Sunday, December 29, 2019

புத்தாண்டு வாழ்த்துக்கள்

வாழ்க்கையை மாற்றுவதற்கு முயற்சி செய்யலாம்.

.

பெரும்பாலான புத்தாண்டு தீர்மானங்கள் வெற்றிக்கான வாய்ப்பு இல்லாத விருப்பங்களை விட குறைவாகவே இருக்கின்றன.

உண்மையில், சராசரியாக ஒரு சில வாரங்களுக்குள் அவர்களின் தீர்மானம் பற்றி மறந்து விடுகின்றனர்

இலக்குகளை அமைப்பது ஒரு சக்தி வாய்ந்த செயலாகும், ஆனால் சரியாக செய்தால் மட்டுமே.
ஆசைகளின் பட்டியலைச் செய்வதை விட அதிகமாக செய்ய வேண்டியது அமையும்,

தற்போதைய வாழ்க்கை நிலைமை பல காரணிகளின் கலவையாகும்.
நம்பிக்கைகள், கடந்த காலம், பழக்கங்கள், எதிர்பார்ப்புகள் மற்றும் ஆதாரங்கள் எல்லாம் அதன் காரணிகள்.

உங்களை வெற்றி பெறச்செய்தது எதற்கு தெரியுமா?


தமிழ் நாடு முழுவதிலும் பஞ்சாயத்து, வார்டு உறுப்பினர், கவுன்சிலர் பொறுப்புகளில் வெற்றி பெறப் போகும் என் அன்பான இஸ்லாமிய தோழனே! சகோதரியே உங்களை வெற்றி பெறச்செய்தது எதற்கு தெரியுமா?

தெரு விளக்கு போடவும் குடி தண்ணீர் தடை இல்லாமல் கிடைக்கவும்
சாலைகள் சரியாக அமைக்கவும்தான்!

இதைத் தவற உங்களிடம்
பெரிதாக ஒன்றும் நம் மக்கள் எதிர் பார்க்கமாட்டார்கள்!

என் அருமை இஸ்லாமிய தோழனே! தோழியரே!

#துன்யாவின் அற்ப பணத்திற்காக
மற்றவர்களிடம் நீங்கள் விலை போய்விடாதீர்கள்!

ஜின்னா ஒரு பிரிவும் ஒரு பிரிவினையும்

ஜின்னா
ஒரு பிரிவும்
ஒரு பிரிவினையும்

உலகில் வாழ்ந்து மறைந்த
சரித்திர நாயகன் எவனும்
நிம்மதியாக வாழ்ந்து
நிம்மதியாக செத்ததாக
வரலாறே இல்லை.

பாகிஸ்தான் என்றொரு
புது நாட்டைஉருவாக்கி
அதன் மூலம், இந்தியாவில்
அமைதியாக வாழும் இந்திய
முஸ்லிம்களின் தேசபற்றை
இன்றும் சந்தேகக்கண் கொண்டு
மற்றவர் பார்க்க வழி செய்த
பாகிஸ்தான் ஸ்தாபகர், ஜின்னா
வாழ்க்கையில் சாதித்தது என்ன!

Friday, December 27, 2019

செத்தும் கொடுத்தார் சீதக்காதி

சீதக்காதி இறந்தவுடன் அலர் விரும்பியபடி அவர் கொடுக்கச் சொன்னதை அவர் உறவினர்கள் அந்த கவிஞருக்கு கொடுத்தார்கள் அதனால் தான் அந்தப் பெயர் செத்தும் கொடுத்தார் .
புதைக்கப்பட்ட இடத்திலலிருந்து கை வந்து கொடுக்கவில்லை .வீடீயோவையும் பாருங்கள்

Wednesday, December 25, 2019

அமெரிக்க பாடகி ஜெனிஃபரின் இனிமையா குரலில்

அமெரிக்க பாடகி ஜெனிஃபர் அல் குர் அன் சூரத்துல் பகராவின் கடைசி ஆயத் அழகாக இனிமையாக ஓதுவதை கேளுங்கள் கேட்டல் திரும்ப திரும்ப கேட்பதற்கு தூண்டும்.

சூரிய கிரகணத்தின் போது தொழுவது (நபி வழி).

 சூரிய கிரகணத்தின் போது தொழுவது (நபி வழி).
1040. அபூ பக்ரா(ரலி) அறிவித்தார்.
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தபோது சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே நபி(ஸல்) அவர்கள் தங்களின் ஆடையை இழுத்துக் கொண்டு பள்ளிக்குள் நுழைந்தார்கள். நாங்களும் நுழைந்தோம். கிரகணம் விலகும் வரை எங்களுக்கு இரண்டு ரக்அத்கள் தொழுகை நடத்தினார்கள். பிறகு 'சூரியனுக்கும் சந்திரனுக்கும் எவருடைய மரணத்திற்காகவும் கிரகணம் பிடிப்பதில்லை. எனவே நீங்கள் கிரகணங்களைக் கண்டால் தொழுங்கள். அவை விலகும் வரை பிரார்த்தியுங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
Book : 16
1041. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'எந்த மனிதனின் மரணத்திற்காகவும் சூரியனுக்கும் சந்திரனுக்கும் கிரகணம் பிடிப்பதில்லை. அவை அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இரண்டு அத்தாட்சிகளாகும். எனவே நீங்கள் கிரகணங்களைக் கண்டால் எழுந்து தொழுங்கள்.'
என அபூ மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

When this baby hear voices for the first time...!!

40 வயது ஜின்னா - 16 வயது ருட்டியின் காதல் கதை | Jinnah Love Story

மும்பையின் பிரபல தொழிலதிபரான தின்ஷா பெடிட் தனது விருப்பத்திற்குரிய காலை செய்தித்தாள் பாம்பே க்ரானிகலை காலை உணவின்போது படிப்பது வழக்கம். வழக்கம்போல் செய்தித்தாளை புரட்டியவரின் கண்களில் எட்டாவது பக்கத்தில் இருந்த செய்தியை படித்ததும் அதிர்ச்சியில் அவரது கையில் இருந்த செய்தித்தாள் கீழே விழுந்த்து.

1918 ஏப்ரல் 20ஆம் தேதியன்று வெளியான அந்த செய்தித்தாளில், முகம்மது அலி ஜின்னா, தின்ஷாவின் மகள் லேடி ருட்டியை திருமணம் செய்து கொண்ட செய்தி வெளியாகியிருந்தது.

History of Imam Buhari Islamic Movie In Tamil Translation

நாயகம் ﷺ பிறந்தபோது, பிளந்த பாரசீக கிஸ்ரா மன்னனின் கோட்டை

ஹழ்ரத் உமர் பாருக் ரலியல்லாஹு அன்ஹு

ஹழ்ரத் உமர் பாருக் ரலியல்லாஹு அன்ஹு



இவர்களுக்கு நபி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் வம்சமாகிய குரைஷி வம்சமே. கத்தாப் என்பது இவர்களது தகப்பனின் பெயர். அபூ ஹப்ஸ் என்பது காரணப் பெயர். பாருக் என்பது சிறப்புப்பெயர். இவர்கள் யானை வருடத்துக்கு 13 வருடங்களின் பின் பிறந்தார்கள்.

பதவி யேற்றல்

முதலாம் கலீபா அவர்கள் நோயுற்றிருக்கும் பொழுதே மற்றவர்களுடன் ஆலோசித்து உமர் இப்னு கத்தாப் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களை கலீபாவாகத் தேர்ந்தெடுத்தார்கள். ஓர் உறுதி மொழிப் பத்திரம் எழுதுவித்தார்கள். முன்பாடத்திற் கூறியதுபோல் புத்திமதிகளும் உமர் (ரலியல்லாஹு அன்ஹு) க்குக் கூறினார்கள். ஆனால் அவர்களுக்குப் பின்னரே இவர்கள்

ஹிஜ்ரி 13-ம் ஆண்டு ஜமாதுல் ஆகிர் 23-ந் தேதி (கி. பி: 633 ஆகஸ்ட் 23ந் தேதி) பதவியேற்றார்கள்.

பதவியேற்றபின் மிம்பரில் (பிரசங்கமேடை) ஏறி “அரபிகள், தன்னை மேய்ப்பவுனுக்கு வழிபடும் ஒட்டகம் போல்வர்.

அதை எங்கு கொண்டு செல்கின்றான் என்பதைக் கவனித்தல் அவனது கடமையே. அதை அவன் சரியாகச் செய்ய

 வேண்டும். கஃபாவின் நாயன்மீது ஆணையாக, நான் உங்களை நல்வழியில் கொண்டு செல்வேன்

என உறுதி கூறுகிறேன்” என்று கூறினார்கள்.

அல்குர்ஆன் கூறும் ஏசுவின் வரலாறு

தமிழ் முஸ்லிம் கழகம் என்ற புதிய கழகம் உதயம்

‎Vavar F Habibullah‎  

தமிழ் முஸ்லிம் கழகம்

1.தமிழ் நாட்டில் பிறந்து,
வளர்ந்து முஸ்லிம்களாக
வாழும் தமிழ் இன
மக்களின் வாழ்வுரிமையை காப்பது

2.தமிழ் முஸ்லிம்கள், தற்போது
சந்தித்து வரும் நெருக்கடி மிக்க
சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு
அவர் தம் பிரச்னைகளை இலகுவாக
அணுக, தேர்ந்த நிபுணர்களைக்
கொண்டு சிறந்த பயிற்ச்சி அளிப்பது
மேலும், அவர்களது இயல்பான
பயம் களைய கவுன்சலிங்
அளிப்பது.

Tuesday, December 24, 2019

This December, You need to Visit Swat.+Richest Muslim Man: Four Times Richer than Bill Gates!


Merry Christmas Mr Bean | Full Episode | Mr. Bean Official

Experience the Magic of Disney Parks & Resorts | Trailer

தனித்தன்மையுடன் திகழும் தமிழகம்... பெரியாரின் பங்களிப்பு

தமிழகம் தனித்தன்மையுடன் செயல்படுவதற்கு பெரியாரின் கொள்கைகள் ஏற்படுத்திய தாக்கம்தான் காரணமா? பெரியாரின் கொள்கைகளால் தனித்து இயங்குவதாகச் சொல்லி, மெல்ல மெல்ல தனித்துவிடப்படுகிறதா தமிழகம்? பெரியார் மறைந்து நாற்பதாண்டுகள் கடந்தபிறகும் அவரும் அவருடைய கொள்கைகளும் விமர்சிக்கப்படுவது ஏன்? கடவுள் மறுப்பாளர் என்ற பிம்பத்தைக் கட்டியமைத்தது பெரியாரியச் சிந்தனைகள் பரவத் தடையாக உள்ளனவா? பெரியாரைத் தமிழ்த்தேசியர்கள் விமர்சிப்பதற்கும் இந்துத்வ இயக்கத்தினர் விமர்சிப்பதற்கும் என்ன வேறுபாடு? சமூகநீதித் தளத்தில் இந்தியாவின் பல மாநிலங்கள் ஒரே திசையிலும் தமிழகம் தனித்திசையிலும் செல்வது ஏன்?  இது குறித்து இன்றைய காலத்தின் குரல் நிகழ்ச்சியில் நாம் விவாதிக்க இருக்கிறோம்...

ஆதிக்கமற்ற சமூதாயம் மலர வேண்டும் என எல்லா தளங்களிலும் பேசியவர் பெரியார் - ஜெயரஞ்சன்

அது அவர்களுடைய கருத்து. நான் தெரிவித்தது என்னுடைய கருத்து.

இந்திய வெளியுறவு அமைச்சு மலேசியப் பிரதமர் இந்தியாவின் உள்விவகாரத்தில் தலையிடுவதாக, வெளியிட்ட செய்திக்குறிப்புக்கு,  "அது அவர்களுடைய கருத்து. நான் தெரிவித்தது என்னுடைய கருத்து. எதை நம்ப வேண்டும் என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள். ஏனெனில் நீங்கள்தான் ஊடகம்," என்றார் மலேசியப் பிரதமர்.

Friday, December 20, 2019

Muslim-களை மட்டும் குறிவைப்பது ஏன்? Senior Journalist N.Ram ( The Hindu) | Citizenship Amendment Act

நமனை அஞ்சோம்

==ரமீஸ் பிலாலி==

நமனை அஞ்சோம்

”அச்சம் தவிர்” – மகாகவி பாரதி எழுதிய புதிய ஆத்திசூடியின் முதல் ஆணை.

 அவர் அச்சத்தின் மீது தீராப் பகை கொண்டிருந்தார் என்பதை அவரின் கவிதைகள் ஆங்காங்கே காட்டுகின்றன.

 ஆத்திசூடியின் இறை வாழ்த்தில் அவர் எழுதினார்:
 ”... ... ... ... ... பல மதத்தினர்
உருவகத்தாலே உணர்ந்துணராது
 பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள்
ஒன்றே!”

 இதில், ”உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்” என்று சேக்கிழார் செப்பியதை வழிமொழிந்துள்ளார் என்று சொல்லத் தகும்.

Thursday, December 19, 2019

மன முதிர்ச்சி என்றால் என்ன? What is Maturity of Mind ?


1. மற்றவர்களை திருத்துவதை விட்டுவிட்டு
 நம்மை திருத்திக்கொள்வது.
1. Correcting ourselves without trying to correct others.

2. அனைவரையும் அப்படியே (குறைகளுடன்)
    ஏற்றுக்கொள்வது.
2. Accepting others with their short comings.

3. மற்றவர்களின் கருத்துக்களை அவர்கள்
கோணத்திலிருந்து புரிந்துகொள்ளுதல்.
3. Understanding the opinions of others from their perspectives.

4. எதை விட வேண்டுமோ அதை விட பழகிகொள்தல்.
4. Learning to leave what are to be avoided.

5. மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதை விடுதல்.
5. Leaving the expectations from others.

Tuesday, December 17, 2019

கீரைகளின் பயன்கள் / ஆரோய்கியமான அழகிய பழங்கள்

அனைத்துவகை கீரைகளின் பயன்கள் நாம் அன்றாடம் பல வகையான கீரைகளை பயன்படுத்துகிறோம். அவற்றின் பயன்களை இங்கு விரிவாக காணலாம்.

கீரைகளும், அதன் பயன்களும்
அகத்திக் கீரை:

பித்தம் தீரும்; வெப்பத்தை குறைத்து, உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும். ஜீரண சக்தியை பெருக்கும். இதை, 15 நாட்களுக்கு ஒரு முறை பயன்படுத்தி வர, உடல் ஆரோக்கியமாகும்.

அரைக் கீரை:

சளி, இருமல், தொண்டைப் புண் மற்றும் காய்ச்சல் நீக்கும். உடல் சூட்டை சமப்படுத்தும், ஆண்மை பலப்படும். மலச்சிக்கல் நீங்கும். வாத நோய்களை கட்டுப்படுத்தும்; இதயம், மூளை வலுப்பெறும்.

தேசிய குடியுரிமை திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி / தகவல் Colachel Azheem


Monday, December 16, 2019

அல்லாஹ்வைத்தவிர வேறு எவருக்கும் அடிபணியாதவர்கள்,

Saif Saif

டெல்லியில் நான்கு பெண்கள் ஒன்று சேர்ந்து ஒரு பையனை தடியடியில் இருந்து காப்பாற்றுகிற அந்த வீடியோவை பலமுறை பார்த்துவிட்டேன். அந்த பெண்களின் துணிச்சல் பிரமிக்கவைக்கிறது - குறிப்பாக அந்த கண்ணாடி போட்டு ஒரு விரலை நீட்டும் பெண்.

நாலு ஆம்பளைங்க ஒண்ணு சேர்ந்து ஒரு பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்கிற இதே நாட்டில் , நாலு பொண்ணுங்க சேர்ந்து ஒரு பையனை காப்பாற்றுகிற காட்சி பெருமிதத்தைத் தருகிறது..!

அந்த சிங்கப்பெண்களுக்கு நம் வணக்கங்களும் பாராட்டுகளும்..!

Sunday, December 15, 2019

சங்கத் தேர்தல் குறித்து ஷாஜஹான் உரை

குடியுரிமையும்... முஸ்லிம் ஜமாஅத்களின் நடை முறைகளும் / Dr.Vavar F Habibullah

குடியுரிமையும்...
முஸ்லிம் ஜமாஅத்களின்
நடை முறைகளும்
( a bit long post...
but very interesting
Takes at least 10 minutes)

முன்னுரை
இது எவரின் மனதையும்
புண்படுத்தும் நோக்கில்
வரையப்பட்ட கட்டுரையல்ல.
ஒரு மார்க் ரீதியான, சாதாரண
சர்டிபிகேட் பெறுவதற்கு கூட
ஜமாஅத் நிர்வாகம் கையாளும்
கெடுபிடிகள்...அப்பப்பா
அரசு அலுவலகங்களை விட
கரார் சட்டங்களை ஏழை
எளிய சாமானிய முஸ்லிம்கள்
மீது வீசி எறியும் முஸ்லிம்
ஜமாஅத் நிர்வாகிகள்....
நீண்ட தாடிகளின் அடர்த்தியில்
தொப்பிகள் மேக்கப்பில் ஈமானின்
பலத்தை நிரூபிக்க முயலும் இந்த
வேடதாரிகளையே முஸ்லிம்
சமூகம் மீண்டும் மீண்டும்
வாக்களித்து ஜமாஅத்
நிர்வாகிகளாக்கி
தங்களை தாங்களே
சீரழித்துக் கொள்கிறது.
யாம் பெற்ற இன்பம்
பெறுக இவ்வையகம்
என்ற துவக்க கீர்த்தனையோடு...

Friday, December 13, 2019

ஜும்ஆ பேருரை மஸ்ஜித் மிஸ்பாஹுல்ஹுதாவில் மெளலவி H.அப்துல் ரஹ்மான் பாகவி M.A.M.Phil அவர்கள் ஆற்றிய ஜும்ஆ பேருரை 13-12-2019

நீடூர்-நெய்வாசல் மஸ்ஜித் மிஸ்பாஹுல்ஹுதாவில் மெளலவி H.அப்துல் ரஹ்மான் பாகவி M.A.M.Phil அவர்கள் ஆற்றிய ஜும்ஆ பேருரை

Thursday, December 12, 2019

அப்பா எழுதுகிறேன்..


அன்புள்ள மகனுக்கு,

மூன்று காரணங்களுக்காக நான் இதை உனக்கு எழுதுகிறேன்:

1. வாழ்க்கை, நல்ல வாய்ப்பு, இடையூறுகள் ஆகிய அனைத்தும் முன் மதிப்பிட்டு அறிய(கணிக்க) முடியாதவை. தாம் எவ்வளவு காலம் வாழ்வோம் என்று எவரும் அறிவதில்லை. சில கருத்துக்களை / அறிவுரைகளை சரியான நேரத்தில்(முன் கூட்டியே) கூறிவிடுவது நல்லது.

2. நான் உன்னுடைய தந்தை. நான் உனக்கு இதனை கூறாவிடில் உனக்கு இதனை யாரும் கூறப் போவதில்லை.

3. நான் உனக்கு எழுதுவது யாதெனின், எனக்கேற்பட்ட சிறு அளவிலான சொந்த அனுபவங்களேயாகும். இது ஒரு வேளை தேவையற்ற அதிகப்படியான இதய வலிகளிலிருந்து உன்னைக் காக்க இயலும். .

கீழ்க் கண்டவற்றை நீ உன் வாழ்க்கை முழுவதும் கவனத்தில் கொள்ள வேண்டும்:

அண்ணி ஓர் அந்நியப் பெண்ணே ?? கூட்டுக்குடும்பமா? கவனம் தேவை !

அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே!
கணவனும் மனைவியும் அவர்களது பிள்ளைகளும் மட்டுமே வாழும் குடும்பத்தில் அந்நிய ஆடவர்களுக்கு பெரும்பாலும் வேலையிருக்காது. ஆனால் நம் நாட்டில் அதிகமான மக்கள் பெரும்பாலும் கூட்டுக் குடும்பமாக வாழ்கின்றனர். அது போன்ற குடும்பங்களில் பெண்களும், ஆண்களும் பேண வேண்டிய ஒழுங்குகளை நிறைய உள்ளன. குறிப்பாக அண்ணன் தம்பி திருமணம் ஆன பிறகும் இணைந்து வாழும் குடும்பங்களில் உள்ள நிலையை நாம் கண்டிப்பாக இஸ்லாமிய பார்வையில் சிந்தித்து நம்மிடையே உள்ள தவறுகளை களையவேண்டும்.
ஏனெனில், அண்ணன் மனைவியான அண்ணியிடம் தம்பியும், அல்லது தம்பியின் மனைவியிடம் அண்ணனும் கேலி கிண்டல் பேசுவது, அதிலும் குறிப்பாக இரட்டை அர்த்தத்தில் ஆபாசமான வார்த்தைகளில் பேசுவது என்பது தொடர்கதையான ஒன்றாகி விட்டது. நமது சமூகத்தில் இது ஒப்புக் கொள்ளப் பட்ட நடவடிக்கையாகி விட்டது. எந்த ஓர் ஆன்மீகவாதியும், அறிஞரும், மார்க்கமும், மதமும் இதைத் தப்பாகக் காண்பது கிடையாது.
மார்க்கம் பேசுபவர்கள் மத்தியிலும் கூட மரண உறவுகள் தாய்-மகன் உறவாகத்தான் கொண்டாடப்படும் அவலம்...

தமிழகத்தில் மறுமலர்ச்சியை உருவாக்கிய இஸ்லாமியர்...?

அரேபிய தாயகத்தில் வேரூன்றியிருந்த மடமைகளை மாய்த்து மாபெரும் மறுமலர்ச்சியை உருவாக்கிய இனியமார்க்கம் இஸ்லாம், கி.பி. ஏழாம் நூற்றாண்டில்தான் நம் தமிழகத்தில் தம் பொற்பாதங்களை மெல்லப் பதிக்கத் துவங்கியது.

சங்க காலம் முதல் தமிழகத்துடன் வணிகத் தொடர்புகளைக் கொண்டிருந்தனர் அரபு நாட்டவர். தொடக்கத்தில் யவனர் என்றழைக்கப்பட்டனர். பின்னர் இப்பெயர் மாறி முஸ்லிம்கள் என்றும், சோனகர், துலுக்கர் என்றும் அழைக்கப்பட்டனர். அவர்களது சிந்தனைகள், செயல்பாடுகள், வணக்க வழிபாடுகள் ஆகியவை தமிழ் மக்களைக் கவர்ந்தன. இனிய பேச்சும் இயல்பான வணிகத் தொடர்பும், சாதாரண மக்களை மட்டுமல்லாமல் சோழ - பாண்டிய மன்னர்களையும் கவர்ந்தன. இறைவன் ஒருவனே என நம்புதல், நாளொன்றுக்கு ஐந்து முறை இறைவனுக்கு வணக்கம் செலுத்துதல், ஆண்டுக்கு ஒரு திங்கள் உலக நலன் கருதி உண்ணா நோன்பிருத்தல், சாதி சமய பேதமின்றி அனைத்து மக்களையும் சகோதரர்களாகப் பாவித்து அன்பு செலுத்துதல் ஆகிய புதிய கோட்பாடுகள் தமிழக மக்களிடையே ஒரு புதிய சிந்தனையை ஏற்படுத்தின.

Wednesday, December 11, 2019

பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை | BBC Tamil TV News

மியான்மார் ரோஹிஞ்சா இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாக அறிவித்தார் ஆங் சான் சூ ச்சீ,  கிரீன்லாந்து பனிப்படலம் வேகமாக உருகுவதால் பெருங்கடல் நீர் மட்டம் உயர்வு, பிரிட்டன் பொதுத்தேர்தல் பிரசாரத்துக்கு வரும் அரசியல் கட்சிகளிடம், வரலாற்றுப்பிழைக்கு மன்னிப்பு கேட்க வலியுறுத்தும் இந்திய வம்சாவளி வாக்காளர்கள் உள்ளிட்ட செய்திகளை பிபிசி தமிழின் இன்றைய தொலைக்காட்சி செய்தியறிக்கையில் பார்க்கலாம்.

Citizenship Amendment Bill - தடை உத்தரவு, இணைய சேவை துண்டிப்பு - அசாமில் என்ன நடக்கிறது?

இந்திய அரசின் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக அசாமில் இரண்டாவது நாளாக போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

நேற்றைய தினம், அசாமின் பல்வேறு பகுதிகளில் கடையடைப்பு செய்யப்பட்டு, மாநிலம் தழுவிய அளவில் மிகப் பெரிய போராட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில், குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மீது இன்று (புதன்கிழமை) மாநிலங்களவையில் விவாதம் நடைபெற்று வரும் நிலையில், அம்மாநிலத்தில் இரண்டாவது நாளாக போராட்டங்கள்
தொடர்ந்து வருகின்றன.

புத்தாண்டுக்கு முன்பு உங்களை நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டிய ஒரு கேள்வி

 “பைத்தியக்காரத்தனத்தின் வரையறை ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் செய்து வருகிறது, ஆனால் வெவ்வேறு முடிவுகளை எதிர்பார்க்கிறது.”
-ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

பெரும்பாலான மக்கள் முன்னேற்றத்தை விரும்புகிறார்கள் - அதிக பணம், சிறந்த உடற்பயிற்சி, வலுவான உறவுகள் - ஆனால் அதை அடைவதற்கு ஒருபோதும் நெருங்க மாட்டார்கள், ஏனென்றால் அவர்கள் மீண்டும் மீண்டும் அதே விஷயங்களைச் செய்கிறார்கள்.
ஆண்டுதோறும், அவர்களுக்கு ஒரே பழக்கவழக்கங்கள், ஒரே மாதிரியான எண்ணங்கள், ஒரே சூழல், அதே கட்டுப்படுத்தும் நம்பிக்கைகள் மற்றும் அதே சாக்குகள் உள்ளன. எதுவும் மாறவில்லை என்பதில் ஆச்சரியமில்லை. தங்கியிருப்பதன் மூலமோ அல்லது செய்வதன் மூலமோ நீங்கள் வெவ்வேறு முடிவுகளை எதிர்பார்க்க முடியாது.

மஹல்லா ஜமாஅத் சமூகத்தின் உயிர் நாடி .

இஸ்லாமியக் கலாச்சாரத்தின் பள்ளிவாசல்கள் ஆரம்ப பள்ளிகளாக   இருக்கின்றன.பள்ளிவாசல்களை மையப் புள்ளியாக வைத்து, மஹல்லாக்கள் உருவாகின்றன.மஹல்லாக்களை மையமாக வைத்து ஊரின் நிறை,குரைத் தன்மைகள் கணக்கிடப்படுகிறன.

திருமணங்கள்  செய்து  வைத்தல்,சொத்து பிரச்சினைகளைத் தீர்த்தல்,கணவன் மனைவிக்கு மத்தியில் ஏற்படும் பிரச்சினைகளைக் களைதல். இது மட்டுமே மஹல்லா ஜமாத்தின் பொறுப்புகள் என்றெண்ணி, சமுகம் சார்ந்த முக்கிய பொறுப்புகளை புறம் தள்ளி விட முடியாது. ஒவ்வொரு மஹல்லா ஜமாஅத்திற்கும்  பல முக்கிய பொறுப்புகள் அணி வகுத்து  நிற்கின்றன.


ASSALAMUALAIKUM NASHEED

Monday, December 9, 2019

Citizenship Amendment Bill Explained குடியுரிமை சட்டத்திருத்த மசோதா - விளக்கம்

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா என்றால் என்ன? ஏன் அதனை பா.ஜ.க கொண்டு வருகிறது? இலங்கை இந்துக்கள் இதில் சேர்க்கப்படாதது ஏன்? - விரிவாக விவரிக்கிறது இந்தக் காணொளி.

DURAI MURUGAN DMK

அர்த்தமுள்ள இந்து மதம் – பாகம் 5



கண்ணதாசனின் ’அர்த்தமுள்ள இந்து மதம்’ அவருடைய உரைநடை மாஸ்டர் பீஸ் என்பதில் வேறு கருத்து இருக்க முடியாது.

அதிலும் குறிப்பாக ’ஞானம் பிறந்த கதை’ என்று உப தலைப்பிடப்பட்ட ஐந்தாம் பாகத்தை ’உரைநடைக்கவிதை’ என்றுதான் சொல்ல வேண்டும்.

படிக்கப் படிக்க அவ்வளவு அழகு. பட்டினத்தார், பத்ரகிரியார் ஆகியோரின் வரலாற்றைச் சொல்லும் அந்நூல் அவர்கள் இருவருக்கும் ஞானம் வந்த கதையைக் கூறுகிறது.

அவர் எழுதியதைப் படித்த பிறகு பட்டினத்தாரைப் பற்றி இன்னும் அதிகம் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவலை எனக்குத் தூண்டியது. இன்னும் குறிப்பாக பட்டினத்தாரின் தாயார். ஆமாம். சில ஞானிகளின் அன்னையர் ஞானிகளை உருவாக்கும் ஞானிகளாக இருந்துள்ளதை அவர்களது வரலாறு காட்டுகிறது.

ஹஸ்ரத் நிஜாமுத்தீன் அவ்லியாவின் தாயாரும் அப்படித்தான். சாப்பிட ஒன்றுமில்ல, இன்றும் நாம் கொலை பட்டினி என்பதை, ‘மகனே, இன்றும் நாம் அல்லாஹ்வின் விருந்தாளிகள்’ என்று சொல்வார்களாம்!

தேசிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு... ...

கவிப்பேரரசு வைரமுத்துவின் தமிழாற்றுப்படையில் ''புதுமைப்பித்தன்'' | Tamil...

முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவச்சிலை திறப்பு விழா முரசொலி செல்வம் பேச்சு

Chennai Central MP Dayanidhi Maran on Citizenship Amendment Bill 2019

Sunday, December 8, 2019

How to Handle Insults & Allegations - Fajila Azad


வெற்றி

Dr.Fajila Azad
(International Life Coach – Mentor – Facilitator)

dr. ஃபஜிலா ஆசாத், சர்வதேச வாழ்வியல் ஆலோசகர்

                 வெற்றி

நாம் எல்லோருமே மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றுதான் விரும்புகிறோம். மகிழ்ச்சியாக இருங்கள் என்று மற்றவர்களை மனதார வாழ்த்துகிறோம். ஆனால் என்னதான் மகிழ்ச்சி மகிழ்ச்சி என்று பேசினாலும், ஒரு இனிய நாள் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்கும் போதே மனதில் ஏதோ பதைபதைப்பு வரும். நீங்கள் விரும்பியபடியே நடந்து, உருகிய ஐஸ்கட்டியாக உச்சி முதல் பாதம் வரை உள்ளுக்குள் உற்சாக சிலீர் பரவசமாக பரவிக் கொண்டிருக்கும் போதே அடி வயிற்றில் ஒரு பயப்பந்து சுழன்று தவிக்க செய்யும்.

இந்த மகிழ்ச்சி நீடிக்குமா… இந்த சூழல் மாறாமல் இருக்குமா.. ஏதாவது அல்லது யாராவது இந்த இனிய சூழலை மாற்றி விடுவார்களோ.. இந்த மகிழ்ச்சியை ஏதாவது கவலை வந்து சூறையாடி விடுமோ… இந்த வெற்றியை, இந்தப் புகழை, நான் பழகிக் கொள்ளத் தொடங்கும் போது, அது என்னிடமிருந்து விலகிக் கொள்ளுமோ… இந்த உயரம் நிலைக்குமா.. விழுந்தால் அடி பலமாக இருக்குமோ… இப்படி என்னென்னவோ எண்ணங்கள் மனதில் சுழன்று பலரையும் மகிழ்ச்சி இல்லாமல் தவிக்க செய்யும்.

தூக்கத்தின் சிறகுகள் #நிஷாமன்சூர்

1.
உன் புன்னகைக்கும்
ஒரு கோப்பைத் தேநீருக்கும்
நடுவில்
நிகழ்வுகள் ஸ்தம்பிக்குமொரு
சிறு மரணம்,
தூக்கம்.
2.
முட்டைகளின் மீது அடைகாக்க அமரும்
தாய்க்கோழியின் ஆதுரத்துடன்
தூக்கத்தின் வெம்மையான சிறகுகள்
என் இரவுகளின் மீது போர்வையாகின்றன.
3.
தலைக்கு மேலே
மழைபொழியக் காத்திருக்கும்
கார்மேகம் போல
என்மீது
கவிந்தரவணைத்துக் கொள்ளக்
காத்திருக்கிறது,
தூக்கம்.

நிஷா மன்சூர்

Friday, December 6, 2019

நடந்த அருமையான சம்பவம்.

அருமையானவர்களே!        
இன்று நடந்த அருமையான சம்பவம்.

எமது பிரான்ஸ்
மஹல்லாவில்  ஜும்ஆ குத்பா பிரசங்கம் ஆரம்பிக்கு முன்  என் அருகில் வந்து அமர்ந்த
சிலமாதங்களுக்கு முன் இஸ்லாத்தை ஏற்ற பிரஞ்சு இளைஞர் உமர்,  திருமறையை என்னிடம் தந்து,
"சூரா கஹ்ஃப்  ஓத வேண்டும்;
அந்த பக்கத்தை எடுத்து கொடு்ங்கள்" என்று கேட்டார்.
நான் எடுத்து கொடுத்தேன்.
ஓதினார்.

இதில் என்ன பெரிய விஷயம் என்றுதான்
நினைக்க தோன்றும்.

'தமிழ் மாமணி' 'சிந்தனை சித்தர்' நீடூர் அ.மு.சயீது'



மர்ஹூம் அல்ஹாஜ் அ.மு.சயீது நாடறிந்த எழுத்தாளர். தீந்தமிழ்ப் பேச்சாளர். திக்கெட்டும் புகழ் பரப்பிய வழக்கறிஞர்.
நீடூரில் 09.10.1933 இல் பிறந்த இவர் எழுபதைத் தாண்டிய இளைஞராக. நெடுங்கால சமுதாய ஊழியராக. நீடூர் நெய்வாசல் J.M.H. அரபிக் கல்லூரியின் தலைவராக பல ஆண்டுகள் சேவை செய்தவர்.
சென்னை வானொலியில் செய்தி அறிவிப்பாளராகப் பணியாற்றியவர். சுழற்ச் சங்கத்தின் (ரோட்டரி கிளப்) முன்னாள் தலைவர். மயிலாடுதுறை பல்சமய உரையாடல் மையத்தின் இஸ்லாமியப் பிரிவுத் தலைவராக இருந்தவர்
இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகத்தின் தலைவரான இவர் உலகளாவிய நிலையில் பத்து மாநாடுகளை வெற்றிகரமாக நடத்தியவர்.

போதிய அளவு தூக்கம் என்பது என்ன?

Thursday, December 5, 2019

அன்புடன் வாழ்த்துக்கள் Kiyasudeen Sahabudeen கியாசுதீன் சஹாபுதீன் அவர்களுக்கு

அன்புடன் வாழ்த்துக்கள் Kiyasudeen Sahabudeen கியாசுதீன் சஹாபுதீன் அவர்களுக்கு
S.E.A. Mohamed Ali Jinnah,Nidur.
S.E.A.முகம்மது அலி ஜின்னா,
நீடூர்.
JazakAllah Khayr ‎
"Allah will reward you [with] goodness."

அதீத சரிவில் இந்திய பொருளாதாரம் - எச்சரிக்கும் ப.சிதம்பரம்

பொருளாதாரத்தை மீட்கும் திறன் இந்த அரசிடம் இல்லை: ப.சிதம்பரம் பேட்டி

பொருளாதாரம் அதீத சரிவை கண்டு கொண்டிருக்கிறது ஆனால் இந்த அரசு அதை சரி செய்யும் திறன் பெற்றதாக இல்லை என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

நேற்று ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் 106 நாட்கள் சிறையில் இருந்துவிட்டு, பிணையில் வெளிவந்த ப.சிதம்பரம் இன்று செய்தியாளர்களை சந்தித்து இவ்வாறு தெரிவித்தார்.

வைகைப்புயல் வடிவேலின் அரங்கம் அதிரும் பேச்சு.

வெங்காய விலையும்... நிர்மலா பதிலும்...

நபிகள் நாயகம் போதனையை பின்பற்றினால் இந்தியாவின் நிலை

Dr. Ayoob memorial song by Kiyas

How to Make Powerpoint Online

Wednesday, December 4, 2019

வீடு

வீடு

கனடாவில் 2001ல் முதன்முதலில் நான் ஒரு வீடு வாங்கிக் குடிபுகுந்தேன். டவுன் ஹவுஸ் என்றழைக்கப்படும் கூட்டுவீடுகளில் ஒன்று. எங்கள் குடும்பத்தின் ஆனந்தம் வீட்டின் சுவர்களில் எல்லாம் கூட ஒட்டிக்கொண்டு கூத்தாடியது. வீட்டை என் மகள் அழகிய பெண்சில் ஓவியமாய் வரைந்து தன் வகுப்பில் பாராட்டுப் பெற்றது. எனக்கு அந்த ஓவியம் பிடித்துப் போகவே, அதை அழகிய சட்டத்தில் இட்டு சுவற்றில் மாட்டினேன். ஆனால் மகள் வரைந்த ஓவியத்திற்கு இணையாக நான் ஒரு வரியேனும் அதில் எழுதவேண்டும் அல்லவா?

சுவர்களல்ல அறைகளல்ல
வசிப்போரின் கூட்டுயிரே
வீடு

என்று எழுதினேன். வீட்டுக்கு வருவோரெல்லாம் ஓவியத்தையும் அதன் கவிதை வரிகளையும் பார்த்து மகிழ்வார்கள். பின்னொருநாள், ஓரிரு ஆண்டுகளுக்குப் பின் அதை ஒரு முழுக்கவிதையாய் எழுதினேன். பச்சைமிளகாய் இளவரசி என்ற என் நான்காவது கவிதை நூலிலும் அச்சேற்றி வெளியிட்டேன். அந்த நூலுக்கு அணிந்துரை தந்த எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்கள் அந்த வரிகளைக் குறிப்பிட்டு “கவிதைகள் முழுக்க தத்துவ வரிகளுக்கு குறைவில்லை. ஏதோ ஒரு தத்துவத்தை விளக்குவதற்காக எழுதப்பட்டவைகள் அல்ல அவை, ஆனால் பொருத்தமாக ஆங்காங்கே தானாகவே அமைந்துவிடுகின்றன.” என்று பாராட்டி இருந்தார். இப்போது மீண்டும் அந்த கவிதையை வாசித்து என் நினைவுகளை அசைப்போடுகிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

நீடூர் அலி அண்ணன்

நீடூர் அலி அண்ணன்


இந்தமுறை என் மகன் திருமணத்திற்காக நான் ஊர் சென்று நான்கு மாதங்கள் இருந்தேன். அந்த நான்கு மாதங்களில் அண்ணன் நீடூர் அலி அவர்களைச் சந்தித்தது மறக்கமுடியாது

நீடூர் அலி அண்ணனை எனக்குப் பத்தாண்டுகளாகத் தெரியும். என் கவிதைகளின் மகா பிரியர். என் கவிதைகளை அவர் தளத்தில் அழகாக வடிவமைத்து எப்போதும் இட்டுக்கொண்டே இருப்பார்.

நீடூர் அலி அண்ணன் அவர்கள் 82 வயது இளையவர். ஆமாம் இன்னமும் அவர் உள்ளம் 16ஐத் தாண்டாமல் அப்படியே ஆணியடித்தாற்போல் நிற்கிறது.

நண்பர்களே, உங்கள் முதுமையில் உங்களுக்கு முதுமை வேண்டாமா, மனதை இளைமையாக சிறு பிள்ளையாகவே கள்ளம் கபடம் இல்லாமல் வைத்திருங்கள். அதுதான் என்றும் பதினாறு இளமை பதினாறு

மின்னல் வீரன் உசைன் போல்ட் கதை | Usain Bolt Story | News7 Tamil

இமெயில் தமிழன் சிவா அய்யாதுரை கதை

Tuesday, December 3, 2019

உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றேன்



 கவிஞர் புஹாரி: ஒரு தேநீர் விருந்துக்கு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றேன்

கனடா ரொரன்ரோவில் இருந்து
அன்புடன் புகாரி
[05:40, 03/12/2019] கவிஞர் புஹாரி: ஒரு தேநீர் விருந்துக்கு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றேன்

கனடா டொராண்டோவில் இருந்து
அன்புடன் புகாரி

Monday, December 2, 2019

அன்புடன் வாழ்த்துக்கள் சமீர் அலி அவர்களுக்கு

ALLAHS ARTISTRY IN COLOURTamil Part 4of 4 mpg YouTube

ALLAHS ARTISTRY IN COLOURTamil Part 3of 4 mpg YouTube

Nidur Dr. Shafi talks...

எதைச் சொல்லலாம் ! எதைச் சொல்லக்கூடாது !

Abu Haashima
சந்தோஷங்களைச் சொல்லலாம்
சங்கடங்களை
சொல்லக்கூடாது !
சுகத்தைச் சொல்லலாம்
சுகவீனத்தை
சொல்லக்கூடாது !
உண்டதைச் சொல்லலாம்
உண்ணாமையை
சொல்லக்கூடாது !
நிறைகளைச் சொல்லலாம்
குறைகளை
சொல்லக்கூடாது !

WE WISH YOU Hassane Marecan

Life is precious gift from God, May you have many such occasions in your life.

WE WISH YOU Hassane Marecan
Hassane Marecan
Work and education

United Nations Human Rights Council
Observar
Governor's Office
King Fahd University of Petroleum and Minerals
Master in Human Rights · Dhahran, Ash Sharqiyah
University of Madras, Chennai
Chepauk, Tamil Nadu,



Sunday, December 1, 2019

Dr.G.Kanagaraj Bsc- M.B.B.S.,DLO - Nidur, Mayiladuthurai.



Dr. G Kanagaraj in Nidur, Mayiladuthurai.
டாக்டர். ஜி கனகராஜ் M.B.B.S.,ENT specialist
மருத்துவர்
எங்க ஊர் டாக்டர் கனகராஜ் அவர்கள்
Dr.G.Kanagaraj Bsc- M.B.B.S.,DLO
சிறந்த மனிதநேயம் நிறைந்தவர். அன்பனாதபுரம் வகைராவில் வந்ததால் அன்பையே அடிநாதமாகக் கொண்டு தொண்டுள்ளம் நிறைந்தவர்.
நீடூ்ர் நெய்வாசலில் பல ஆண்டுகள் பொதுமருத்துவம் பார்த்துவந்த டாக்டர். ஜி கனகராஜ்
இறப்பு செய்தி... Doctor. கனகராஜ் இறந்து விட்டார்...மிகவும் வருத்தம். ஊர் மக்கள் அனைவருக்கும் மிகவும் அதிர்ச்சியான வருத்தமான செய்தி. எங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தார் .அவரரைப் பற்றிய அருமையான கட்டுரை முன்பே nidurseasons சில் எழுதி இருந்தேன்.

Saturday, November 30, 2019

வட இந்தியா தென் இந்தியா

நீடூர் சகோதரர்கள் 40 வயதுக்கு மேல் 40 வயதுக்கு கீழ்

நீடூர் சகோதரர்களின் சந்திப்பு.khor Fakan Tour கவ்ர் ஃபக்கான் கடற்கரை

நீடூர் சகோதரர்களின் சந்திப்பு.khor Fakan Tour கவ்ர் ஃபக்கான் கடற்கரை

நீடூர் சகோதரர்களின் சந்திப்பு.khor Fakan Tour
khorfakkan beach fujairah கவ்ர் ஃபக்கான் கடற்கரை
கோராபகன் கடற்கரை பிஜூயிரா


கோர் ஃபக்கன் (அரபு: خَوْر فَكَّان, ரோமானியமாக்கப்பட்ட: கவ்ர் ஃபக்கான்) என்பது ஷார்ஜா எமிரேட்ஸின் ஒரு நகரம் மற்றும் உறைவிடம் ஆகும், இது ஐக்கிய அரபு எமிரேட்ஸின் (யுஏஇ) கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ளது, ஓமான் வளைகுடாவை எதிர்கொண்டு புவியியல் ரீதியாக சூழப்பட்டுள்ளது புஜைராவின் எமிரேட். புஜைரா நகரத்திற்குப் பிறகு கிழக்கு கடற்கரையில் இரண்டாவது பெரிய நகரம் [1] கோர் ஃபக்கனின் அழகிய விரிகுடாவில் அமைக்கப்பட்டுள்ளது, இதன் பொருள் "க்ரீக் ஆஃப் டூ ஜாஸ்". இது கோர் ஃபக்கான் கன்டெய்னர் டெர்மினலின் தளம், இப்பகுதியில் உள்ள ஒரே இயற்கை ஆழ்கடல் துறைமுகம் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் முக்கிய கொள்கலன் துறைமுகங்களில் ஒன்றாகும்.

அங்கிட்டும் இங்கிட்டும் !


‘அல்லாஹ்வை வணங்க வா’ எனும்
அழைப்பொலி கேட்குமுன்
அதிகாலையில்
அடுப்பங்கரையில் கேட்கும்
அவள் புழக்கம் !

‘அங்கிட்டு’ பிள்ளைகளை எழுப்பிவிட்டு
‘இங்கிட்டு’ இவரை உசுப்பிவிடனும்
இதற்கிடையே
‘உங்கிட்டு’ பால் பொங்கி அழைக்கும் !

அலாரம் அலறினாலும்
அசைந்து கொடுக்காத குடும்பத்தை
அவள்
மிக்ஸி எழுப்பிவிடும் !

Thursday, November 28, 2019

இறை இல்லம் மத நல்லிணக்க கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் மன்றங்களாகவே..

Vavar F Habibullah

இறை இல்லம்
மத நல்லிணக்க கலாச்சாரத்தை
பிரதிபலிக்கும் மன்றங்களாகவே
அமெரிக்காவின், பெரும்பாலான
தேவாலயங்கள்,
மசூதிகள்,
கோவில்கள் திகழ்வது
ஆச்சரியம் தருகிறது.

லைப்ரரி,ஜிம்,பார்க்,
விளையாட்டு அரங்கம்,
சமூக அரங்கம்,உணவு விடுதி
ஸ்விம்மிங் பூல் என்று...
இறைமையையும், வாழ்வியலையும்
ஒன்றிணைக்கும் பாலமாக திகழும்
மசூதி ஒன்று, சமீபத்தில் என்
பார்வையை கவர்ந்தது.

Best College Catering and Nursing Mayiladuthurai

Nagore Hanifa 120 Songs Best10

Ayoob Nidur நீடூர் அய்யூப் / தொழில் நுட்பங்களை அறிய

இப்படியும் குடும்பம்

வாழ்க்கையென்றால் இப்படியும் இருக்க வேண்டும் அடுத்தவருக்கு அப்பத்தான் வக்கீலுக்கே காலம் ஓடும்

Wednesday, November 27, 2019

மேலப்பாளையம் முஸ்லிம் கல்விக் கமிட்டி அலுவலகம்.

மேலப்பாளையம் முஸ்லிம் கல்விக் கமிட்டி அலுவலகம்.

180க்கும் மேற்பட்ட ஆசிரியப் பெருமக்கள் .20க்கும் மேற்பட்ட அலுவலர்கள்.

5500 மாணவச்செல்வங்கள்...
இரண்டு பெரிய கல்வி நிலையங்கள்.

முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி.
கோல்டன் ஜூபிலி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.

140 கண்காணிப்பு கேமராக்கள்.

அன்பும் நட்பும் மிகச் சிறந்த விஷயங்கள்

ஆற்றங்கரை ஓரமாக வந்துகொண்டிருந்த வழிப்போக்கன்
ஒருவனுக்கு வைரக்கல் ஒன்று கண்ணில் பட்டது...

அது வைரம் என்றறியாமல், விலை போகுமா என்ற
சந்தேகத்துடன்
கடைத்தெருவுக்கு எடுத்து வந்தான்..

அவன்
கையில் வைரம் இருப்பதைப் பார்த்த
வியாபாரி ஒருவன், இருபது ரூபாய்க்கு தன்னிடம்
அதை விற்குமாறு கேட்டான்...

ஆனால்
வழிபோக்கனோ பேரம் பேசித்தான் பார்ப்போமே என்ற
எண்ணத்துடன் 25 ரூபாய் கேட்டான்...

ஐந்து ரூபாய்
அதிகம் கொடுக்க விரும்பாத அந்த வியாபாரியும் 20
ரூபாய்க்கு பேரம் பேசினான்...

இதைக் கவனித்த
மற்றொரு வியாபாரி 25 ரூபாய் கொடுத்து அந்த
வைரத்தை வாங்கிக்கொண்டு சென்றான்...

ஆத்திரமடைந்த வியாபாரி, அந்த
வழிப்போக்கனை பார்த்து, “அட முட்டாளே! அதன்
மதிப்பு பல ஆயிரம் பெறும்...

அறிவில்லாமல்
விற்றுவிட்டாயே!” என்று திட்டினான்...

அதற்கு அவன், “அந்தக் கல்லுக்கு என்னுடைய
மதிப்பு அவ்வளவுதான். ஆனால் அது வைரம், அதன்
மதிப்பு தெரிந்தும் அதைத் தவறவிட்ட நீ தான்
மிகப்பெரிய முட்டாள்” என்றான்..

தென் கொரிய தலைநகர் சியோலில் உள்ள ஹலால் தெரு



Nazeer Suvanappiriyan

ஒரு பிரச்சனை ஏற்பட்டது ரபீஆவுக்கு.

Nooruddin DarulIslamfamily

ஒரு பிரச்சனை ஏற்பட்டது ரபீஆவுக்கு. அவரது நிலத்தில் ஓர் ஈச்சமரம் இருந்தது. அபூபக்ரின் நிலமும் ரபீஆவின் நிலமும் அருகருகே இருந்ததால் அந்த மரம் யார் நிலத்திற்கு உரியது என்பது பிரச்சனையாகி விட்டது.

ரபீஆ திண்ணைத் தோழர். அபூபக்ரு நபியவர்களின் அணுக்கத் தோழர். ரலியல்லாஹு அன்ஹுமா.

சர்வேயர், எண் இட்ட எல்லைக்கல் எதுவும் இல்லாத காலம் அது. ரபீஆ அந்த மரம் தன்னுடையது எனக் கூற, அபூபக்ரோ அது தன்னுடைய நிலத்தில் உள்ளது என்று வாதிட்டார். விவாதம் சற்றுச் சூடேற, அபூபக்ரு வாய் தவறி ரபீஆவைப் பற்றிச் சுடுசொல் ஒன்று கூறிவிட்டார். அவ்வளவுதான். ஆனால் வாயிலிருந்து வார்த்தை வெளியே விழுந்த அடுத்த கணமே தம் தவறு புரிந்து விட்டது அபூபக்ருக்கு.

சமீபத்தில், அமெரிக்க வாழ் இசை நிகழ்ச்சியில்

Vavar F Habibullah
சமீபத்தில், அமெரிக்க வாழ்
இந்திய நண்பர்கள் சார்பில்
நடந்த ஒரு இசை நிகழ்ச்சியில்
கலந்து கொண்ட போது...


வரலாற்றில் சிறந்த திருமண நுழைவாயில்

உன் நச்சரிப்பு இல்லாத நாள் அமைதியாக இருக்குமென நினைத்திருந்தேன் இத்தனை நாள்.

Brindha Sarathy


உன் நச்சரிப்பு இல்லாத நாள்
அமைதியாக இருக்குமென
நினைத்திருந்தேன்
இத்தனை நாள்.

இவ்வளவு வெறுமை தருமென நிச்சயம் எதிர்பார்க்கவில்லை.

சின்ன சின்ன விஷயங்களுக்குக் கூட
நீ முகம் சுளிப்பதும்
முணுமுணுப்பதும்
மனம் வாடி உழல்வதும்
எரிச்சலைத் தந்ததுண்டு எனக்கு.

Apps that help Muslims practice Islam in daily life

Time in today’s world has become the most precious item but everyone is short of it. Days pass in a flick of an eye, months and years seem to pass in a blazing speed. Everyone has become so busy in life that people don’t even have time for themselves and to practice religion. What does Islam say about this shortage of time & what can help Muslim practice Islam in such a daily routine, here we have some Islamic apps that could help Muslims.

Prophet said,  “The Hour will not begin until time passes quickly, so a year will be like a month, and a month will be like a week, and a week will be like a day, and a day will be like an hour, and an hour will be like the burning of a braid of palm leaves.”

Nidur Nasrul Muslimeen Higher Secondary School Ms Sultana Parveen Specia...

Tuesday, November 26, 2019

A kind word is a form of charity. – ஒரு கனிவான சொல் தர்மத்தின் ஒரு வடிவம்.

A kind word is a form of charity. – Muhammed (PBUH) ஒரு கனிவான சொல் தர்மத்தின் ஒரு வடிவம். S.E.A. Mohamed Ali Jinnah,Nidur. S.E.A.முகம்மது அலி ஜின்னா, நீடூர். JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎ "Allah will reward you [with] goodness."

உறவினர்களைப் பேணுதல் | முஃப்தி உமர் ஷரீஃப் | Mufti Omar Sheriff Qasimi T...

68.Surah Al Qalam Tamil Translation | சூரா அல் கலம் | The Merciful Serva...

36.Surah Yaseen Tamil Translation | Mishary Rashid Alafasy | சூரா யாஸீன்...

T.S R Mohamed Asik அவர்களுக்கு அன்புடன் வாழ்த்துக்கள் (காணொளி காட்சி )

T.S R  Mohamed Asik அவர்களுக்கு அன்புடன் வாழ்த்துக்கள்

S.E.A. Mohamed Ali Jinnah,Nidur.
S.E.A.முகம்மது அலி ஜின்னா,
நீடூர்.
JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎
"Allah will reward you [with] goodness."

அழகிய பள்ளிவாசல்கள்


அல்லாஹு அக்பர் என்று முழங்கும் பள்ளிவாசல்
அல்லாஹு அக்பர் என்று முழங்கும் அழகிய தலமே பள்ளிவாசல்

S.E.A. Mohamed Ali Jinnah,Nidur.
S.E.A.முகம்மது அலி ஜின்னா,
நீடூர்.
JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎
"Allah will reward you [with] goodness."

Sunday, November 24, 2019

மானங்கெட்ட மனிதன் உனைப் போலுண்டா பாரில்?

 Kalaimahan Fairooz
மானங்கெட்ட மனிதன்
உனைப் போலுண்டா பாரில்?
-கலைமகன் பைரூஸ்

எல்லாமும் தமதாக்கி எண்ணெய்வளங்கொண்டு
ஏற்றமிலாக் காரியங்கள் தாம்புரியும்
எட்டப்பர் காரிய்ஙகள் தாம்புரியும்
மத்தியகிழக்குத் தனவான்களே!
அறாபியன் எனும் பெயர்தரித்த கூனனே!

நாசங்கள் தான்விளைப்பாருடனிணைந்து
ஆத்திகன் நீ நாத்திகனாய்மாறி
எல்லாமும் நாம் இழந்து நடுத்தெருவில்நிற்க
முதலைக் கண்ணீர் தானும் விடுகிறாயா
இல்லை - அதுவும் இல்லை...!
ஆடு நனைகிறதாய்க் கூறி
ஓணாய் அழுவதாய்
பாசாங்கல்லவா
செய்கின்றாய்!

*Beautiful Message written in arabic language* அரபு மொழியில் காணப்பட்ட அற்புதமான மகாவாக்கியங்கள்.

*Beautiful Message written in arabic language*

அரபு மொழியில் காணப்பட்ட
அற்புதமான மகாவாக்கியங்கள்.
لكن
تذكر ان ما تصنعه الْيوم لنف jbسك ستكسبه في الغد سالبا او موجبا
لكن تذكر أيضا ان الحياة عبر
قال تعالى
فَاعْتَبِرُوا يَا أُولِي الْأَبْصَارِ
وايضاً قال
فَاتَّقُوا اللَّهَ يَا أُولِي الْأَلْبَابِ الَّذِينَ آمَنُوا
A rich man looked through his window and saw a poor man picking something from his dustbin ... He said, Thank GOD I'm not poor;

தனது வீட்டு குப்பைத் தொட்டியில் ஆகாரம் தேடிக் கொண்டிருந்த ஏழையைப் பார்த்த செல்வந்தன் இவ்வாறு கூறினான்:
"ஓ இறைவா உனக்கு நன்றி. நான் ஏழை இல்லை".

*نظر أحد الأغنياء من خلال نافِذتِه فرأى فقيراً يلتقط شيئاً ما من سلَّة القُمامَة فَحَمَد الله وشَكَرَهُ أنه ليس فقيراً*؛

The poor man looked around and saw a naked man misbehaving on the street ... He said, Thank GOD I'm not mad;

Mind Your Language

Saturday, November 23, 2019

எழில் மிகுந்த ஏதென்ஸ்




கிரேக்க நாட்டின் ஏதென்ஸ் நகரம் சாக்ரடீஸ் காலத்தில் மட்டுமல்ல, இன்றும் எழில் நகரம்தான். அது கிரேக்கத்தின் தலைநகரம். மூவாயிரம் ஆண்டுக்கால வரலாறு உடையது.

மக்களாட்சி என்று சொல்கிறோமே அந்த ஜனநாயகத்தை உலகுக்கு அறிமுகம் செய்த நகரம். மேலை நாட்டிற்குரிய பண்பாட்டிற்கும், நாகரிகத்திற்கும் தொட்டிலாகவும் விளங்கிய நகரம் அது.



ஏதென்ஸ் என்னும் பெயர் வந்தது எப்படி? கிரேக்கர்களுடைய பெண் கடவுள் ஏதெனா ஆவார். ஏதெனா என்பதிலிருந்து ஏதென்ஸ் வந்திருக்க வேண்டும் என்பது வரலாறு கூறும் செய்தி இது.

நினைப்பது நடக்கவில்லையா ? நிம்மதி இல்லையா ?

வியட்நாம், சைகோன் நகரில் தமிழ் இஸ்லாமிய கலைநயத்துடன்...இறையில்லம்...



வியட்நாம் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் முதல்
இடத்தை வகிக்கிறது ..அங்கு தமிழ் முஸ்லீம் வணிகர்களால் கட்டப்பட்டு தமிழில் பயான் சொல்லும் இறை இல்லம் இதுவாகும்
Idroos Mohamed Mohamed Illias

மாஷா அல்லாஹ்...

வியட்நாமில் கூத்தாநல்லூர் முஸ்லிம்களால் கட்டப்பட்ட இறையில்லம்...

வியட்நாம், சைகோன் ஹோ சீ மின் (Vietnam - Saigon - Ho Chi Minh) நகரில் தமிழ் இஸ்லாமிய கலைநயத்துடன்...

1935 ஆம் ஆண்டு கூத்தாநல்லூர் இஸ்லாமிய வணிகபெருமக்களால் இந்த இறையில்லம் (Jamia Al Muslimin - Dong Do Mosque) அழகு தமிழகத்தில் உள்ள இறையில்லங்களை போன்றே கட்டப்பட்டுள்ளது...

இயற்கை சூழலுடன், பரந்துவிரிந்த இந்த இறையில்லத்தில் இன்றும் தமிழில் தொழுகை நேர தகவல்கள் இடம் பெருகின்றது...

திரைக்கடலோடியும் திரவியம் தேடும் நம் சொந்தங்களின் இஸ்லாமிய சேவைகளை எல்லாம் வல்ல அல்லாஹ் அங்கீகரிப்பானாக !
ஆமீன்...
Abdul Muthalif
1970 இல் நான் இங்கு தொழுது இருக்கின்றேன்
Mohamedali Jinnah

உமர் (ரலி) அவர்களின் ஆட்சியை வரலாற்று ஆசிரியர்கள் மிகவும் சிறப்பாக குறிப்பிடுகிறார்கள்..

Saif Saif

நபிகளின் மறைவுக்குப் பின் கலீஃபாக்கள் ஆட்சி நடைபெற்றதை அனைவரும் அறிவோம்..

இதில் உமர் (ரலி) அவர்களின் ஆட்சியை வரலாற்று ஆசிரியர்கள் மிகவும் சிறப்பாக குறிப்பிடுகிறார்கள்..

அதில் நிகழ்ந்த பல விஷயங்களை எழுத எனக்கு ஆசையுண்டு.. ஆனால் விரிவு கருதி சில விஷயங்களை மட்டும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்..

இவருடைய ஆட்சிக் காலத்தில் தான் ஆயிரக்கணக்கான பள்ளி வாசல்கள் எழுப்பப்பட்டது..

#கஃபத்துல்லாஹ் விரிவாக்கி கட்டப்பட்டது..
அதன் மீது திரையிடப்பட்டது..

#மஸ்ஜிதுந்_நபவி பள்ளிவாசலும் புதுப்பிக்கப்பட்டு விரிவாக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டது..

அயோத்தி ராமன் அழுகிறான் -கவிப் பேரரசு வைரமுத்து


கங்கை காவிரி இணைக்க வேண்டும்
கர சேவகரே வருவீரா
காடுகள் மலைகள் திருத்த வேண்டும்
கர சேவகரே வருவீரா
வறுமைக் கோட்டை அழிக்க வேண்டும்
கர சேவகரே வருவீரா
மாட்டீர்கள் சேவகரே மாட்டீர்கள்
நாம் உடைப்பதற்கே பிறந்தவர்கள்
படைப்பதற்கில்லை
வித்துன்னும் பறவைகள்
விதைப்பதில்லை
விளைந்த கேடு
வெட்கக் கேடு

Thursday, November 21, 2019

வள்ளுவர் எந்த மதம்? (கட்டுரை)






வெற்றிடம்


Vavar F Habibullah

பிறந்தோம்,வளர்ந்தோம்,
வாழ்ந்தோம்,வீழ்ந்தோம்
மறைந்தோம் என்பது எல்லாம்
சாமானியனுக்கும்,சகலகலா
வல்லவனுக்கும் ஒன்று தான்.

வெந்ததை தின்று,விதியை
நொந்து,மரணத்தை சுவைத்து
வாழ்வை முடிப்பது என்பது
சாமானிய மனிதனுக்கும்
சரித்திர நாயகனுக்கும்
பொது விதி தான்.

பாசத்துடன் வாழ்த்துக்கள் Nazreen Salman அவர்களுக்கு

பாசத்துடன் வாழ்த்துக்கள் Nazreen Salman அவர்களுக்கு
படங்கள் பேசும்
"A picture is worth a thousand words"
Mohamed Ali Mohamedali Jinnah

S.E.A. Mohamed Ali Jinnah,Nidur.
S.E.A.முகம்மது அலி ஜின்னா,
நீடூர்.
JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎
"Allah will reward you [with] goodness."

Wednesday, November 20, 2019

மிசா கொடுமையால் வார்த்தெடுக்கப்பட்ட சுயமான தலைவர் ஸ்டாலின்

கவிப்பேரரசு வைரமுத்துவின் தமிழாற்றுப்படையில் திருமூலர்

வைரமுத்துவின் தமிழாற்றுப்படை - செயங்கொண்டார்

வைரமுத்துவின் தமிழாற்றுப்படையில் மறைமலையடிகள்

வைரமுத்துவின் தமிழாற்றுப்படையில் பாவேந்தர் பாரதிதாசன்

கவிப்பேரரசு வைரமுத்துவின் தமிழாற்றுப்படையில் கவிஞர் கண்ணதாசன்

Tuesday, November 19, 2019

கவிப்பேரரசு வைரமுத்துவின் தமிழாற்றுப்படையில் ''தொல்காப்பியர்''

கவிப்பேரரசு வைரமுத்துவின் தமிழாற்றுப்படையில் 'ஔவையார்

கவிப்பேரரசு வைரமுத்துவின் தமிழாற்றுப்படையில் தந்தை பெரியார்

வைரமுத்துவின் தமிழாற்றுப்படை - பேரறிஞர் அண்ணா

கவிப்பேரரசு வைரமுத்துவின் தமிழாற்றுப்படை - கலைஞர் கருணாநிதி

கவிப்பேரரசு வைரமுத்துவின் தமிழாற்றுப்படையில் பாரதியார்!

வைரமுத்துவின் தமிழாற்றுப்படையில் 'திருவள்ளுவர்

மிசா விவகாரத்தில் மாஃபா பாண்டியராஜன் செய்வது Dirty Tricks - இவன் தந்திரன் | Ivan Thanthiran

கலைஞரின் நெஞ்சுக்கு நீதி | Episode - 1/ Episode - 2 / Episode-03/ Episode - 4


THE MAN IN MY LIFE

by .Dr.Vavar F Habibullah



அந்த நாட்களில்...
எனது தந்தை, ஒரு செயின்
ஸ்மோக்கர்.இந்தியா வந்தால்
பெர்கலி தான் அவரது
பேஃவரைட் பிராண்ட்.
நான் தான் கார்ட்டன்
கார்ட்டனாக சிகரெட்
வாங்கி வந்து, அவரிடம்
கொடுப்பேன்.அப்போது
நான், ஒரு பள்ளி மாணவன்.

சிகரெட்டை மிகவும் ஸ்டைலாக
உதட்டில் பொறுத்தி,லைட்டரில்
பற்ற வைத்து புகையை உள்ளிழுத்து
நாசி வழி வெளிவிடும் அழகை நான்
பார்த்து ரசிப்பதை பார்த்து...
கேட்டாரே ஒரு கேள்வி !