Thursday, March 18, 2021

Noor Saffiya 💞 இறைசிந்தனை மாநபி சரிதமே!

 Noor Saffiya


💞  இறைசிந்தனை

மாநபி சரிதமே!

மகிழும் பூவாரமே!

மிளிரும் பூமானே!

மனதில் மணமாகுதே!

மகிழ்வை பூக்களாய்

கோர்த்து வைத்தேன்!

மனதில் அவைதமை

சேர்த்து வைத்தேன்!

அதில் புரிந்ததை

தெரிந்து வைத்தேன்!

அதன்படி நடந்திடவே

ஆசை வைத்தேன்!

இளமை சிந்தனையில்

விட்டு விட்டேன்!

இனியும் தள்ளாது எம்மில்

நினைத்து விட்டேன்!

இஷ்க் எப்படி என்றே

சிந்தித்து விட்டேன்!

இறைசிந்தனை என்றே

நிலைத்து விட்டேன்!

இறகாய் பறந்தே நான்

விரித்து விட்டேன்!

இவ்வுலகின் அழகு

ரசித்து விட்டேன்!

இரசூல் சொல் செயல்

அறிந்து விட்டேன்!

இதுவே,நியதி என்றே

நிலைத்து விட்டேன்!

இயம்பும் வாழ்த்துகள்

இறை வந்தனமே!

இதுவெல்லாம் நம்மின்

இதய நற்செயலே!

இனியும் கடத்தாது தந்த

இறை அருட்கொடையே!

இரசூல் ஹுப்பினாலே

இன்ப கவிபிறப்பே!

இதயம் களிப்படைந்திட

கவி பிறப்பாக்கினான்!

இருளை அகற்றிடவே

இரவின் முழிப்பாக்கினான்!

இரவின் மடியினிலே

இரசூல் நனைவாக்கினான்!

இதுவும் இறை நம்மின்

இறை ரகசியமாக்கினான்!

சுபுஹானல்லாஹ்!

எத்தனை விதமாய் தான்

நம்மில் இருக்கிறான்!

எத்தனை அற்புதம்

நம்மில்

காட்டுகிறான்!

எத்தனை விதமாய் நம்மில்

காட்சியாகிறான்!!

எத்தனை கதவுகள் நம்மில் திறக்கிறான்!

உதயம் காண நாடினேனே

உன்னுள்ளே!.

உவகை பூக்க பாடினேனே

உன்னுள்ளே!

ஊற்றாய் ஊறினேனே

உன்னுள்ளே!

உறிஞ்சது தேனமிர்தமும்

உன்னுள்ளே!

அத்தனையும் ரப்பே

அரும்பினாய்!

அதெல்லாம் காலம்

கடந்தே திருத்தினாய்!

அனைத்து தரஜாவுமே

காட்டினாய்!

அதிலிருந்து விலகாது

அரவணைத்தாய்!

அல்ஹம்துலில்லாஹ்!

அஸ்ஸுக்ரன்லில்லாஹ்!

      அழகிய ஹக் திக்ரும்

     அஹ்மதரின் ஸலவாத்

          துதித்து நாவினில்

              நனைவோம்.!

                    ஆமீன் !!

                யா  ரப்பே  !!

            என்  ஹுப்பே  !!

          ஸல்லல்லாஹு

          அலா முஹம்மத்

          ஸல்லல்லாஹ்

    அலைஹிவ ஸல்லம்💞

🖋நூர்ஷஃபியா காதிரியா

No comments: