Saturday, February 22, 2020

கோழியிறகையே பார்த்துக் கொண்டிருந்தார் சூஃபி / நிஷா மன்சூர்


கோழியிறகையே
பார்த்துக் கொண்டிருந்தார் சூஃபி
அது கோழியொன்றை வரைகிறது...
கோழிகளின் கொக்கரிப்பு
திசையெங்கும் நிறைகின்றன
கோழிகளைப் பிடிக்கப்
பூனைகளின் கண்கள் நெருங்கிவர
சம்பந்தமில்லாமல்
எலிகள் ஏனோ ஓடித் திரிகின்றன...

அதானின் அழைப்போசையை
அலைவரிசையொன்று அழைத்துவர
சூஃபி அனைத்தையும் வாரி ஒற்றை
இறகாக்கி விட்டு
ஒலுவெடுக்கச் செல்கிறார்
இறகு இப்போது புறாவை வரைய,
புறாக்கள்
பள்ளி வாயிலின் மாடங்களில் அடைகின்றன.
தொழுகைத் தொடங்குகிறது.

#முகமதுபாட்சா

அதான் - பள்ளிவாசல் அழைப்பு,
ஒலு - சுத்தம் செய்துக் கொள்ளல்

நிஷா மன்சூர்

No comments: