Showing posts with label நேர் கானல் ... Show all posts
Showing posts with label நேர் கானல் ... Show all posts

Friday, October 2, 2015

கலைமகள் ஹிதாயா ரிஸ்வி அவர்களுடன் ஒரு நேர் கானல் .. - நேர் கானல் : கிண்ணியா பாயிஸா அலி

'இலக்கிய வழிப் பயணத்தில் இன்னும் தன்னை இளையவளாகத் தான் கருதிக் கொண்டிருக்கின்றார்''

எனதுகவிதைகளில்,யாரும் இலக்கணக் குற்றங்களை தேடிக் கொண்டிருக்கத் தேவையில்லை.
ஏனெனில் !நான் இலக்கண ஏடுகளை எட்டிப் பார்த்ததுமில்லை தமிழ் மொழியை கற்றவளும் அல்ல. அதனால்தலைக்கனங் கொண்டு மார் தட்டிப் பேசுவதுமில்லைஎன்று கூறுகின்றார்

கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

அவர்களுடன் ஒரு நேர் கானல் ..


நேர் கானல் : கிண்ணியா பாயிஸா அலி


....................................................................................................... தென்றலே கவிபாடும் தென்கிழக்கு மண்ணின் கிராமம் ஒன்றின் தெருக்கோடியில் நின்று கொண்டு கூழான் கல்லொன்றை கூலிக்கெடுத்தாவது விழிகளை மூடிக் கொண்டு வீசினால் விர்ரென்று விரைந்தேகும் அக் கல் விழும் இடம் ஒரு கவிஞனின் வீடாக இருக்கும் இல்லாவிட்டால் ஒரு எழுத்தாளனின் தலையாக இருக்கும்.
கன்னித் தமிழின் கழுத்துக்கு கனகமணி மாலையிட்டு விண்ணுலகம் விரைந்திட்ட முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாந்த அடிகளார்.அவர் அன்புச் சீடன் ஆசுகவி புலவர்மணி ஆ.மூ.சரிபுதீன் போன்ற ஆன்றோர்களும் ;வாடிநிற்கும் பயிராய்,வாழ்வோடிந்த உயிராய்,வரண்டு போன நதியாய் கிடந்த ஈழத்து இலக்கியத்தை வளப்படுத்தி வாகை சூடிய சான்றோர்களும் பிறந்து சரித்திரம் படைத்த மண் தென் கிழக்கு மண்.அம் மண்ணில்
வைரக்கற்களோடு வைரக்கல்லாக தன்னையும் பதித்துக் கொண்ட பெண் படைப்பாளி தான்இந்தஅன்பான

சகோதரி கலைமகள் ஹிதாயா றிஸ்வி..ஆம்