Wednesday, June 2, 2021

இறைசிந்தனை மஞ்சள் நிலா

 



Noor Saffiya

💞 இறைசிந்தனை

     மஞ்சள் நிலா 🌙!

மாநபி நிறம் ஜொலிக்கும்

மஞ்சள் நிலாவே 🌙 !

மகுடம் சூட்டும் நாளதனில்

முழுமதி சுடராகுமே!

கொஞ்சி பேசி மகிழும் என்

கண்மணி ஹபீபின்!

கரத்தில் மழலை போலவே

காதல் நெஞ்சமாவேன்!

பிஞ்சு மனம் கொண்ட என்

பாசநபி யாரிடமுமே!

பகிரும் அறிவும் வார்த்தை

பணிவும் ஒன்றே!

கெஞ்சும் இதயத்தில் எம்மை

கேடயமாயாகவே!

காப்பவனில் காக்க வரமாய் பரிந்துரைப்பார்களே!

மஞ்சம் கொள்ளும் இரவிலே

மாநபி நேசம் மட்டுமே என்றும்,

மன்றாடும் கல்பாய் இஷ்கில்,

மனம் முழுதும் மண்டியிடுமே!

அஞ்சிடும்  எதிலும் எங்கும்,

இறையச்சத்திலே!

அல்லாஹ்விடம் பெற்று

அகமகிழ ஜென்னாவிலே,

அமுதான தூதானவரே!ஆதரிப்பார்களே; ரப்பிடமே!

தஞ்சம் என்றதுமே ஓடிவந்து,

சஞ்சலம் தீர்த்திடவே!

சந்தோஷமாக்கிடவே!

வரமாய்; தரிசனமாய்!

வந்துதவிடுவார்களே!

பஞ்சாய் போனதே மனமே!

பஞ்சமும்,பசியும் தீருமே!

பொருட், அருட் செல்வமுமே!

பொங்கி பெறுகிடுமே!

வஞ்சனை,ஃபஷாது நீக்கியும்,

கஞ்சத்தனம் போக்கியும்!

வஞ்சகமிலா நெஞ்ச நட்புகள்

வாகாய் நல்லடியார் கிட்டியும்!

எஞ்சும் வாழ்க்கை எந்நிமிடமும்

எண்ணாமல் தானம் தர்மம்,

செய்யும் பணச்செழிப்பையும்!

அஞ்சு வேளை தொழுகை!

ஆரோக்ய வாழ்வுடனே!

அல்லாஹ்வில் ஃபனாவாகி!

அள்ளும் நிஃமத் அனைத்திலும்!

கல்பின் ப்ரகாரம் தேவைகள்

காப்பவனில் பெற்று மகிழ!

கல்யாண வைபோகமெனும்,

கல்பு குளிர நிகழ்ந்திடவும்!

மனை,மனம்,மணம் பெறவும்!

மக்கட் ,பொருட்,அருட்,வாகான  மற்றும் பதினாறு செல்வமும்!

எல்லாம் வல்லிறைவன்

அருட் கொடையாய்!

அக மகிழ,உளம் குளிர,

ஆள,வாழ,அனுபவிக்க

        செய்வானாக!

        அழகிய ஹக் திக்ரும்

      அஹ்மதரின் ஸலவாத்

           துதித்து நாவினில்

                  நனைவோம்.!

                         ஆமீன் !!

                      யா  ரப்பே  !!

                  என்  ஹுப்பே  !!

                   ஸல்லல்லாஹு

                  அலா முஹம்மத்

                   ஸல்லல்லாஹ்

              அலைஹிவ ஸல்லம்💞

🖋நூர்ஷஃபியா காதிரியா

No comments: