Friday, October 2, 2015

கலைமகள் ஹிதாயா ரிஸ்வி அவர்களுடன் ஒரு நேர் கானல் .. - நேர் கானல் : கிண்ணியா பாயிஸா அலி

'இலக்கிய வழிப் பயணத்தில் இன்னும் தன்னை இளையவளாகத் தான் கருதிக் கொண்டிருக்கின்றார்''

எனதுகவிதைகளில்,யாரும் இலக்கணக் குற்றங்களை தேடிக் கொண்டிருக்கத் தேவையில்லை.
ஏனெனில் !நான் இலக்கண ஏடுகளை எட்டிப் பார்த்ததுமில்லை தமிழ் மொழியை கற்றவளும் அல்ல. அதனால்தலைக்கனங் கொண்டு மார் தட்டிப் பேசுவதுமில்லைஎன்று கூறுகின்றார்

கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

அவர்களுடன் ஒரு நேர் கானல் ..


நேர் கானல் : கிண்ணியா பாயிஸா அலி


....................................................................................................... தென்றலே கவிபாடும் தென்கிழக்கு மண்ணின் கிராமம் ஒன்றின் தெருக்கோடியில் நின்று கொண்டு கூழான் கல்லொன்றை கூலிக்கெடுத்தாவது விழிகளை மூடிக் கொண்டு வீசினால் விர்ரென்று விரைந்தேகும் அக் கல் விழும் இடம் ஒரு கவிஞனின் வீடாக இருக்கும் இல்லாவிட்டால் ஒரு எழுத்தாளனின் தலையாக இருக்கும்.
கன்னித் தமிழின் கழுத்துக்கு கனகமணி மாலையிட்டு விண்ணுலகம் விரைந்திட்ட முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாந்த அடிகளார்.அவர் அன்புச் சீடன் ஆசுகவி புலவர்மணி ஆ.மூ.சரிபுதீன் போன்ற ஆன்றோர்களும் ;வாடிநிற்கும் பயிராய்,வாழ்வோடிந்த உயிராய்,வரண்டு போன நதியாய் கிடந்த ஈழத்து இலக்கியத்தை வளப்படுத்தி வாகை சூடிய சான்றோர்களும் பிறந்து சரித்திரம் படைத்த மண் தென் கிழக்கு மண்.அம் மண்ணில்
வைரக்கற்களோடு வைரக்கல்லாக தன்னையும் பதித்துக் கொண்ட பெண் படைப்பாளி தான்இந்தஅன்பான

சகோதரி கலைமகள் ஹிதாயா றிஸ்வி..ஆம்

கிழக்கு மாகாணம்,அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்தமர்ஹும் வைத்திய கலாநிதி அப்துல்மஜீத் ஜே .பி ,மர்ஹுமா ஸைனப் மஜீத் தம்பதிகளின் அன்பு மகள் தான் இந்த அன்புள்ளம் கொண்ட
சகோதரி கலைமகள்ஹிதாயாரிஸ்வி
................................................................................................
வினா :
நீங்கள் சுமார் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக எழுத்துப் பணியில்இருந்து வருகின்றீர்கள். இது பற்றி சொல்லுங்கள் சகோதரி

விடை : பணத்தை எல்லோராலும் மண்ணிலிருந்து தேடலாம், ஆனால் கற்பனையில் உருவாகும்
யதார்த்தங்களை எல்லோராலும் தேட முடியாதே!
மகத்தான மாற்றங்களை உருவாக்கும் வல்லமை பெற்றவை இந்த இரத்த புஷ்டியுள்ள
ஆக்கங்களாகும். வானைப் பார்த்து “உருவாகும்” கற்பனைகளை விட மண்ணில் இருந்து
“உருவாகும்”யதார்த்தங்களும்சிறப்பானவைகளேயாகும்.
“கவிஞன் பிறக்கின்றான்! அவன் செய்யப்படுபவன் அல்ல! என்பது போல!கவிதைகளும் “
செய்யப்படுபவை”அல்ல!
ஆனால் கவிஞன் பிறந்து வளர்கின்றான்.
கவிதைகளோ வளர்ந்த பின்பே பிறக்கின்றன. இதுவே எனது சிந்தனைகளில் தூவும் தூறல்
எழுத்துக்களாகும்.
................................................................................................
வினா : உங்களின் இலக்கிய அனுபவம் பற்றிஅறிந்து கொள்ள விரும்புகின்றோம் …அது பற்றி
சொல்லுங்கள் சகோதரி ….?

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்த மொழி தமிழ் மொழி. இம்
மொழியை நான் படிக்க வில்லை . வேறு ஒரு மொழியைப் படித்தேன். அதனால் எனக்கு
தமிழ் மொழியில் (இலக்கியத்தில் ) ஆர்வம் ஏற்பட்டது. அத்தோடு,
நான் வாழும் யுகத்தில், சூழலில் மலிந்து கிடக்கும் சமூக முரண்பாடுகளையும்,
அந்த முரண்பாடுகளால் மனித குலத்திற்கு ஏற்படும் அவலங்களையும் , சித்தரிப்பதே ஆகும்.
அந்த சித்தரிப்பில் தவிக்க முடியா நிகழ்வாக கிழக்கு மாகாண சூழல் முதன்மை பெறுவதற்கான காரணம்.
எனது ஜீவித சூழல் அத்தகையதாக இருப்பதே ஆகும்.
.......................................................................................................
வினா : தமிழ் மொழியில் கல்வி கற்காத நீங்கள் மரபுக் கவிதை , புதுக் கவிதை,சிறுகதை கட்டுரை, விமர்சனம், பாடல், நாடகம் ,ஆய்வு, இப்படி பல எழுதி வருகின்றீர்கள் இது பற்றி ...?

விடை : முறையாக ஐந்து வரை ஆங்கிலத்தில் கற்று அதன் பிறகு அரபுக் கல்லூரியில் கற்று முடித்து
விட்டு உலக பாடசாலையில் அனுபவப் பாடம் கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன்.
கற்று வரும் அந்த அனுபவ பாடமே எனது எல்லா துறை வளர்ச்சிக்கும் மூச்சாகும்.
கவிதைகளோ காலங் கடந்து கூடிய சிரஞ்சீவித்துவ வரத்தைப் பெருகின்றன.
இலக்கியப் பரப்பில் , கவிதைகளுக்குரிய நிலை உன்னதமானது . அவை வெறும்
சொல்லடுக்குகளாகவோ , சோடனை வரிகளாகவோ பண்ணப்படுபவை அல்ல !
மாறாக சமுதாயத்தை நிலைக்களனாகக் கொண்டு கருவாகி , இதயத்தில் உருவாகி
அங்கிருந்து உணர்ச்சியோடும் , சத்தியா வேசத்தோடும் ”பிரசவ” மாகின்றது.
இந்த வகையில்
எனது கவிதைகளும் நானும் ,எந்த ஸ்தானத்தில் இருக்கின்றோம் ? என்பதைத் தெளிவு படுத்த வேண்டிய
கடமை என்னுடையதல்ல ! அது சுவைஞர்களாகிய உங்களின் கடமை என்பதே பொருத்தமாகும்.
எனது
கவிதைகளில்,யாரும் இலக்கணக் குற்றங்களை தேடிக் கொண்டிருக்கத் தேவையில்லை.ஏனெனில் !
நான் இலக்கண ஏடுகளை எட்டிப் பார்த்ததுமில்லை ! தமிழ் மொழியை கற்றவளும் அல்ல. அதனால் !
தலைக்கனங் கொண்டு மார் தட்டிப் பேசுவதுமில்லை ! கிழக்கு மண்ணில் பிறந்ததை பாக்கியமாகக்
கருதுகின்றேன். மரபென்றும் , புதிது தோன்றும், மல்லுக் கட்டும் இக்கால கட்டத்தில் ! நான்
கவிதையென்று பட்டதை எழுதி வருகிறேன். நான் இலக்கிய உலகில் கால் ஊன்றி உள்ளேனா
என்பதனை தீர்மானிக்க வேண்டியது
காலமும் , வாசகர்களும் , விமர்சகர்களும் தான்.
புதுக் கவிதை , மரபுக் கவிதை , நவீன கவிதை எல்லாமே கவிதை தான் கவிஞருக்கு
கற்பனை தான் முக்கியம் . கவிதைகள் என்று பிரித்துப் பார்ப்பது அல்ல.
................................................................................................வினா :
இலக்கிய உலகில் அதிகம் நேசிப்பவர் யாராவது சகோதரி உண்டா …?
விடை :
மனிதாபிமான உணர்வுமிக்க ,கலை,இலக்கியத்தின் மீது ஆத்மா சுத்தமான நேசம்
கொண்டஎல்லா மனிதர்களையும் நான் நேசிக்கின்றேன்.அவர்களை மதிக்கின்றேன் .
................................................................................................
வினா..
நீங்கள் வெளியிட்டுள்ள கவிதை தொகுதிகள் பற்றி....சொல்லுங்கள் ?
விடை :
இதுவரை எனது மூன்று கவிதை தொகுதிகள் வெளிவந்துள்ளன.

1 நாளையும் வரும் (புதுக் கவிதை)

2 தேன் மலர்கள்

(இலங்கை முஸ்லிம் பெண் கவிஞரால்
எழுதி வெளியிடப்படமுதல்

மரபுக்கவிதை)2002ல் அதற்குப் பின் மரபுக்
கவிதை நூல்
இதுவரை வேறு எந்த பெண் கவிஞரும்
வெளியிட வில்லை
என்பது குறிப்பிட தக்கது

3 இரட்டை தாயின் ஒற்றைக் குழந்தை

(புதுக் கவிதைத் தொகுதி – கவிஞர் மஸீதா
புன்னியாமினுடன்
இணைந்து வெளியிட்டது)
................................................................................................
வினா :
உங்களுக்கு கிடைத்த பரிசுகள் பாராட்டுக்கள் பற்றி…சொல்லுங்கள் ?

விடை :
- 1988 ல் இளைஞர் சேவைகள் மன்றமும்,இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சும் இணைந்து நடாத்திய
கவிதைப்போட்டியில்அகில இலங்கை ,ரீதியாகவும், மாவட்ட ரீதியாகவும் முதலாம் இடத்தைப் பெற்றமைக்காக ஜனாதிபதி விருது.
1999 ஆம் ஆண்டு “ரத்ன தீப”சிறப்பு விருது பெற்ற முதலாவது பெண் கவிஞர்
.( ரத்னதீபம் ) பட்டமும் விருதும் வழங்கிகௌரவிக்கப்பட்டது.

2002 இல் முஸ்லிம் கலாச்சார அமைச்சின் அனுசரணையோடு நடாத்தப்பட்ட உலக இஸ்லாமிய இலக்கிய மா நாட்டில் இளம்படைப்பாளிக்கான விருது
2005 ஆம் ஆண்டு மாவனெல்ல உயன்வத்தையில் நடைபெற்ற "ப்ரிய நிலா 'இலக்கிய விழாவின் போது கலை அரசி பட்டமும் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது..

2009 இல் பல்கலை வேந்தர் , ஞானக்கவி , சட்டத்தரணி , பிரதியமைச்சர்,
அல்-ஹாஜ் கெளரவ எஸ்.நிஜாமுதீன் (பா.உ)அவர்களால்

நிந்தவூர் ஆர்.கே.மீடியா பணிப்பாளர் ராஜகவி ராஹில்
(இலங்கை வானொலி அறிவிப்பாளர்அவர்களின் சார்பில் )
கவித்தாரகை "பட்டமும் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
2011 இல் லக்ஸ்டோ அமைப்பினால் கலைமுத்து ( மருத மா மணி முத்து )பட்டங்கழும் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது
2011 இல் அண்ணல் மகாத்மா காந்தி அவர்களின் ஜனனதின நினைவு விழாவின் போது கண்டி மலையாக கலை கலாசார சங்கத்தினால் கவிதைச் சிற்பி பட்டமும் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது

2012இல் அகில இன நல்லுறவு ஒன்றியம் சாம ஸ்ரீ, தேசகீர்த்தி ,கலாசூரி ,சமூக ஜோதிஆகிய நான்கு பட்டங்களும் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது
08.07.2012இல் eacsdo அமைப்பு கலை உலகில் ஆற்றி வந்த கவிதைஇலக்கிய சேவைக்காக (திறமைக்கு மரியாதை -பாவரசு பட்டமும் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது

2012இல் ஏ .எம் ராஜா , ஜிக்கி அவர்களின் ஜனனதின நினைவு விழாவின் போது மலையாக கலை கலாசார சங்கத்தினால் இலங்கையின்சிறந்த பெண் கவிஞருக்கான பட்டமும் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது

2012இல் இலங்கை தேசிய கவிஞர்கள் சம்மேளனத்தின் 23 வது விருது வழங்கல் மற்றும் கௌரவிப்பு விழாவில் அம்பாறை மாவட்டத்தில்தெரிவு செய்யப்பட்ட போது காவிய ஸ்ரீ,(காவியத் தங்கம்) எனும் பட்டம்கிடைக்கப் பெற்றது
இன்னும் பல உள்ளது இவை என் எழுத்துக்கு கிடைத்தஅங்கீகாரமாகும்

ஆனாலும் இவைகளை விட நான் எனது இலக்கியப் பணிப் பயணத்தில்மிக மிக உயர்வான விருதுகளை பெற்று உள்ளேன் அவை எனக்கு கிட்டிய நேச உள்ளமிக்க நல்ல உள்ளங்களின் உறவுககள் மட்டுமே மா பெரிய விருதுகளாக கருதுகின்றேன் சகோதரி
................................................................................................
வினா :
உங்களை பற்றி சிறப்பு குறிப்பு, உங்கள் இலக்கிய சேவைகள் பற்றி சொல்லுங்கள்....?

விடை
என்னைப்பற்றி சொல்வதாயின் பெரிதாக எதுவுமேசொல்வதற்கு இல்லை அன்பான குடும்பத்தில் பெற்றோருக்கு 5வது பிள்ளையாகபிறந்ததேன்
5பெண்களும் 5ஆண்களும் பெற்றோரின் வாரிசுகள் படிக்கும் வயதிலே
என் பாசமிகு தந்தையை இழந்து விட்டேன் அதுவே எனது சோதனைக் காலம் அண்மையில் அன்பானஉயிர் தாயாரையும் இழந்து விட்டேன்

நான் சாய்ந்தமருதுவைப் பிறப்பிடமாக் கொண்டவள் பொல்கஹாவெல (குருநாகல்) நகர் புகுந்தஇடமாகும் மிக மிக அன்பான கணவர்பாசமான
குழந்தைகள் சந்தோசமாய் வாழ்கின்றேன்
இலக்கிய சேவைகள் பற்றி சொல்வதாயின்
இலங்கையிலுள்ள தடாகம் கலை இலக்கிய வட்டத்தின்அமைப்பாளர்.
இலங்கையிலுள்ள தடாகம் கலை இலக்கிய மலரின்பிரதம ஆசிரியர்.
இலங்கை வானொலி முஸ்லிம் நிகழ்ச்சியின் மாதர் மஜ்லிஸ் பிரதி
தயாரிப்பாளர்களில் ஒருவர்.
இலங்கையிலுள்ள பேராதனைப் பல்கலைகழகத் தமிழ்த் துறைப் பேராசிரியர் க.அருணாச்சலம் அவர்களது மலையக இலக்கியம்’ ஆய்வில் சில கவிதைகள்
உள்ளடக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசின் பாடப் புத்தகமான தமிழ் மொழியும் இலக்கியமும் தரம்ஆண்டு -09 நூலில் ‘வாழும் வழி’எனும் கவிதை இடம் பெற்றுள்ளது.
எனது பல கவிதைகள் குவைத் பாகில் (‘பஸீர் அஹமட் அல் அன்சாரி அல் காதிரி' அவர்களால் அரபு மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
பாலம் , எழுவான் கதிர்கள் ,மனிமலர்கள் இப்படி பலகவிதை தொகுதிகளிலும் இந்தியாவிலிருந்து வெளிவரும் சமரசம் சஞ்சிகைகளிலும் .லண்டன் கவிஞர் முல்லைஅமுதன் அவர்களது தொகுதியிலும்எனது கவிதைகள் இடம் பெற்றுள்ளது
கிழக்கு பல்கலைக்கழகம் ஆசிரியர்சாய்ந்தமருதுமுபாரக்மௌலவி , தென் கிழக்கு பல்கலைக்கழகம் ஆசிரியை நிந்தவூர் ரிஸ்லாஆகியோர் கவிதைகளை
ஆய்வு செய்து அறிக்கை சமர்பித்து சித்தியும் பெற்று உள்ளானர்
இந்தியாவில் முனைவர் அக்கினிபுத்திரன் அவர்களால் அண்ணா மலை பல்கலைக் கழகத்தில் கவிதைகள் ஆய்வு செய்யப் பட்டு உள்ளது சென்னையில் நடைபெற்ற அனைத்துலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஏழாம் மாநாட்டில் இலங்கையிலிருந்து கலந்து சிறப்பித்த முஸ்லிம் பெண் கவிஞர்
மலேசியாவில் நடைபெற்ற அனைத்துலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் கலந்து கொண்ட பெண் கவிஞரில் நானும் ஒருவர்அத்துடன் குவைத் றியாத் ,சவூதிஅரபியா சிங்கை பஹ்ரைன் போன்ற நாடுகளுக்கும் சென்று உள்ளேன் .இன்ஷாஹ் அல்லாஹ் ஜித்தா ,மக்காவுக்குவிரைவில் செல்ல உள்ளேன்
இலங்கையிலுள்ள தடாகம் கலை இலக்கிய வட்டத்தினால் வருடா வருடம் கலை உள்ளங்களை " கலைத்தீபம் "மானிட விடுதலைக்கு ‘எழுத்து ஒரு ஆயுதம்' என்று போதித்தமார்க்சிய சிந்தனையாளரான(அகஸ்தியர்) அவர்களின் ஞாபகமாகவழங்கும் சர்வதேச அகஸ்தியர் விருதும், வழங்கி கெளரவித்துவருகின்றேன்.
அத்துடன் இலங்கைத்தீபம் ,சமூகத் தீபம் ஈழத்து தமிழ் மணிபோன்ற விருதுகளும் வழங்குவதற்கானஏற்பாடுகளும் செய்து வருகின்றேன் ( இதுவரை சுமார் 200க்கு மேற்பட்ட கலை உள்ளங்களுக்கு விருது
வழங்கி கெளரவப் படுத்தி உள்ளேன்என்பதைசொல்வதில்சந்தோசப் படுகின்றேன்
...............................................................................................
வினா :
இன்றைய எழுத்தாளர்களில் நீங்கள் விரும்புபவர் யார் .?.
விடை :
கண்டது கற்கப் பண்டிதன் ஆவான் என்பது போல எல்லா எழுத்தாளர்களுடைய
படைப்புக்களையும் படிப்பேன் தரமாக எழுதும் அணைத்து எழுத்தாளார்களையும் எனக்கு பிடிக்கும் வளர்ந்து வரும்வளரப் போகும் உள்ளங்களுக்குஉரமாக இருப்பேன்இருக்கின்றேன்இருந்தும் வருவேன் இன்ஷா அல்லாஹ்
................................................................................................
வினா :
இறுதியாக இலக்கிய உலகில் வளரும் இளையவர்களுக்கு நீங்கள் கூறும்ஆலோசனை…?
விடை :
இலக்கிய வழி பயணத்தில் இன்னும் என்னை இளையவளாகத்தான் கருதிகொண்டிருக்கிறேன்.

ஞானப்பீடத்தில் அமர்ந்து உபதேசம் செய்வது போலாகி விடும்.ஏனென்றால் இன்று ஞானபீடங்களுக்கும்
நடைமுறைகளுக்குமிடையில் நிலவும் இடைவெளிகளை போல் உங்களுங்கும்
எனக்கு மத்தியிலும் நான் இடைவெளிகளை அல்லது இடை வேலிகளை போடத் தயாராக இல்லை
.நான் சொல்லும் கருத்துக்களெலாம்சிநேகபூர்வமான வேண்டுகோள்கள் தான்.அந்த முறையில்இளைய படைப்பாளிகளின் மத்தியில்
நான் முன் வைக்கும் வேண்டுகோள்கள் என்னவென்றால் இலக்கியத் தேடலே
உங்கள் இலக்கிய வளர்ச்சிக்கு தேவையான மிக முக்கிய நிகழ்வு.
நல்ல படைப்புக்களைவெளிச்சம் போட்டு காட்டும்விமர்சனங்களைப் படியுங்கள் .
அதன் விளைவாக உங்களுக்குள் ஆத்மார்த்த கலை,இலக்கிய உணர்வு உறங்கி கிடைக்குமாயின்மேற்கொன்ட தேடலினால்,முயற்சியினால் இனங்காட்டி விடும்.
அந்த சுய அனுபவ தரிசனத்தைதண்டவாளமாக்கி உங்கள் இலக்கிய வழிப் பயணத்தை தொடர்ந்தீர்களானால் நிச்சயமாக தனித்துவ மிக்கவராக கலை இலக்கிய வழி பயணத்தில் உங்களுக்கான இடத்தினை பெறுவீர்கள். எந்தவொரு கலையினது அடிப்படை தத்துவத் தெளிவும் இந்த உலகின் அனுபவ கூர்மையும் உங்கள் இலக்கிய வழி பயணத்தின் சரியான திசைகளாக உங்களுக்கு கிட்டி விட்டால் பிறகு உங்களுக்கு எந்த வழிகாட்டியும் தேவையில்லை.ஏனென்றால், நதிகளுக்கு யாரும் கடலின்
விலாசத்தை சொல்லி கொடுப்பதில்லை........!

............நன்றி சகோதரி ............

நேர்காணல் : கவிதையினி கிண்ணியா பாயிஸா அலி

( "Mrs. S.Faiza Ali" <sfmali@kinniyans.net>,

தகவல் தந்தKalaimahel Hidaya Risvi கலைமகள் ஹிதாயா ரிஸ்வி அவர்களுக்கு நன்றி

No comments: