர். "அனைத்தும் அல்லாஹ்விடமிருந்தே' என்று (முஹம்மதே!) கூறுவீராக! இந்தச் சமுதாயத்திற்கு என்ன நேர்ந்தது? எந்தச் செய்தியையும் புரிந்து கொள்ள அவர்கள் முயற்சிப்பதில்லையே!*

திருக்குர்ஆன் 4:78
------------------------------------
M A Mohamed Ali

காரில் இருந்து கொண்டே கொரோனா டெஸ்ட் எடுக்கு வசதி அபுதாபியில் தொடங்கப்பட்டது.

பத்திரிகை அறிக்கை

Kaniyur Ismail Najee Manbayee
12 hrs
Date: 05.04.2020
பத்திரிகை அறிக்கை
தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், எஸ்டிபிஐ மற்றும் தப்லீக் ஜமாஅத் ஆகிய அமைப்புகளின் தலைவர்கள் பங்கு கொண்ட ஆலோசனை கூட்டம் சென்னை பெரியமேட்டில் உள்ள தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் மாநில தலைமையகத்தில் இன்று ஞாயிறு (05.04.2020) தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர் மவ்லானா பி. ஏ. காஜா முயீனுத்தீன் பாகவி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் முகைதீன், தமுமுக வின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா, எஸ்டிபிஐ கட்சியின் பொதுச் செயலாளர் அச. உமர் பாரூக், ஜமாஅத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளர் மவ்லவி முனைவர் வி. எஸ். அன்வர் பாதுஷா உலவி, துணைப் பொதுச் செயலாளர் மவ்லவி கே. எம். இல்யாஸ் ரியாஜி தப்லீக் ஜமாத் பொறுப்பாளர்கள் ஜனாப் நெல்லை அமீன் மற்றும் ஜனாப் ஏ. ஜமாலுதீன் (கோடம்பாக்கம்) ஆகியோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கு கொண்டார்கள்.

கொரோனா ஜிஹாத் வதந்திக்கு அமெரிக்கா கண்டனம்!

சர்வதேச சிறுபான்மையினருக்கான தூதர் சாம் பிரவுன்பேக்
இந்தியாவில் #CoronaJihad என்ற ஹேஷ்டேக் பிரபலமாகியுள்ளதை நாங்கள் கவனித்தோம். கொரோனா வைரஸ் முஸ்லிம் சமூகத்தால் பரவியுள்ளது என்று அது தெரிவிக்கிறது. இதைப்போன்ற முஸ்லீம்-விரோத நடவடிக்கையை கொரோனா வைரஸ் எவ்வாறு அதிகரித்துள்ளது என்பதை நீங்கள் கண்காணிக்கிறீர்களா?

என்று முன்வைக்கப்பட்ட கேள்விக்கு Samuel D. Brownback, Ambassador at Large for International Religious Freedom அளித்த பதிலிலிருந்து ஒரு பகுதி.

oOo

COVID வைரஸ் தொடர்பாக மத சிறுபான்மையினர் மீது குற்றம் சாட்டப் படுவதை நாங்கள் கண்காணித்துக் கொண்டிருகிறோம். துரதிர்ஷ்டவசமாக, இது பல்வேறு இடங்களில் நடைபெறுகிறது. இதை அரசாங்கங்கள் செய்வது தவறு. அந்த அரசாங்கங்கள் உண்மையில் இந்த குற்றங்களைச் செய்பவர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதோடு, கொரோனா வைரஸ் பரவலுக்கு சிறுபான்மையினர் காரணம் அல்ல என்பதை மிகத் தெளிவாகக் கூற வேண்டும்.

Friday, April 3, 2020

கல்வி ஞானத்தை அடைய பத்து வழிமுறைகள்

கல்வி ஞானத்தை அடைய பத்து வழிமுறைகள்


அரபியில்: அப்துல்லாஹ் இப்னு ஸல்ஃபீக் அள் ளுஃபைரீ

தமிழில்: மௌலவி அல் ஹாஃபிழ் முனைவர்

A.M. அலி இப்ராஹீம் ஜமாலி M.A., M.B.A., M.Phil, Ph.D.

(உதவிப் பேராசிரியர், அரபித் துறை, ஜமால் முஹம்மது கல்லூரி, திருச்சிராப்பள்ளி)


அனைத்துப் புகழும் ஏக வல்லோன் அல்லாஹ் ஒருவனுக்கே! அவனது கருணையும், சாந்தியும் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது உரித்தாகுக!

கல்வி ஞானத்தைத் தேடும் ஒவ்வொரு மனிதனும் சில அடிப்படை வழிமுறைகளைப் பின்பற்றுவது அவசியம். அந்த அடிப்படைத் தத்துவங்களை நினைவு கூர்வதே இவ்வாக்கத்தின் நோக்கமாகும்.

அறிவை அடைய நினைக்கும் ஒவ்வொருவரும் பின்வரும் பத்து வழிமுறைகளையும், கட்டளைகளையும் பின்பற்றியாக வேண்டும்.

முதல் வழிமுறை – அல்லாஹ்வின் உதவியைத் தேடுதல்:

தப்லீக் ஜமாத்தும் கொரோனாவும் (அனைவரும் தப்லீக் என்றால் என்ன என்று புரிந்து கொள்ளும் அருமையானபதிவு )...

Dr .Vavar F Habibullah

தப்லீக் ஜமாத்தும்
கொரோனாவும்

இப்போது,
எனது டாக்டர் நண்பர்கள் பலர்
‘டாக்டர் டெல் மீ சம்திங் அபவ்ட்
தப்லீக் ஜமாத்’....என்று
கேட்கிறார்கள்.
டெல்லி நிஜாமுதீன் பகுதியில்
சமீபத்தில் நடந்த தப்லீக் மாநாடு
தமிழகத்தில் தப்லீக் ஜமாத் பற்றிய
ஒரு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
பிரிட்டிஷ் இந்தியாவில் தலைநகர்
டெல்லியில் துவங்கிய
இந்த அமைப்பு, ஆரிய சமாஜ்
போன்ற அமைப்பு போன்றது.

ஐரோப்பிய நாடான ஸ்வீடன் மட்டும் எப்போதும் போல இயல்பாக இருகிறது. காரணம் என்ன?

Corona உலகை எப்படி மாற்றியுள்ளது தெரியுமா? | covid-19 |

மலேசியாவில் வேலை செய்பவர்களுக்கு # விசிட் விசாவில் மலேசியா வந்தவர்கள் # வெளி நாட்டில் வேலை செய்பவர்கள்

0:00 / 8:49 Surah Ar-Rehman Full | Abdul Rahman Al-Sudais

Thursday, April 2, 2020

"தப்லீக்" என்றால் என்ன?

Kanchi Abdul Rauf Baqavi
"தப்லீக்" என்றால் என்ன?

தப்லீக் இயக்கம் என்பது என்ன ?
அது செய்யும் பணிகள் தான் என்ன?

நான் தப்லீக் இயக்கத்தைச் சேர்ந்தவனல்லன்.ஆனாலும் தப்லீக் பற்றி சில விளக்கங்களை எதார்த்த நிலைகளின் அடிப்படையில் இங்கு பதிவிட்டுள்ளேன். அவ்வளவு தான்.

நான் என்னை அடையாளப்படுத்திக் கொள்வது அஹ்லுஸ் சுன்னத் ஜமாஅத் என்பதாகவே.

சுன்னத் வல் ஜமாஅத்தின் அடிப்படைகளை இட்டவர்கள் மத்ஹபுகளின் மகத்தான இமாம்கள். அதை ஆன்மீகப் பேரியக்கமாக வளர்த்தவர்கள் இறைநேசச் செல்வர்கள்.
அவர்களைப் பற்றிய பதிவுகள் இன்ஷா அல்லாஹ் அடுத்தடுத்து இடப்படும்.

தப்லீக் ஜமாஅத் என்ற பெயரில் உள்ள "தப்லீக்"என்ற சொல்லின் பொருள் என்ன?" என்பது பலருடைய உள்ளத்திலும் உள்ள கேள்வி.

சிரிங்க சிரிச்சுட்டே இருங்க


சிரித்து சிரித்து சின்னாபின்னமாகுங்கள்... 😅

ஆசிரியர் 1: எதுக்கு சார் அந்த பையன பெஞ்ச் மேல நிக்கவச்சு இருக்கீங்க....??? 😅😅

 ஆசிரியர் 2: கட்டபொம்மன தூக்குல போட்ட இடம் எதுன்னு கேட்டா கழுத்துன்னு சொல்றான்
__________
ஆசிரியர்: உலகம் ஒரு நாடக மேடை... அதில் நாமெல்லாம் நடிகர்கள்.... 😅😅😅
மாணவன்: சார்.. அப்படின்னா எனக்கு ஜோடியா தமன்னாவைப் போடுங்க சார்... 😅😅
__________
டாக்டர் : ஏங்க, உங்க மனைவிய நாய் கடித்ததே....!!! முதல் உதவி என்ன செஞ்சீங்க....??? 😅😅
வந்த நபர் : அந்த நாய்க்கு ஒரு பிரியாணி வாங்கி போட்டேன்....!!! 😅😅😅
__________
கண்டக்டர்: "விசில் அடிச்சிக்கிட்டே இருக்கேன், நீ பாட்டுக்க போய்க்கிட்டே இருக்கே....???''
 டிரைவர்: "இங்கே மட்டும் என்னவாம்......??? பிரேக் அடிச்சிக்கிட்டே இருக்கேன். வண்டி பாட்டுக்க போய்க்கிட்டே இருக்குதே....!!!'' 😅😅
__________
"மேலே இருந்து கீழே வந்தால் அது அருவி..."
"அப்ப... கீழே இருந்து மேலே போனால்....???"
 "அது.... குருவி....!!!"
__________
ஒருவர்: பொய் சொன்னாக் கண்டுபிடிக்க ஒரு எந்திரம் இருக்காமே....??? உங்களுக்குத் தெரியுமா.....???
 நண்பர்: தெரியுமாவாவது....??? நான் அதைத்தானே கல்யாணம் செஞ்சிருக்கேன். 😅😅
__________
பிச்சைக்காரர்: "அம்மா தாயே... பிச்சை போடுங்க,
நான் வாய் பேச முடியாத ஊமை."
 வீட்டுக்காரம்மா: பக்கத்து வீட்டுல போய் கேளுப்பா...
எனக்கு காது கேட்காது."
__________
 ஏய் என்னோட காதலிக்கு எதாவது பரிசு தரணும். என்ன தரட்டும்...??? 😅😅😅
 ஒரு தங்க மோதிரம் வாங்கிக்கொடு.
வேற எதாவது பெரிசா சொல்லு.
ஒரு MRF டயர் வாங்கிக்கொடு....???
__________
 (பரீட்சை ஹாலில்)
ரகு : வயித்தைக் கலக்குதுடா.
ராமு : எல்லாப் பாடத்தையும் கரைச்சுக் குடிக்காதேன்னு
அப்பவே சொன்னேன், கேட்டியா...???
__________
முட்டை வியாபாரி: என் மகன் எப்படிப் படிக்கிறான் சார்...???
 ஆசிரியர்: சூப்பரா இருக்கு சார். நீங்க விக்கறீங்க… அவன் வாங்குறான்.....!!!

Wednesday, April 1, 2020

ஊரடங்கை மீறி நடந்ததா தப்லீக் மாநாடு? Aloor Shanavas about Delhi Jamaat c...

தப்லீக் ஜமாத்தின் டெல்லி கூட்டம் - சர்ச்சை என்ன..? | Tablighi Jamaat | D...

பிடல் காஸ்ட்ரோவின் கதை | Fidel Castro Life History And Achievements | Ne...

குரோணா பாடல் / பாடுபவர் தேரிழந்தூர் தாஜூதீன்

வளர்ப்பது மிகவும் விருப்பமாக இருந்து தொடர்கின்றது .

நாங்கள் சிறு வயதில் வசதியாக இருந்தாலும்  எங்கள் அம்மா அவர்கள் வீட்டுக்கு தேவையான காய்கறிகளை வீட்டின் கொள்ளையிலேயே பயிரிடுவார்கள் அதோடு நாட்டுக் கோழிகளையும் விற்பதற்காக வளர்க்காமல், எங்கள் தேவைக்கு வளர்த்து வருவார்கள் .
அந்தக் காலத்தில் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளிலும் நாட்டுக் கோழிகள் வளர்க்கப்பட்டு வந்தன. இதன் மூலம் தங்களது வீடுகளுக்கு தேவையான கோழி முட்டை, நாட்டுக் கோழி இறைச்சி ஆகியவை கிடைத்து வந்தன. கோழிகளில் அதிக அளவில் புரதச் சத்து நிறைந்து காணப்படுகிறது.