Monday, December 7, 2009

இது உங்கள் கவிதை


அன்புடன் புகாரி


எழுதும் வரைதான் என் கவிதை
எழுதி முடித்ததும்
அது உங்கள் கவிதை

நேசியுங்கள்
நிறைவான இடங்களில்
சுவாசியுங்கள்

கூண்டேற்றுங்கள்
குறையல்லவெனத் தெளிந்தால்
நியாயமருளுங்கள்

உமிழுங்கள்
உண்மையறிய நேருங்கால்
உயர்த்துங்கள்

அது
உங்கள் கவிதை

உங்களைப் போலவேதான் நானும்
ரசிக்கிறேன் ரசிகனாய்
விமரிசிக்கிறேன் விமரிசகனாய்

எனவே
வழக்காடும் சபைகளில்
நானும் வாழ வருவேன்

நானெழுதிய என் கவிதைகளின்
முதல் ரசிகனும் முதல் விமரிசகனும்
நானல்லவா

 நன்றி :http://anbudanbuhari.blogspot.com

No comments: