Tuesday, June 8, 2021

தல அல் பத்ருஅலைனா.....!" “ரஜப் மாதம் பிறந்ததுமே....!”

 

Noor Saffiya

💞"தல அல் பத்ருஅலைனா.....!"

      ரஜப் மாதம் பிறந்ததுமே....!”

பாடல் வரிகள்: நூர் ஷஃபியா

                               காதிரியா

பாடியவர்          : ஃபரீதா (சிங்கர்)

தொகுப்பாளர் : முஹம்மது

அன்சாரி  💞                        

➖🌹

طلع البدر علينا     🌷  من ثنية الوداع

وجب الشكر علينا   🌷  ما دعى لله داع

أيها المبعوث فينا    🌷 جئت بالأمر المطاع

جئت شرفت المدينة🌷 مرحباً يا خير داع

ரஜப் மாதம் பிறந்ததுமே!

ரமழான் நினைவு உதித்திடுமே!

நாயன் வஹியால் பெற்ற மறையும்!

நபிசொல்செயல் ஹதீஸ் கிரந்தத்தையும்!

தீனின் பட்டணமென

அழைக்கும்!

திகழும் சிறுமக்கமெனப்

புகழும்!

காக்கும் வலிமார் சூழும் பதியில்!

காயல் மாநகரென ஊரில்!

                    (தல அல் பதரு.,)

ஸுபு ஹில் கொமைஞ்சான்

மணமாம்!

சந்தன வாசம் மஜ்லிஸில்

வீசும்!

சூழ்ந்தே ஓதுவர் புனித

கிரந்தம்!

சுற்றமும் அதிலே

சுறுசுறுப்புடனே!

விடியலே வள்ளல்

தரிசனமாக்கும்!

வல்லோன் அருளில்

சுவாசமாக்கும்!

அள்ளும் பரக்கத்

ரஜப் மாதம்!

அரும்பும் மதீனா

சுவன வாசம்!

முப்பது நாளும் தீன்

சுவையாம்!

மூச்சும் பேச்சும் ஹதீஸ்

ருசியாம்!

மேன்மை நபிமார்,

ஸஹாபா  ரசிப்பாம்!

முழங்குமே,வலிமார்,

அஹ்லுல் பைத்தாம்!

அனைத்து நன்மை தீமை

யாவும்!

அறிந்தே விளக்கம் மனதில்

மேவும்!

இல்மின் ஊற்றின் திறவுகோலாய்!

இல்ஹாம்  உதிக்கும்

தலமதே!

நினைவும் இழந்து!

நிஜத்தில் லயித்து!

தன்னை அறியும்

தலமாக்குமே!

திக்ரே கல்பின்

தலமாகவே!

திகழும் புஹாரி

மஜ்லிஸாம்!

┈┉┅━❀••🍃🌸🍃••❀━┅┉┈

ஆண்,பெண்,பாலர்

தனித்தனியாய்!

ஆன்றோர் கூடும் புனித மன்றமாம்!

இறையில் நீயும்

ஃபனாவாய்! ஆள்வாய்...!

ரஹ்மத்தை நாம்

அள்ளிடுவோம்!

ராஹத் பெற்றே

மகிழ்ந்திடுவோம்!

பரக்கத்தால் நாம்

பசுமையாவோம்!

ப்ரகாசமாய் உலகில்

ஆள்வோம்!

ப்ரபஞ்ச சக்தி

அடைந்திடுவோம்!

நிஃமத்துடனே நிம்மதி

என்போம்!

நற்சோஃபன வரமும்

பெறுவோம்!

ஆஃபியத்துடனே

ஜெயமுமாவோம்!

ஷுக்ருடன் சிரம்

பணிந்திடுவோம்!

சலாமத்துடனே

சிகரம் காண்போம்!

சர்தார் ஆசியில்

பாக்யமாவோம்!

சாட்சியாளனில்

மஹ்ஷரில் மகிழ்வோம்!

செழுமை புஹாரி

மகிமையாலே!

┈┉┅━❀••🍃🌸🍃••❀━┅┉┈

நூர் உம்மத்தின் பாடலினை

நாயனே ஹுப்பாய் ஏற்பாயே!

நேசமாய் இதை பாடும் கல்பின் துஆக்களை கபூல் செய்வாயே!

இறுதி நாளாம் புனித துஆ_வாம்,

இம்மை மறுமையின்

பேரின்பம்!

மனமும் திறந்து

இறையில் பேசும்!

மர்ஹபன் யா ஹைர தா.... !

எத்தனை ஹாஜத்

பெற்ற தலம்!

எவ்வித இன்னலும்

நீக்கும் தலம்!

காயல் பதியின் புண்ய தலம்!

கூடும் புஹாரி மஜ்லிஸாம்!

                       (தல அல் பத்ரு..)

தாழ்த்தி கேட்பவர்

இருலோகம் ஜெயமே!

தரணிலும் விண்ணிலும்

தராஜா கூடும்!

கடைசி மூச்சும் கலிமாவில்

வாழும்!

கண்மணி கரமும்

சுவர்க்கமும் வாஜிப்!

┈┉┅━❀••🍃🌸🍃••❀━┅┉┈

அன்த ஸம்ஷுன்

அன்த பதுருன்

அன்த நூருன்

ஃபவ்க நூர்!

அன்த யுக்ஸி ருன் வகாலி!

அன்த மிஸ்பா ஹுஸ்ஸுதூர்!

(தல அல் பத்ரு.......!)

🖋️நூர்ஷஃபியா காதிரியா

No comments: