Thursday, December 10, 2009

பண பற்றாக்குறை-காரணம் என்ன?

பண பற்றாக்குறை  !!!

நான்


1000  ரூபாய் சம்பளம் வாங்கும்போது  பற்றாக்குறை  தான்
5000  ரூபாய் சம்பளம் வாங்கும்போது  பற்றாக்குறை  தான்;
10000 ரூபாய் சம்பளம் வாங்கும்போது  பற்றாக்குறை  தான்;
இப்போது 100000 (1லட்சம்) ரூபாய் சம்பளம் வாங்குகிறேன்.
ஆனாலும் அதே பற்றாக்குறை. என்ன நடக்குது இங்கே???

அப்போது தான் எனக்கு ஒன்று தெளிவாக புரிந்தது ,

பற்றாக்குறை சம்பளத்தில் இல்லை.நமது மனதில்தான் திட்டமிடல் இல்லாமை என்கிற பற்றாக்குறை இருக்கிறது என்று.


 
போதுமென்ற  மனம் இல்லாத  பற்றாக்குறை:நான் சென்னை வரும் முன்பு, தூத்துக்குடி பேருந்தில் பயணம் செய்யும் போது, ஒரு சென்னை நண்பரிடம் கேட்டேன்,சென்னையில் விலைவாசி அதிகம் என்று கூறுகிறார்கள், நான் சென்னையில் குடியேற நினைக்கிறேன்..சமாளிக்க முடியுமா என்றுஅவர் சொன்ன பதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது.சென்னையில் ரூ1000 வைத்து குடும்பம் நடத்த முடியும்..ரூ100000(1 லட்சம்) வைத்தும் குடும்பம் நடத்த முடியும்.அந்த திட்டமிடல் உன் கையில் தான் இருக்கிறது என்றார். 

அவருடைய வார்த்தைகளை அப்போது கேட்டிருந்தால் இன்று நான் எவ்வளவோ சேமித்திருக்கமுடியும். என்ன செய்வது...சென்னை வந்த பிறகு உற்றார்,நண்பர்கள் எல்லாம் தவறாக நினைப்பார்களோ என்று வாடகை வீட்டையும் அல்லவா அழகு படுத்தினேன்.வீட்டுக்கு வரவங்க நம்மை மதிக்க வேண்டும் என்று தேவை இல்லாவிட்டாலும் ஆடம்பர பொருட்களை  வாங்கி குவித்தேன்.பணம் எல்லாம் இப்படி தேவையற்ற விஷயங்களில் முடங்கி போனது.மருத்துவ அவசரம் என்றாலோ, குழந்தைகளின் கல்விக்கான கட்டணம் கட்டவேண்டி வந்தாலோ திணற வேண்டியிருக்கிறது.இதையே நான் வங்கியில் சேமித்து இருந்தால் அவசர தேவைக்கு தடுமாற்றம் இன்றி சமாளித்திருக்க முடியும். 


" நம் வீட்டு வாசலை மட்டும் பார்க்கவேண்டும் ,
பக்கத்து வீட்டு  வாசலை பார்த்து போட்டியிட்டால்,
                     மேலே சொன்ன பற்றாக்குறை  நம் வாழ்வில் வரும்


எளிமையான வாழ்க்கையில் தான் உண்மையான மனமகிழ்ச்சி இருக்கிறது என்பதை தாமதமாக உணர்வது மனிதனின் குறைபாடு.பணத்தை சேமித்த பின்பு வாங்கி மகிழலாம் என்கிற பிடிவாதம்,கடன் வாங்கியாவது இதை வாங்கியே தீருவேன் என்கிற பிடிவாதத்தை விட சால சிறந்தது.


மனிதன் விசித்திரமானவன்.எப்போதுமே 'அடுத்தவன் நம்மை எப்படி நினைப்பானோ' என்றுதான் யோசிப்பானே தவிர தன் சுய திருப்தியை பற்றியோ அல்லது தன் வருமானத்திற்கு உகந்த வாழ்க்கை பற்றியோ 
சிந்திக்க மாட்டான்.


அங்குதான் பண தடுமாற்றத்தின் முதல் சிக்கல் தொடங்குகிறது. இதை நாம் முதலிலேயே சரி செய்துவிட்டால் நம் வாழ்க்கையில் என்றுமே கொண்டாட்டம்தான் !!!


கருத்து :               மரியா அண்ணா.
எழுத்து வடிவம் : அடியேன் நானே.

(இந்த பதிவை படித்து கல் எறிந்தால் மரியா அண்ணனுக்கு, பூங்கொத்து கிடைத்தால் எனக்கு!!!


நன்றி : http://poongundran2010.blogspot.com



No comments: