Friday, March 12, 2021

உதவுதல்

 உதவுதல் எப்போதும் இருந்தது

அதனை செய்ய வேண்டியது இருந்தது

செய்ய வேண்டியது உதவியாக இருந்தது
செய்ய வேண்டியtதை கேட்க ஒருவர் இருந்தார்
செய்ய வேண்டியதை கேட்காதவர் ஒருவர் இருந்தார்
செய்ய வேண்டியதை அறிந்தும் அறியாமல் இருந்தோம்
செய்ய வேண்டியதை செய்திருந்தால் கிடைக்க வேண்டியது கிடைத்திருக்கும்
செய்ய வேண்டியதை செய்திருந்தால் நிறைவுகள் கிடைத்திருக்கும்
செய்ய வேண்டியதை செய்யாமல் இருந்தோம்
செய்ய வேண்டியதை செய்யத் தவறியதால்
நண்மையான தருணங்கள் நம்மை விட்டு நழுவிப் போயின
நன்மைகள் சேர்ந்திருக்கும்
மரியாதை கூடியிருக்கும்
வாழ்வில் பிடிப்பு கூடியிருக்கும்
உதவி செய்தவருக்கும்
உதவியை பெற்றவருக்கும்
உள்ளம் உவகை கொண்டிருக்கும்
இதயங்களில் சரங்களை ஒன்றுபடுத்தும் ஒலிகள் ஒலித்திருக்கும்
இரண்டு இதயங்களும் இணைந்திருக்கும்
புன்னகை
பணிவு ,
நட்பு ,
நேசம்,
பிரகாசமான முகங்கள்
உண்மையான ஆர்வம்,
கண்களின் இமைகள் அழகாய் ஜொலித்திருக்கும்
செயலால் ஆன்மா நிறைந்திருக்கும்
வாழ்வை உயர்த்திருக்கும்
உதவுதல் அனைத்திற்கும் உயர்வு தரும்
குறள் 613:
தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னுஞ் செருக்கு.
மு.வரதராசன் விளக்கம்:
பிறர்க்கு உதவிசெய்தல் என்னும் மேம்பட்ட நிலைமை முயற்சி என்று சொல்லப்படுகின்ற உயர்ந்த பண்பில் நிலைத்திருக்கின்றது.

No comments: