Wednesday, December 9, 2009

உயிரில் கரைத்துப்போக வந்தேன்


என் உயிரை
என் உயிரில் கரைத்துப்போக வந்தேன்
அங்கே என் உயிரே இல்லை

பொழுதும் மாறும் புதினமாகிவிட்ட
நெஞ்சோடு போராடும் நெருப்பு உயிரிடம்
என் உயிரின் வேர்களுக்கு
நீர் எப்படிக் கிடைக்கும்

ஆனபோதிலும்
என் சொர்க்கங்களில் சில
மறைக்கப்பட்ட உன் திரைகளைத்தாண்டி
என்னிடம் நீண்டதைக் கண்டேன்

தடுப்புகளை உடைந்தெறிந்துவிட்டு
விழிகள் பேசிய மொழிகளைக் கேட்டேன்

ஒரு முறை விரிய ஒரு ஜென்மம் மலர
என்று எனக்கு ஜென்மங்களை வழங்கிய
இதழ்களைப் பார்த்தேன்

எழவும் மறுக்கும் கால்களோடு
இயங்கவும் மறுக்கும் இதயத்தோடு
நான் வரவில்லை நீ போ என்று
ஒப்பாரி வைக்கும் உயிரோடு
உன்னைவிட்டு விடை பெற்றேன்

சொர்க்கமும் நரகமும் ஊஞ்சலாடும்
விளையாட்டின் பெயர் என்ன?

நன்றி :http://anbudanbuhari.blogspot.com

------------------------------------------------------------------------------------

No comments: