Wednesday, July 8, 2020

சிராங்கூன் டைம்ஸ் மாத இதழ்

சிராங்கூன் டைம்ஸ் மாத இதழ்5

எங்கள் குழு
நிறுவனர்
முஸ்தபா


சிங்கப்பூரின் தமிழ் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும் வகையில் பல்வேறு சேவைகளை ஆற்றி வரும் திரு முஸ்தபா அவர்கள் தனது முஸ்தபா தமிழ் அறக்கட்டளை மூலம் தமிழ்ப் பணிக்கு உதவிகள் பல செய்து வருகிறார். தனது அறக்கட்டளை தஞ்சை பல்கலைக் கழகத்துடன் இணைந்து ‘கரிகால் சோழன் விருது’ எனும் பெயரில் ஆய்விருக்கை ஏற்படுத்தி சிங்கை, மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து வெளிவரும் சிறந்த நூலுக்கு நடுவர் கொண்டு விருதுகள் அளித்து வருகிறார். சிங்கப்பூர் எழுத்தாளர்களின் தமிழ், இலக்கியம் வளர்ச்சிக்கென இலாப நோக்கமில்லாத ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ இதழையும் நடத்தி வருகிறார்.


முதன்மை ஆசிரியர்
ஷாநவாஸ்

இராம நாதபுரம் மாவட்டம் நத்தம் (அபிராமம்) என்ற ஊரில்  பிறந்தவர். திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் இளங்கலை (இரசாயனம்) பட்டமும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் பொது நிர்வாகத் துறையில் முதுகலைப் பட்டமும் பெற்றவர்.  25 ஆண்டுகளுக்கு  முன்பு சிங்கப்பூரில் குடியேறிய இவர் சிங்கப்பூர் தமிழ் முரசு நாளிதழில் சிறுகதைகளும் உயிர்மை மற்றும் இணைய பத்திரிக்கைகளில் கவிதை, கட்டுரைகள் எழுதி வருகிறார். முஸ்தபா அறக்கட்டளையும் தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழகமும்  இணைந்து வழங்கும் கரி காற்சோழன் விருது (2015) இவரது ‘அயல் பசி’ நூலுக்குக் அளிக்கப்பட்டது. மேலும், 2016ஆம் ஆண்டிற்கான மு.கு.இராமச்சந்திரா புத்தக நினைவுப்பரிசு ‘மூன்றாவது கை’ சிறுகதைத் தொகுப்பு நூலுக்கு வழங்கப்பட்டது மேலும் படிக்க .serangoontimes.com
-----------------------------------------------------------------
எமது சிராங்கூன் டைம்ஸ் மாத இதழ்5ஆம் ஆண்டு
நிறைவை ஓட்டி மலேசியா, இலங்கை எழுத்தார்கள தரமான
சிறுகதை,கவிதை, புதினம் எழுதி அனுப்பினால் பிரசுரிக்கப்படும்

சிங்கையின் ஒரே மாத இதழ்
சிங்கை அரசில் பதிவு பெற்றது
இணைய தளத்தில் விரைவில்
வருகின்றது
ஐந்தாண்டக தொடரந்து
தொய்வின்றி தொடருகின்றது
என் மின்னஞ்சல்
Musthafa@agccapital.co
WhatsApp +65 96190125
நன்றி என் தமிழ் உறவுகளே

No comments: