Saturday, September 23, 2017

வாழ்க்கைத் தரு ...!

விதையின் வீரியம்
எண்ணத்தில் வேண்டும்
விழுந்ததும் முளைத்தெழும்
மனஉறுதி வேண்டும்
வேரின் உறுதி
நிலைப்பாட்டில் வேண்டும்
தண்டின் நிமிர்வு
தன்மானத்தில் வேண்டும்
கிளைகளின் பரப்பு
உறவுகளில் வேண்டும்

இலைகளின் செயல்போல
உழைப்பு வேண்டும்
பூவின் மணம்போல
குணம் வேண்டும்
காயின் தரம்போல
செயல்பாடு வேண்டும்
கனியின் சுவைபோல
பயன்பாடு வேண்டும்
வெட்டினாலும் துளிர்விடும்
திறன் வேண்டும்
மொத்தத்தில் .....
கனிதரும் தருபோல
வாழ்க்கை வேண்டும்.
*

ராஜா வாவுபிள்ளை

No comments: