Monday, December 7, 2009

பொன்னாள் ஒன்று வரும்


பொன்னாள் ஒன்று வரும்
அந்நாளில்
வருவாள் இந்த யாழிசை
உன் வனத்துக்குள்ளேயே
வருவாள் என்றாள் உறுதியாக

இதயம் பொன்னூஞ்சல் ஆட
பொன்னாளா
அது எப்போது வரும் என்று
யோசித்தேன்

பொன்னாள் வந்தால்
அவள் வருவாளா
அல்லது அவள் வந்தால்
பொன்னாள் வருமா

ம்ம்ம் என் மல்லிகை வரட்டும்
வரும்போது அவளே அறிவாள்
பொன்னாளின் கைகளைப் பிடித்து
அழைத்துக்கொண்டு வரப்போவது
பசும் பொன்னாலான
அவள்தான் என்று
நன்றி :http://anbudanbuhari.blogspot.com/

-----------------------------------------------

No comments: