Wednesday, November 16, 2016

நம்மன்பில் பிரிவில்லை ....!

நின் கரம் கோர்த்தேன்
நித்தமும் நிம்மதி கொடுத்தாய் 
நின் நினைவாய் இருந்தேன்
நெஞ்சில் ஆசுவாசம் தந்தாய்
நின் ஸ்பரிசம் உணர்ந்தேன்
நம்மில் பிரிவில்லையென அறிந்தேன்
நின் சுகந்தவாசம் சுவாசித்தேன் 
என்னுயிர் உன்வசமென வாழ்கிறேன்

நின் ஆசையில் திளைத்தேன் 
வாழ்வின் நிராசைகளை துரத்தினேன்
நின் ஈர்ப்பில் தன்னிலையிழந்தேன்
ஈருடல் ஓருயிராய் நிலைகொண்டேன்
நின் புன்னகையில் மயங்கினேன் 
உன்னிதயத்தில் நிரந்தர புகலிடமானேன் 
நின் பணிவிடையில் பவ்வியமானேன் 
செய்திட்ட புண்ணியங்கள் சேரக்கண்டேன்
நின் ஆராதனையில் ஆழ்ந்திருந்தேன் 
நீயே எனக்கான ஆதரவென்றானேன் 
நின் சகவாசம் தினம்வேண்டினேன்
நம்மன்பில் பிரிவில்லை எந்நாளுமே !
ராஜா வாவுபிள்ளை

No comments: