Friday, March 27, 2020

கொரோனா தான்டவம்!


Abdul wadooth
9361834787

கொரோனாவே! மானுடத்தை கொல்லாதே!விசந்துப்பும்
நர-நாவே! நோய்தொற்றும் நச்சுயிரே! போயொழி!

இத்தூண்டு வைரஸ் இருக்குமிடம்  தெரியவில்லை
கொத்தாக மனிதர்களை கொன்று குவிக்கிறதே!

வவ்வால் பாம்பென்று வரிசையாய் பயனித்து
ஒவ்வொரு தேசத்தின் உயிர்கொண்டு போகிறதே!


ஐநாவை உதவிக்கு அழைக்கின்ற வேளையிலே
சைனாவிலிருந்து ஏன் சவப்பெட்டி கொண்டு வந்தாய்?

விரட்டினால் போவதற்கு நீயென்ன அடுக்களை பூனையா?
மிரட்டிப் பார்க்காதே! மனிதனிடம் உன் மீசையை முறுக்காதே!

பல்லாயிரம் வைரஸை பார்த்துக் கடந்துவந்தோம்..
பொல்லாத கிருமி உன்னால் பூமிக்கு பேரழிவு!

உலகிருக்கும் மக்களுக்கு ஒற்றுமையே வலிமை என்றோம்
விலகிருத்தல் இப்போது ஒற்றுமையிலும் வலிதென்றோம்!

முடக்கம்பெற்று நாடே முடங்கிக்கிடக்கு! பிணங்களை
அடக்கம் செய்யவும் இடமில்லை! இந்நிலை

தொடர்ந்தால் மனிதகுலம் பூமியில் உய்யுமோ?
கடவுளே காப்பாற்று! குரானாக்கு தீயிட்டு!

தொற்றுநோய் வைரஸால் தீயாக உருவெடுத்து
முற்றும் பரவி முழுஉலகும் முடங்கியதே!

சுயஒழுக்கம் கட்டுப்பாடு சுத்தம்பேணி நெஞ்சிலெழும்
பயமுழுக்கும் விட்டொழித்து! பாதுகாத்துக் கொள்ளுங்கள்!

வருமுன்காப்பது தனிநபருக்கு
எளிது தாகும்
பெருமக்கள் கூட்டத்துக்கு..பெரிய சவால் ஆகாதா?

மானமிழந்த பின்னாலே ஆடைவாங்கி என்னபயன்?
ஞானமிழந்த பின்னாலே போதனைகள் வீண்தானே!

எனக்கு வராதென்று அலட்டிக் கொள்ளாதீர்கள்! சின்ன
துணுக்குதான் குரானா! தொற்றினால் கண்ணறியாது!

பெட்டிப்பாம்பாக தனிமையிலே அடைந்திருங்கள் வீட்டை
விட்டுவெளியேறாதீர்! வைரஸ் வீரியத்தை கூட்டாதீர்?
--
தகவல் :முதுவை ஹிதாயத்

No comments: