Tuesday, December 22, 2020

“ஒரு ஜீவன் தான்"

 🖋️நூர்ஷஃபியா காதிரியா

“ஒரு ஜீவன் தான்"

பாடல் காதிரியா : நூர்ஷஃபியா காதிரியா

பாடியவர்               : சிங்கர் ஃப்ரீதா💞

உன் வாசல் நிலைத்திருந்தோம்!

அருள்வாக்கு தான்

அள்ளி தருவாயே நீ!

அஹ்மதரில் நிலைக்க

செய்தாயே நீ!

யா அக்ரமல் அக்ரமீனே!

யா இமாமல் முத்தக்கீனே!

ஜஸதும், கல்பும்தொழுகும்

பொழுதில் உருகும்!

நம்மை நாமே உயர்த்துவதே!

ஐவேளை தொழுகையாலே!

அல்லாஹூ....

நமக்களித்த பொக்கிஷம்

தொழுகை தானே...!

அல்லா....................

அவனே தான் நம் தரஜா உயர்த்திட வழி தந்தானே!

முப்பத் நாலு ஸுஜுத்

தந்தான் அவன்!

முப்பத் நாலு

தரஜாவும் வைத்தான்!

நான் தருகின்றேன்

என்றான் அவன்!

நாதர் நாமம்

தஷாஹுத்திலே !

ஷிஃபத்தும்,நிஃமத்தும்,"

இணைத்த நன்றியை

சொல்வோம்!

நூர் உம்மத்தின்

பாடலினை ஓயாமல்

இயங்க வைப்பாய்!

நூரின் ஜோதி

காபகவ்ஷைனியில்

தொழுகையில்

மிளிர வைப்பாய்!

பாசநபியின் ப்ரகாசமாய்

பார்த்திட அருள்புரிவாயே..!

உன் இல்லத்தில் ஷுக்ர் செய்கிறோம்

நீ அருளிய உன் உம்மத்தாய்....!

_🌹

🖋️நூர்ஷஃபியா காதிரியா


No comments: