Sunday, December 6, 2009

கவிக்காக ஒரு கவிதை




உன் கவித்தடாகத்தில் கவிதை நீராடவந்தேன்
அதில் ஆயிரமாயிரம் தாமரைகள் தத்தளித்தபடி
தடாகத்தின் ததும்பளில் ஆனந்தகும்மியடித்தபடி

காதலின் பரிமாணங்கள் கலைகட்டியிருந்தன
அழுகையின் அர்த்தங்கள் அரங்கேறியிருந்தன
சிரிப்பின் சிலம்பொலிகள் சினிங்கிக்கொண்டிருந்தன

உணர்வுகளின் பிம்மங்கள் மிளிர்ந்துமிளிரின
உணர்ச்சிகளின் உச்சங்கள் உள்ளங்களை தொட்டன
உண்மைகளின் சுவடுகள் உண்மையில் சுட்டன

பொய்களை வடித்து வடித்து
சிலகவிகளை படைத்திருந்திருந்தாலும்
சொட்டச்சொட்ட வடியும் கொம்புத்தேனாய் இனித்தது

தினம் தினம் கவிபடைக்கிறாய்
தித்திப்பாய் வரிகொடுக்கிறாய்
திகட்டாமல் உணர்வுகளின் பிம்பங்களை
கொட்டிகுமித்திருக்கிறாய்


பிறரின் மனங்களை கவிகளால் படம்பிடிக்கிறாய்
அதனால் பலமனங்களிலும் இடம்பிடிக்கிறாய்
தொடர்ந்து தொடரட்டும் உன்கவிப்பணி
தொடர்ந்து வரட்டும் பலரின் விழிஇனி....

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய் 


நன்றி ::  http://niroodai.blogspot.com/

2 comments:

Unknown said...

மீண்டும் மலிக்காவுக்கு என் நன்றிகள்.

இங்கே மீள்பதிவு செய்த உங்களுக்கும் என் நன்றிகள்

அன்புடன்புகாரி

அன்புடன் மலிக்கா said...

என் கவிதை மீள்பதிவு செய்தமைக்கு நன்றிகள் பல..

மிக்க மகிழ்ச்சி அன்புடன்ஆசான்.