Monday, March 22, 2021

அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் Abrar Ahmed (Anbuman Abrar) அப்ரார் அகமது

 அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில்   Abrar Ahmed (Anbuman Abrar) அப்ரார் அகமது 




மமக வின் மாநில வழக்குரைஞர் அணிச்செயலாளர் சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்.அப்ரார் அகமது 

 அப்ரார், அல்தாஃப் ஆகியோரின் தந்தை சிறந்த மார்க்க அறிஞருமான மௌலவி அபூபக்கர்  அவர்கள்

அப்ரார் அகமது அவர்கள்  தம்பி தந்தி தொலைக்காட்சி உதவி ஆசிரியர்  அல்தாஃப் அகமது


"கவிஞர் நா முத்துக்குமார் தான் எனக்கு கவிஞர் யுகபாரதியை  அறிமுகம் செய்தவர் .இருவருமே பாடல் எழுத முயற்சி செய்து கொண்டிருந்தவர்கள் .97 இல் கல்லூரி இலக்கிய இதயங்கள் இணைந்து "சிருஷ்டி" இளைஞர் மையம் தொடங்கினார்கள் .அதிலிருந்த ஒரே ஒரு  பள்ளி மாணவன் நான்தான்" -  அப்ரார் அகமது 



"முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் தனி வழக்கறிஞர் குழுவில் நானும் இருந்த போது அவர்களுக்காக ஒரு செவ்வியல் பாடல் தொகுப்பு தயாரித்தேன் .அதில்  ஒரு பாட்டு எழுத பாரதியிடம் கேட்டுக் கொண்டேன் .மிக அழகான பாடல் .எந்த அம்மாவுக்கும் பொருந்தும் அந்த பாடல் .அதை  நித்தியஸ்ரீ பாடினார்.ஆனால் பாரதியின் பெயரை பதிவு செய்யவில்லை ". -  அப்ரார் அகமது 


ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் கடந்த இரு அவைகளில் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக மமக வழக்கறிஞர் அணி செயலாளர் அப்ரார் அஹ்மது கலந்து கொண்டு இந்தியாவில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை பதிவு செய்துள்ளார். 

கடந்த மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா வின் 43 வது அமர்வில் கலந்து கொண்டு குடியுரிமை சட்டம் குறித்த முஸ்லிம் மற்றும் இதர சிறுபான்மை மக்களின் உணர்வுகளை எடுத்துரைத்தது குறிப்பிடத்தக்கது.


விகடன் டிவியில்அப்ரார் அகமது  பேட்டி 

அன்பும் நன்றியும் Saran Ram

https://www.youtube.com/watch?v=WZLxuwLw2fM


Abrar Ahmed  அப்ரார் அஹமது அவர்கள் எனது இல்லம் வந்தபோது .பிரான்ஸிலிருந்து வந்திருந்த  எனது அண்ணன் மகன் அன்சாரியும்  உடனிருந்து வரவேற்று கவனித்து உபசரித்து ஊரை சுற்றிக் காண்பித்தார்.

அப்ரார் அஹமது அவர்கள் பாரிஸ் சென்றிருந்தபோதும்  அன்சாரி  அப்ரார் அஹமது அவர்களை வரவேற்று கவனித்து உபசரித்து ஊரை சுற்றிக் காண்பித்தார்


அப்ரார் அஹ்மத் அவர்கள் ஒரு சிறந்த வழக்கறிஞர். அவரிடம் கலந்துரையாடலில் ஈடுபட்டபோது நிறைய விவரங்களையும் செய்திகளையும் அறிந்துக் கொண்டேன். அவர் மிகவும் சேவை மனப்பான்மை கொண்டவர். அவரது சேவைகள் தொடர வாழ்த்துகின்றேன்.



அவர்கள் "(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்" எனக் கூறினார்கள்.(குர்ஆன் 2:32)

'உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்


நம்மைப்பற்றி நாம் அறிவோம்

நம்மை வாழ்வித்தவர்களை

நமக்கு கல்வி கொடுப்பவகளை

நம் உறவுகளை

நம் நண்பர்களை

நன்கு அறிந்து கொள்வதில்

நமக்கு மிகவும் மகிழ்வும் ,பலனும் .பலமும் ,உந்துதல் சக்தியும் கிடைக்கும்


உங்களில் உயர்ந்தோர் தான் பெற்ற கல்வியை மற்றவருக்கு எடுத்து உரைப்பவரே உயர்ந்தோர் ஆவர். அது தன் புகழ் நாடி இல்லாமல் இறையருள் நாடி இருக்கும்போது அந்த சேவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த சேவையை செய்தவருக்கு நன்மை வந்தடைவதுடன் அதனால் மற்றவர்களும் பயனடைகின்றனர்.

இறைவன் அருளால் தன்னால் முடிந்த அளவு தான் பெற்ற அறிவை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பதில் ஒரு நிறைவு கொள்கின்றார்.சிறந்த ,மனிதநேயம் பெற்ற மிக சிறந்தவர்கள் வரிசையில் Abrar Ahmed

(Anbuman Abrar) ஒருவர்! "


Abrar Ahmed

(Anbuman Abrar)

Works at Advocate, High Court of Madras


Worked at Advocate


Madras High Court


Studied International law at finchley college .london .


Studied at Dr. Ambedkar Government Law College, Chennai (Madras)


Lives in Chennai, India

https://www.facebook.com/anbudanabrar


உண்மையை உரக்கச்சொல்கின்ற கூரிய சிந்தனையாளர் . மனிதநேயத்திற்க்கும் , மதநல்லிணக்கத்திற்க்கும், சமுதாய முன்னேற்றத்திற்க்கும் , அடக்குமுறைக்கு எதிராக ஆணித்தரமான குரல் கொடுப்பவர்

இவர் சிறந்த இந்திய அரசியல்வாதி மமக வின் மாநில வழக்குரைஞர்

அப்ரார் அகமது அவர்களை  வாழ்த்தி மகிழ்வதில் நாம் மகிழ்வடைகின்றோம் .

இறைவன் அருளால் தொடரட்டும் இவரது  சேவைகள் .

இறைவன் அவருக்கு நீடித்த ஆயூளை கொடுத்து அருள இறைவனை பிரார்திக்கின்றோம்

Jazaakum'Allah Khairan.

நன்றி

அன்புடன் ,

அ.முகம்மது அலி ஜின்னா


JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎

"Allah will reward you [with] goodness."


No comments: