Sunday, October 18, 2020

அறியாமை இருள் சூழ்ந்த அரபகத்து பாலையிலே

 அறியாமை இருள்  சூழ்ந்த அரபகத்து  பாலையிலே

பாடியவர் -  காவியக்குரலோன் தேரிழந்தூர் தாஜுத்தீன் ஃபைஜி


பாடல் வரிகள்

 காயல் யஹ்யா முஹிய்யத்தீன்


இசை - முரளிதரன்

___________


அறியாமை இருள்  சூழ்ந்த அரபகத்து  பாலையிலே

அறிவென்னும் நிலவாக அடிவானில் உதித்தனரே.....

அறிவுக்கண் திறந்தார்....அறியாமை ஒழித்தார்

ஏற்றவர் வென்றார் ...இகழ்ந்தவர் தோற்றார்

மறக்குமோ நெஞ்சம்... எம்மாநபியை.... ஆ...ஆ...ஆ...


பாலையில் பிறந்தவராம் - நபி அதி  

காலையின் பகலவனாம் - நபி அதி  

காலையின் பகலவனாம்...

சோலையில் வீசும் தென்றலை போலே  

சொர்க்கத்தின் நாயகராம் – (பாலையில்)


ஏழையாய் பிறந்தவராம் - வாழ்வில் எளிமையை ரசித்தவராம் ஆ...ஆ...ஆ...

ஏழையாய் பிறந்தவராம் - வாழ்வில் எளிமையை ரசித்தவராம் 

செல்வங்கள் தேடி வந்திட்டபோதும் 

ஏற்றிட மறுத்தவராம்

செல்வங்கள் தேடி வந்திட்டபோதும் 

ஏற்றிட மறுத்தவராம் - (பாலையில்)


உள்ளத்தில் ஈமான் விதைத்தவராம் - இந்த  

உலகினில் புரட்சியை விதைத்தவராம்

வெல்லம்போ லினிக்கும் வார்த்தைகளாலே 

வேதத்தின் வரிகளை சொன்னவராம் (பாலையில்)


இறைவனின் தியானத்தில் இருந்தவராம் - பல 

இரவுகள் மலைமேல் தனித்தவராம் 

மறை குர்ஆனை மனதினில் ஏந்தி 

மாந்தர்கள் பயன் பெற அளித்தவராம் (பாலையில்)


இருபத்து ஐந்தாம் வயதினிலே - நல்

இல்லறம் கண்டு மகிழ்ந்தவராம் 

அறுபத்து மூன்று ஆண்டுகள் வாழ்ந்து 

அகிலத்தின் ஒளியாய் சிறந்தவராம் (பாலையில்)


நிலவை இரண்டாய் பிளந்தவராம் - விரல் 

இடுக்கில் நீரை அளித்தவராம் 

அலியார் அசரு தொழுகைக்காக  

அடைந்த சூரியன் அழைத்தவராம் (பாலையில்)

No comments: