Friday, October 4, 2019

பிள்ளைகளுக்காக ஓரு தந்தை யின் துஆ

அல்லாஹும்ம லக ல் ஹம்து வலகஷ் ஷுக்ர்
رَبَّنَا هَبْ لَـنَا مِنْ اَزْوَاجِنَا وَذُرِّيّٰتِنَا قُرَّةَ اَعْيُنٍ وَّاجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ اِمَامًا‏ 
“எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக!. 25:74

ஏக இறைவா!
உனக்கே எல்லாப்புகழும்.
உனது அளவில்லா கருணையினால் எங்களுக்கு குழந்தைச் செல்வத்தைக் கொடுத்த வல்லவனே!உனக்கே எல்லாப் புகழும்.

எங்கள் பிள்ளைகளை உடல் நோய் , மன நோய்களை விட்டும் காப்பாயாக!
எங்களின் ஆண் பிள்ளைகளும்,பெண்பிள்ளைகளும் இம்மை மறுமைக்கான கல்விகளை கற்பவர்களாக ஆக்குவாயாக!
அவர்களுக்கு நல்ல நண்பர்களை த் தருவாயாக!
வழி கெடுக்கும் தோழர்களை விட்டும் அவர்களைப் பாதுகாப்பாயாக!
திருமண வயதை அடைந்து விட்ட எங்கள் பிள்ளைகளுக்கு நல்ல மண வாழ்க்கையை அமைத்துத் தருவாயாக!
பள்ளிகளுக்கும் பணியிடங்களுக்கும் செல்லும் எங்கள் செல்வங்கள் எவ்வித ஆபத்துமின்றி வீடு திரும்ப நீ பாதுகாவலானக இருப்பாயாக!
எங்களின் ரப்பே! எங்களின் பிள்ளைகளை எங்களுக்கு சோதனையாக ஆக்கிவிடாதே!

எங்கள் பிள்ளைகள் நாங்கள் வாழும் காலமெல்லாம் தங்களின் சொல்லாலும் செயலாலும் எங்களின் மனம் குளிரச்செய்வாயாக!
அவர்கள் நல்ல அமலுடன் யாரிடமும் கையேந்தாமல் ஹலாலான வருமானத்துடன் நீண்ட நாள் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ அருள்புரிவாயாக!
அவர்கள் தொழுபவர்களாகவும்,ஜக்காத் கொடுப்பவர்களாகவும். சமுயதாய பணிகளில் ஈடுபாடு உடையவர்களாகவும் ஆக்குவாயாக!

எங்களின் மரணத்திற்கு பிறகும் அவர்கள் எங்களுக்கு துஆ செய்பவர்களாக ஆக்குவாயாக!
கருணையுள்ள ரஹ்மானே! எங்களுக்கு நீ கருணை காட்டி குழந்தை செல்வத்தைக் கொடுத்தது போல் எங்கள் உறவினர்கள் நண்பர்கள் மற்றும் யார் யாருக்கெல்லாம் குழந்தை செல்வம் இல்லையோ அவர்களுக்கு குழந்தை பாக்கியத்தைத தருவாயாக!
வயது முதிர்ந்த இப்ராஹீம் நபிக்கு இஸ்மாயீல் நபியை கொடுத்த ஏக இறைவா! குழந்தைக்காக ஏங்கித்தவிக்கும் எங்கள் சகோதரிகளுக்கு அவர்கள் மனம் குளிர குழந்தை செல்வத்தை அருள்வாயாக!
அல்லாஹும்ம ஸல்லிஅலா ஸய்யித்னா முஹம்மத் வலா ஆலி முஹம்மத் வாபாரிக் வஸல்லிம் அலைஹி
வல் ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்
ஆமீன்

Kaniyur Ismail Najee Manbayee

No comments: