Friday, July 3, 2020

நாய்க்குப் பங்கிடுவோம் ..!


Hilal Musthafa


அழித்திடுவோம்--கெட்ட
அருவருப்பை
அழித்திடுவோம்
அழித்திடுவோம்!
தேசம் பழிக்கும்-- தீமை
ஒழித்திடுவோம்
ஒழித்திடுவோம்!
( அழித்திடுவோம்...

எரிதழல் கொண்டு வாடா--தோழா
ஈனப் பிறப்பைக் கருக்கிப்
பொசுக்கிடுவோம்!

தெருவில் நிறுத்தித் தோலைக்--கல்லால்
தேய்த்தே உறித்து நாய்க்குப்
பங்கிடுவோம்!
( அழித்திடுவோம்...)


ஓடி ஆடிய பூவை--உறிஞ்சி
உலர்த்திச் சிதைத்த பேயை
வதைத்திடுவோம்!

பாடித் திரிந்த குழந்தை--பாவி
பதறக் கிழித்தான் அவனைச்
சிதைத்திடுவோம்!
( அழித்திடுவோம்..)

மனித வாழ்வே வாழாத--சீச்சீ
மானம் கொன்ற மிருகத்தைப்
புதைத்திடுவோம்!

இனியும் காலம் தாழாமல்--தீயக்
கிருமிக் கூட்டப் பரவலைத்
தடுத்திடுவோம்!
( அழித்திடுவோம்...)

பெண்மை கொல்லும் பேடி--இவனோ
பேசும் பொருளே இல்லை
மிதித்திடுவோம்!

உண்மை நேசம் எங்கே?--அதனை
உயரத் தூக்கி நம்மில்
விதைத்திடுவோம்!
( அழித்திடுவோம்...)

ஆணின் உறுப்பை ஆணோ--இங்கே
அடுத்த தலைமுறை தரவும்
தரித்துள்ளான்!

ஏனோ இந்தக் கொடுமை?--வெறியன்
இனத்தின் உறுப்பை அறுத்தே
எறிந்திடுவோம்!
( அழித்திடுவோம்...)

ஞானம் பேச வேண்டாம்--கொடிய
நீசர் காக்கும் மனித
நேயம்வேண்டாம்!

தானம் தந்து அழிவை--யார்தான்
தழுவிக் கொள்வார் போலி
வேஷம்வேண்டாம்
( அழித்திடுவோம்...)

சட்டம் ஆயிரம் ஓட்டை--அதன்
ஜன்னல் ஏறிக் குதித்தே
தப்புகின்றார்!

சட்டம் விதியைப் புதுக்கும்--அதனைக்
கக்கம் வைத்துப் பாய்ந்தே
கடக்கின்றார்!
( அழித்திடுவோம்...)

பன்றிக்கு எதற்கு மனிதமுகம்?--ஒரு
பாவிக்கு எதற்குப் புனிதவரம்?
சரித்திடுவோம்!

கன்றுக்குப் பால்தரும் தாய்ப்பசு--வெறும்
கல்லுக்குத் தருமா? உதைத்தே
தகர்த்திடுவோம்!
( அழித்திடுவோம்...)

Hilal Musthafa

No comments: