Thursday, December 24, 2009

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்



மனித மனமெனும்
மயக்க நிலங்களில்
கருணைப் பூவனம்
குழுமிப் பூத்திட

புனித நாயகன்
பிறந்த நாளிதில்
இனிய வாழ்த்துக்கள்
இதய வாசலில்

அலைகள் தொடுத்திடும்
கடலின் ஞானமாய்
நுரைகள் பூத்திடும்
பாலின் வெண்மையாய்

இரவைத் தேற்றிடும்
நிலவின் இனிமையாய்
உறவும் உலகமும்
வாழ வாழ்த்துக்கள்

வந்தது கிறிஸ்த்மஸ் பெருநாள்
வாழ்த்துக்கள் தூவிடும் திருநாள்
சந்தனச் சந்தங்கள் சிந்தியே
சதிராடித் துள்ளட்டும் உள்ளங்கள்
பந்தலில் மணப்பெண் கோலத்தில்
பனிமலர் போலவே நீ இருக்கும்
அந்தநாள் அருகினில் வந்ததனால்
அதற்குமென் வாழ்த்துக்கள் இப்போதே
Label: வாழ்த்துக்கள்
நன்றி http://anbudanbuhari.blogspot.com/

No comments: