Tuesday, June 8, 2021

அன்னை ஆமினா மடியில் அழகு நிலவாக ஜொலித்த பொன்வண்ணமே நபியின் அழகான வதனம் தான்

 

சுவன மலராக சோபனம் கூற உதித்த ஒளிவெள்ளமே அன்னை ஆமினா மடியில் அழகு நிலவாக ஜொலித்த பொன்வண்ணமே நபியின் அழகான வதனம் தான் காண இதயம் கசிந்துருகுதே மலர் புன்னகை தவழும் பொன்முகம் பார்க்க நயனம் துடிக்கின்றதே (2) எதிரி பலம் கண்டு பொறுமை மிகக் கொண்டு ஜெயித்த ஜெயசீலரே... தினம் ஜெயித்த ஜெயசீலரே.... அன்று பத்ரு களம் கண்டு பகைவர்களை வென்று ஆளும் இறைத்தூதரே... புவியாளும் இறைத்தூதரே அன்று பத்ரு களம் கண்டு பகைவர்களை வென்று...... அன்று பத்ரு களம் கண்டு பகைவர்களை வென்று ஆளும் இறைத்தூதரே..... தங்க தளிர்மேனி வள்ளல் நபிநாதர் மறையின் மணம் பரப்பினார் அருள்மறையின் மணம் பரப்பினார் வல்லோன் திங்கள் ஒளியான சங்கை நபிக்காக தீனை நிலை நாட்டினான்.... வல்லோன் திங்கள் ஒளியான சங்கை நபிக்காக தீனை நிலை நாட்டினான் நபியின் அழகான வதனம் தான் காண இதயம் கசிந்துருகுதே மலர் புன்னகை தவழும் பொன்முகம் பார்க்க நயனம் துடிக்கின்றதே சிறகுதனை விரித்து அருமைத் தோழர்களை அனைத்த நபியல்லவா உயிரின் உயிராக உண்மைத் தோழர்களும் இருந்த நிலை சொல்லவா இருந்த நிலை சொல்லவா கண்ணின் விழியாக கமழும் மணமாக திகழும் இறைஞானமே இந்த வையம் கடல்வானும் புகழ்ந்து முடிந்தாலும் முடிக்க முடியாதம்மா நபி புகழை தடுக்க முடமுடியாதம்மா 🎤___( சூப்பர் சிங்கர்) ஃபரீதா ! _எம், சலீமாபானு பிலாலிய்யா !

No comments: