Tuesday, February 25, 2020

நதியாய் நகர்கின்றேன்...

நதியாய் நகர்கின்றேன்...
வாழ்க்கை காட்டும் பாதை தனில் !

இயல்பை மறந்தே அலைகின்றேன் ...
எளிதான பாதை எங்குள்ளதென்று !

பாறைதாண்டி பாதாளத்தில் குதித்து
நிலம் தனில் வீழ்ந்து
நீளமாய் நீண்டு
நிம்மதியை தேடியே நித்தமும் அலைகின்றேன்!

என்னுள் கனத்த சிலவற்றை
அடியில் தள்ளி ஆழத்தில் புதைத்து...
சருகுகள் பலவற்றை கரையோரம் தேக்கி என்
களங்கங்கள் நீக்கி
கரைபுரண்டு ஓடுகின்றேன்.. நான்
கரை தாண்டியே ஓடுகின்றேன்...


என்னில் கால் நனைத்தவரை சந்தித்து
என்னுள் கழிவைக் கொட்டியவரை மன்னித்து
ஆழ் கடலின் ஆழத்திற்குள் என் அமைதியை தேடியே ஓடுகின்றேன்... நான்
அலுக்காமல் ஓடுகின்றேன் !

பிறவிகடல் கடல் கடப்பதற்கேனவே
பிறப்பெடுத்த மனிதயினம் போலன்றி
கடலில் சேருவதற்கென்றே பிறப்பெடுத்தேன். நதியாய் நகர்கின்றேன்...
வாழ்க்கை காட்டும் பாதை தனில் !
கடல் இருக்கும் திசை நோக்கியே
காலெடுத்தேன்!

நதியாய் நகர்கின்றேன்...
வாழ்க்கை காட்டும் பாதை தனில் !
Saaral Thulihal - Drizzles

No comments: