Sunday, July 16, 2017

என்னிருப்பு ....!

மலரில் மயங்கி 
மனதில் மகிழ்ந்து 
இதழில் புன்சிரியுடன் 
இன்முகம் காட்டி 
நற்குணம் கொண்டு 
உறவுகளுடன் கூடிவாழ்ந்து 
ஆயுளை கூட்டி 
வெறுப்பை துறந்து 
மனிதம் பேணி 
சுகந்தம் சுவாசித்து

மகரந்தம் முகர்ந்து
முற்றிலும் படர்ந்து 
தேனை அருந்தி 
திருப்தியில் திளைத்து 
இணையுடன் பிணைந்து 
வனப்பில் வீழ்ந்து
வீராப்பில் எழுந்து 
ராஜநடை நடந்து 
மலர் வனத்தில் வாழ்ந்து
இறைவனை பணிந்து 
நானிருப்பேன்

ராஜா வாவுபிள்ளை

No comments: