Monday, September 4, 2017

எண்ணங்களால் ஒரு உலகம் ....! + இல்லறம் ....!

எண்ணங்களால் ஒரு உலகம் ....!
அத்தனையும்
ஒரு நொடியில் நிகழும் நிதர்சன நிழல்
எல்கைகள்
இல்லாத ஒரு பால்வெளி பாதை
ஏற்றதாழ்வு
இல்லாத ஒரு சமசீர் ஆலயம்
செல்லுமிடத்தில்
சேர்ப்பிக்கும் ஒரு வழிப்பாதை
எண்ணுவதெல்லாம்
கிட்டும் ஒரு அட்சயபாத்திரம்
அளவில்லா
கற்பனையை அள்ளித்தரும் கருவூலம்

உறக்கவிழிப்பு
பேதமில்லாத இல்லாத ஒரு கருவறை
எண்ணவியலா
கருப்பிடிப்பின் மகரந்த மாயம்
தொடக்கமும்
முடிவும் தெரியாத ஒரு புதிர்
எண்ணங்கள்
ஆட்சிசெய்யும் ஒரு வினோத உலகம்
எண்ணத்தை கனவில் வடித்து
உடனடி பலனை மனத்திரையில் சுகிக்கும் மாயஉலகம்
இயற்கையுடன்
ஒன்றிக் கலந்த ஒரு நிதர்சனம்
செயற்கைகள்
சேராத ஒரு உயிர்ப்பிட
-------------------------------------------------------------
இல்லறம் ....!
உழைத்து களைத்த
வேளையில் மனைவந்து
மகிழும் மாலை....!
கற்புடை மனையாள்
அறுசுவை உண்டியை
பரிமாறும் வேளை....!
இரவினில் இனிக்கும்
இன்பங்கள் வேண்டிநிற்கும்
கட்டிளங் காளை....!
அந்திமந்தார மயக்கத்தில்
தலைவனுக்கு அதுவே
அனுதினமும் வேலை ....!
கொடுத்தும் எடுத்தும்
பகிர்ந்திட இன்பம் விளைவதே இல்லறம் !!

ராஜா வாவுபிள்ளை

No comments: