Wednesday, March 11, 2020

உண்மைச் செய்திகளை மட்டும் பரப்ப வேண்டும்

*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத் அல்லாஹி வ பரக்காத்துஹூ...*

 புனித மக்கா, மக்கா அல்முகர்ரமாவில் இஷாத் தொழுகைக்குப் பின் இமாமுல் ஹரமைன் அப்துர் ரஹ்மான் அஸ்ஸுதைஸி அவர்கள் ஆற்றிய விழிப்புணர்வுப் பேருரையின் சுருக்கமான தமிழாக்கம் அனைவரும் கேட்போம் அதிகமதிகம் பகிர்வோம்.

*புகழனைத்தும் அந்த ஓரிறைவனுக்கே..*

ஸலாத்தும் ஸலாமும் உயர் படைப்பான உயிரினும் மேலான நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது உண்டாகுக..!

அன்புள்ளம் கொண்ட நல்லடியார்களே..!

கடந்த சில நாட்களாக உலகை அச்சுறுத்தும் இறைவனின் சோதனை நோய்த்த் தொற்று... இவ்வனைத்தும் நாம் இறைவனிடம் மீழ்வதற்கு இறைவனால் வழங்கப்பட்ட சோதனையே தவிர வேறில்லை நாம் அவனை முழுமையாக சார்ந்திருப்பது மிக முக்கியமானதாகும்

_*இறைவன் தனது திருமறையில்... நாம் உங்களை பயத்தாலும் பசி பட்டினியாலும் பொருளாதார மற்றும் உயிர் சேதங்களாலும் நஷ்டங்களாலும் சோதிப்போம் என்ற வசனத்தின் அடிப்படையில்*_

சவூதி அரேபியா அரசாங்கத்தின் தற்காலிக அனைத்து நடைமுறைகள் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்புத்தர வேண்டும்.


*நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ள எடுக்கப்படும் அரச நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்புத் தர வேண்டும் காரணம் தற்காப்புச் செய்து கொள்வது சிகிச்சை செய்வதை விட சிறந்ததாகும்!.*

அதே போன்று தற்காலிகமாக ஹரமில் உட்புறத்தில் சுத்தம் செய்ய இரவு பூட்டப்பட்டு பின் திறக்கப்படும் இது சில தினங்களுக்கு மட்டுமே தற்காலிகமானது

*இன் ஷா அல்லாஹ் விரைவில் மிகத் துரிதமாக பணிகள் துவங்கப்படும்.*

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய அடிப்படையில்
தொற்று நோய் அச்சம் இருக்கும் ஊருக்குச் செல்ல வேண்டாம் தொற்று நோய் பீடித்திருப்பவரை விட்டும் சிங்கத்தை பயந்து ஓடுவதைப்போல விலகி ஓடுங்கள் என்ற ஹதீஸின் அடிப்படையில்

இவ்விரு புனிதத் தலங்களும் முற்றிலும் ஷரீஅத்தைப் பின்பற்றி நடக்கும் என்ற அடிப்படையில்
இவ்விரண்டு புனிதத் தலங்களின் நலனை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்

இவ்வனைத்து ஏற்பாடுகளயும் அரசாங்கம் இறை விருந்தினர்கள் உம்ரா ஹஜ் செய்வோரின் நலன்களுக்காகவே இவ்விரண்டு புனிதத் தலங்களின் ஊழியர் (மன்னர்) பல தரப்பட்ட அறிவிப்புகளைச் செய்யதுள்ளார்கள்

உங்கள் ஒத்துழைப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்

உண்மைச் செய்திகளை மட்டும் பரப்ப வேண்டும் பொய்த்தகவல்களைப் பரப்புவதை விட்டும் தவிழ்ந்து கொள்ள வேண்டும்

கூடிய விரைவில் இறையுதவியால் சகல பாதுகாப்புடன் அனைத்துப் பணிகளும் துவக்கப்படும்

அல்லாஹ் அருள் செய்ய பிரார்த்தனை செய்கின்றோம்

நாள் 13 ரஜப் 1441 ஹிஜ்ரி
ஞாயிற்றுக்கிழமை இஷாவுக்குப் பின்

தமிழாக்கம் :
*மவ்லவி அபூபக்கர் சித்திக் யூசுஃபி*

*அல் ஃபலாஹ் ஹஜ் உம்ரா சர்வீஸ்.* 🌎

No comments: