Tuesday, December 1, 2009

அ தான் மு

1.1 பாயிரவியல்
1.1.1 கடவுள் வாழ்த்து

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு. 1

அ தான் முதல் எழுத்து. அதுக்கு அப்புறம் தான் எல்லா எழுத்தும். அது மாதிரி முதல் கடவுள் ஒருத்தர் இருக்காரு. அவருக்கு அப்புறம் தான் உலகத்துல எல்லாமுமே.
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின். 2

அறிவு பெறுவதற்காகத் தான் படிக்கிறோம். ஆனா, அறிவே உருவமானவர் கடவுள். அப்படிப்பட்டவரோட காலைத் தொட்டு வணங்காம இருந்தா, அப்புறம் நாமெல்லாம் படிச்சு என்ன பயன்?
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார். 3

No comments: