Wednesday, December 2, 2009

கமுக்கமாய்ச் சிரித்தாள் சித்தாரக் கள்ளி


அன்றொருநாள்
என் காதுக்குள் குடிபுகுந்து
எனக்குப் பயம் என்றாள்
கிசுகிசுப்பாக

பயமா
உனக்கா
ஏன் என்றேன்

கண்ணில் படாதவன்
கணினி வழி வந்து
பின் கழுத்தில் முத்தமிட்டால்....?

பயம்தானே தோன்றும் என்றாள்
கண்களைக் கண்ணிமைகள்
கணக்கின்றி முத்தமிட்டுச் சிவக்க

ஓ... அந்த பயமா
இது பெண்ணின்
அந்தரங்க பயமாயிற்றே
நாணத்திற்கும் சிலிர்ப்புக்கும்
இடைப்பட்டது
சரியா

வேண்டாம் என்றல்ல
கிளர்ச்சித் தீண்டல் வேண்டும் என்னும்
வெட்க வெளிப்பாட்டுப்
பயம்தானே என்றேன்

கமுக்கமாய்ச்
சிரித்தாள் சித்தாரக் கள்ளி

   நன்றி      :              http://anbudanbuhari.blogspot.com/

No comments: