Sunday, June 10, 2018

விசால இதயம்!

விசால இதயம்! Sabeer Ahmed
(மூலம்: அல் குர்ஆன் / சூரா 94: அஸ் ஷர்ஹ்)

அழுக்கு எண்ணங்கள் படிந்து
குறுக்கி விடாமலும்
அன்பு உள்ளத்தில் நலிந்து
வெறுப்பு மிகாமலும்

விளக்கு ஒளிரும் வெளியென
வெளிச்ச மயமாக்கும்
ஆழ்ந்த அறிவால் உள்ளம்
விசாலப் படுத்தினோமன்றோ


கனத்தச் சுமையாய் முதுகை
முறித்த எடையை
இறக்கி உமக்கு நாமே
இலக்கை லேசாக்கினோம்

இழித்து உரைத்த நாவைப்
புரட்டிப் போட்டு
நிலைத்தப் புகழை உமக்கு
இகத்தில் உயர்த்தினோம்

இருட்டு சூழும் கணங்கள்
விலகிப் போனதும்
வெளிச்சம் நிலவும் அதுபோல்
துன்பத்துள் இன்பம்

வருத்தும் துன்பம் கண்டு
அயர்ச்சி வேண்டாம்
இருக்கும் இன்பம் அதற்குள்
தொடர்ச்சி உறுதி

களைத்து ஓயும் தருணம்
வணக்கம் நலமே
அனைத்து மனமும் இறைக்கு
அர்ப்பனம் செய்வீர் !

-சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்
---------------------------------------------------------------------------------------

No comments: