Tuesday, December 29, 2009

அரையடி நாக்கு

 
அரையடி
ஆறடியை
வீழ்த்துகிறது

எழும்புகள்
இல்லையென்று
எதை
வேண்டுமென்றாலும்
பேசுகிறது

தன் நாவால்
பிறருக்குத் தரும்
துன்பங்கள்
தனக்கே புரிந்தும்

தடம் புரள்கிறது
பிறரை
தடுமாறவைக்கிறது

நாவிலிருந்து
நழுவி விழும்
சொல்லில்
நேர்மை தவறுகிறது

நாளொரு பேச்சி
நிமிடத்திற்கொரு
வார்த்தை –என
நன்மதிப்பை
இழந்து விடுகிறது

அரையடி நாவின்
பொய்களை நம்பி
அநியாயமாய் பலரை
அழியவைக்கிறது

நாவைக்கொண்டு
நம்பிக்கை துரோகம்
நாளும் செய்து
நன்மையை இழக்கிறது

அரையடி நாக்கே
அன்பாயிருக்க அழகாய்
பழகிக்கொள்
அனைவரின் மனதிலும்
ஆட்சி செய்திட
விழிப்பாய் இருந்துகொள்...


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
நன்றி : http://niroodai.blogspot.com/
 

No comments: