Saturday, November 5, 2016

அஜீஸ் அன்சாரி ...

அஜீஸ் அன்சாரி ...
கொஞ்சம் சுவாரஸ்யமான மேட்டர் இது.
கோட்டாறின் மிக பிரபலமான வி.ஐ.பி.க்களில் ஒருவராக இருந்தவர் மறைந்த
பக்ருதீன் ஆதம்.
அதென்ன ஆதம் ?
ஆதம்நபி சொர்க்கத்திலிருந்து இறக்கி விடப்பட்ட இடம் குமரி மாவட்டம் என்பது நம்பிக்கை.
அதனால் எங்கள் கோட்டாறு மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு
ஆதம்
ஆதம்பாவா என்றெல்லாம் பெயரிடுவார்கள்.
பக்ருதீன் ஆதத்தின் வாப்பா பெயர் ...
ஆதம்பாவா !
பக்ருதீன் ஆதம் நாகர்கோயில் கோர்ட்டில்
பப்ளிக் பிராசிக்யூட்டராக இருந்து புகழ்பெற்ற வழக்கறிஞர்.
இவரது மகள் வழிப் பேரன்
அஜீஸ் அன்வர் அமெரிக்காவில்
இன்றைக்கு பிரபல நடிகர்.
அவரைப் பற்றிய ஒரு டாக்குமென்ட்ரி தயார் செய்வதில் அமெரிக்க நிறுவனமொன்று
இறங்கி இருக்கிறது.

அஜீஸ் அன்வரின் வேர்கள் கோட்டாறு என்பதால் அவரது பூர்வீகத்தையே தோண்டி எடுக்கும் வேலையை அந்த நிறுவனம் மேற்கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் அந்த பணியை
அருமை நண்பர் இயக்குனர் கோம்பை அன்வரிடம் ஒப்படைத்திருக்கிறார்கள்.
நெருக்கடியான ( உடல்நலக் குறைவு மற்றும் மாமியார் மரணம் )சூழ்நிலையில் நான் இருந்த
கழிந்த வாரத்தில் அன்வர் நாகர்கோயில் வந்து விட்டார்.
எந்த சிரமத்தையும் நான் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
அவருக்குத் தேவையான தகவல்களை தருவதில் அவரைவிட அதிக அக்கறையோடு செயல்பட்டேன்.
என் அண்ணன் டாக்டர் ஹபிபுல்லாஹ் அவர்கள் அஜீஸ் அன்சாரியின் உறவினர் .
மேலும் அமெரிக்காவில் அவரது நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தவர்.
அவரையும் சந்திக்க ஏற்பாடு செய்தேன்.
அன்பு நண்பர் நிஜாமுதீன் ரசாக் பக்ருதீன் ஆதத்தின் உறவினர்.
அவரையும் போனில் அழைத்தேன்.
உடனே வந்தார்.
அவருக்குத் தெரிந்த தகவல்களையெல்லாம் சொன்னார்.
ஆதம்பாவாவின் கடைசி மகன் ஆலம்.
அவரையும் அழைத்து வந்து
கோம்பை அன்வருக்கு தகவல்களை தரச் செய்தேன்.
மனசுக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது.
அடுத்த நாள் சந்தித்து மேலும் பல தகவல்களை பரிமாறிக் கொள்வதாகச் சொல்லி இருந்தேன்.
ஆனால் ...
அடுத்தநாள் அதிகாலையில் மாமியார் மரணித்து விட்டதால் சந்திக்க இயலவில்லை.
கோட்டாறில் பிறந்த தன் தாய்க்கு
அமெரிக்காவில் மகனாகப் பிறந்து
அங்கே கொடி கட்டிப் பறக்கும்
அஜீஸ் அன்வரின் வம்ச வரலாறு
இனி உலகெங்கும் தெரிய
நம்மாலான உதவியை செய்ததில் திருப்தி.
கோம்பை அன்வர் யார் ?
" யாதும் " என்ற ஆவணப்பட இயக்குனர்.... தயாரிப்பாளர்.
தமிழ் முஸ்லிம்களைப் பற்றிய வரலாற்று ஆவணம் அந்தப் படம்.
உலகம் முழுக்க அந்த படம் தமிழ் முஸ்லிம் வரலாறை சொல்லிக் கொண்டிருக்கிறது.
சென்றமாதம் சீதக்காதி அறக்கட்டளை
ஒரு லட்சம் பரிசு வழங்கி அவரைப் பாராட்டியது.
ஆதம்பாவாவிற்கு மூன்று ஆண் பிள்ளைகள்.
மூத்தவர் பக்ருதீன் ஆதம்.
மூன்றாமவர் ஆலம்.
இரண்டாவது மகன் ?
நாடு போற்றும் நல்ல தமிழறிஞர்
அண்ணன் கவிஞர்
நாஞ்சில் ஆரிது அவர்கள்தான்
இரண்டாவது மகன்.
@ஆரிது அவர்களின் மகன் சாதிக் அவர்கள்
கோம்பை அன்வரோடு தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.

Abu Haashima

No comments: