Sunday, October 7, 2018

அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில்/ சாதனைப் பெண்மணி - Dr.A.சபியா

நமது முற்றத்து முல்லை, அன்பு தங்கை Dr.A.சபியா,சுமார் பதினான்ங்கு வருடங்களாக திருவிதாங்கோடு முஸ்லிம் கலைக்கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். நடுத்தர குடும்பத்தில் பிறந்த ஒரே மகளான அன்பு தங்கை, வாழ்வில் பல்வேறு சோதனைகளை கடந்து கல்வியின் பால் மிகுந்த நாட்டம் கொண்டவராக விளங்கினார்.தனது வயதான தாய் தந்தையரோ கல்விக்காக ஓயாது ஓடிக்கொண்டே இருந்தனர்.சமீப காலத்திலே Er. அப்துல் சமது இவருடன் கைகோர்து துணைநிற்க,வணிக இயல் துறையிலே முனைவர் பட்டம் பெற்று சாதனையும் படைத்துள்ளார்.
சமூகத்திலே,வசதி வாய்ப்பின்றி வாழ்ந்து வருகின்ற இச் சூழலிலே இத்துறையிலே முனைவர் பட்டம் பெறுவது என்பது பாராட்டப்படவேண்டிய ஒன்று.உகா சேவா சேரிட்டபிள் டிரஸ்டின் நிறுவன டிரஸ்டிகளில் ஒருவரான, உகா சேவா மருத்துவமனையின் சேர்மன் அருமை அண்ணன் முஹம்மது கபூர் அவர்கள் தங்கை Dr.சபியாவின் இல்லம்நாடி இந்த பரிசினை தனது திருங்கரங்களால் வழங்கி பாராட்டி மகிழ்ந்தது பெருமை பட வைக்கிறது. அவரது பெருந்தன்மையை காட்டுகிறது...
Hajibabu Sevai Thilagam 
----------------------
முனைவருக்கும் பாராட்டிய நண்பருக்கும் இறையருள் பெருகிட உளமார்ந்த வாழ்த்துக்கள் .....


No comments: