Showing posts with label வாழ்க்கை. Show all posts
Showing posts with label வாழ்க்கை. Show all posts
Saturday, May 23, 2015
நானும் கூட ராஜா தானே, நாட்டு மக்களிலே...
வாழ்க்கையில் ஒரு லட்சியம் வேண்டும். அந்த நாளில் கல்விச்சாலைகள், அந்த லட்சி யங்கள் நிறைவேற உதவின. இடலாக்குடி, அரசு பள்ளியில், தமிழ் மீடியத்தில் படித்த, ஒரு மாணவன், IAS - ஆக வேண்டும் என்று ஆசைபட்டான். தமிழ் மீடியத்தில் படிக்கும், ஒரு மாணவன், இவ்வாறு கனவு காண்பது தவறு, என்று போதித்தார் தலைமை ஆசிரியர்.
50 வருடங்களுக்கு முன்னால், தமிழில் IAS எழுதும் வசதி இல்லை. ஆங்கிலத்தில் சிறந்த புலமை வேண்டும், ஆங்கிலத்தில் அந்த மாணவனுக்கு, அவ்வளவு புலமை இல்லை.
எஸ், நோ, என்ற ஆங்கில வார்த்தைகளே, அந்த நாளில், அந்த பள்ளி மாணவர்கள், அறிந்த ஆங்கில வார்த்தைகள். அந்த நாளில், ஒரு அண்டர் கிராடுவேட் டிகிரியும், ஆங்கிலத்தில் சரளமாக பேசும் திறனும், 50 ரூபாய் பணமும் இருந்தால், யார் வேண்டுமா னாலும், IAS, IPS, IFS தேர்வு எழுத முடியும். இன்றும், அதிக பொருள் செலவில்லாமல், தேர்வு எழுதி, பாஸ் பண்ணும் பரீட்சை IAS தான்.
Wednesday, December 17, 2014
முதல் சம்பளம்..!! -நிஷா மன்சூர்
அது ஒரு ஸ்க்ரீன் பிரிண்ட்டிங் பிரஸ்,
+1 படித்துக் கொண்டிருக்கும்போது ஒரு நண்பனின் அண்ணன்தான் சேர்த்துவிட்டார்.
காலை 8.30 முதல் 3.00 மணி வரைதான் பள்ளி நேரம் என்பதால் அதற்குப் பிறகு வேலைக்குச் செல்லலாமென்று இணைந்தேன்.
சேரும்போது சம்பளம் குறித்து எதுவும் பேசவில்லை.
ஆரம்பத்தில் ஸ்க்ரீனைக் கழுவுவதுதான் பணியாக இருந்தது.
பின் பிரிண்டிங் செய்யும்போது உதவுவதும், ப்ரிண்டிங் முடிந்த பேப்பரிலிருந்து ஸ்டிக்கர்களை தனித்தனியாக ப்ளேடால் பிரிப்பதுமாகத் தொடர்ந்தது.
கம்ப்யூட்டர் அதிகம் புழங்கப்படாத 1989/1990 காலகட்டம் அது. கைகளால் ஓவியம் வரைந்துதான் டிசைன்கள் உருவாயின.
அதை கவனிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தேன்,மேலும் கலர்கலரான ஆங்கில தமிழ் மாத இதழ்களும் அங்கு வருமென்பதால் தினமும் ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டுபோய்ப் படிப்பதை/பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்தேன்.
+1 படித்துக் கொண்டிருக்கும்போது ஒரு நண்பனின் அண்ணன்தான் சேர்த்துவிட்டார்.
காலை 8.30 முதல் 3.00 மணி வரைதான் பள்ளி நேரம் என்பதால் அதற்குப் பிறகு வேலைக்குச் செல்லலாமென்று இணைந்தேன்.
சேரும்போது சம்பளம் குறித்து எதுவும் பேசவில்லை.
ஆரம்பத்தில் ஸ்க்ரீனைக் கழுவுவதுதான் பணியாக இருந்தது.
பின் பிரிண்டிங் செய்யும்போது உதவுவதும், ப்ரிண்டிங் முடிந்த பேப்பரிலிருந்து ஸ்டிக்கர்களை தனித்தனியாக ப்ளேடால் பிரிப்பதுமாகத் தொடர்ந்தது.
கம்ப்யூட்டர் அதிகம் புழங்கப்படாத 1989/1990 காலகட்டம் அது. கைகளால் ஓவியம் வரைந்துதான் டிசைன்கள் உருவாயின.
அதை கவனிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தேன்,மேலும் கலர்கலரான ஆங்கில தமிழ் மாத இதழ்களும் அங்கு வருமென்பதால் தினமும் ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டுபோய்ப் படிப்பதை/பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்தேன்.
Thursday, November 27, 2014
வாழ்க்கையில் சுமைகள் கூடிக்கொண்டே இருக்கின்றன.
1994 ஆம் ஆண்டு, பிழைப்புக்காக சொந்த நாட்டை விட்டு அயல் நாடான அரபு தேசத்துக்கு வந்த காலம்.
அந்த காலக்கட்டத்தில் தொலைத் தொடர்புகள் அவ்வளவாக இந்த நாட்டிலும் வளர்ச்சி பெற்றிருக்கவில்லை.
கடிதங்கள் மூலமே குடும்பத்தார்களோடு தொடர்பில் இருந்த காலமது.
தொலைப்பேசியில் பேசவேண்டுமென்றால் தொலைப்பேசிக் கூடங்களுக்கு சென்றுதான் பேசமுடியும். ஒரு நிமிடத்துக்கு 600 பில்ஸ்.
அது என் போன்றோருக்கு பெருந்தொகை. தேவையான தொகைக்கு கார்டுகள் வாங்கிக் கொள்ளவேண்டும்.
அந்த காலக்கட்டத்தில் தொலைத் தொடர்புகள் அவ்வளவாக இந்த நாட்டிலும் வளர்ச்சி பெற்றிருக்கவில்லை.
கடிதங்கள் மூலமே குடும்பத்தார்களோடு தொடர்பில் இருந்த காலமது.
தொலைப்பேசியில் பேசவேண்டுமென்றால் தொலைப்பேசிக் கூடங்களுக்கு சென்றுதான் பேசமுடியும். ஒரு நிமிடத்துக்கு 600 பில்ஸ்.
அது என் போன்றோருக்கு பெருந்தொகை. தேவையான தொகைக்கு கார்டுகள் வாங்கிக் கொள்ளவேண்டும்.
Saturday, November 22, 2014
’’வாழ்க்கை சிக்கலானது இல்லை, ரொம்ப எளிமையானது தான்,..."/ பிரியா தம்பி
’’வாழ்க்கை சிக்கலானது இல்லை, ரொம்ப எளிமையானது தான், நமக்கு கிடைச்சிருக்கிற இந்த வாழ்க்கையை எப்படி மத்தவங்களுக்கு பயன்படுற மாதிரி உபயோகமா, சந்தோஷமா வாழறதுன்னு யோசிக்கிறோம்’’ என சக்கர நாற்காலியில் உட்கார்ந்து சிரித்தபடி சொல்கிறார்கள் இந்த இரு சகோதரிகளும்.
மஸ்குலர் டிஸ்ட்ரோபி என்னும் தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட வானவன் மாதேவி, இயல் இசை வல்லபி என்கிற இரு சகோதரிகளைப் பற்றி ஏற்கனவே வாசித்திருக்கிறேன். அவர்களைப் பற்றி குறும்படம் தயாரித்திருக்கிறார் கீதா. ‘’முள்ளுக்காட்டுல தாங்க ஒவ்வொரு தடவையும் போயிட்டு வரணும்’’ என மாற்றுத் திறனாளி பெண் ஒருத்தி கீதா இயக்கிய ‘மாதவிடாய்’ ஆவணப் படத்தில் சொன்னபோது அதிர்ந்து போயிருக்கிறேன். அதுவரை அப்படியான பெண்கள் என்ன செய்வார்கள் என யோசித்திருக்கவே இல்லை.
மஸ்குலர் டிஸ்ட்ரோபி என்னும் தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட வானவன் மாதேவி, இயல் இசை வல்லபி என்கிற இரு சகோதரிகளைப் பற்றி ஏற்கனவே வாசித்திருக்கிறேன். அவர்களைப் பற்றி குறும்படம் தயாரித்திருக்கிறார் கீதா. ‘’முள்ளுக்காட்டுல தாங்க ஒவ்வொரு தடவையும் போயிட்டு வரணும்’’ என மாற்றுத் திறனாளி பெண் ஒருத்தி கீதா இயக்கிய ‘மாதவிடாய்’ ஆவணப் படத்தில் சொன்னபோது அதிர்ந்து போயிருக்கிறேன். அதுவரை அப்படியான பெண்கள் என்ன செய்வார்கள் என யோசித்திருக்கவே இல்லை.
Sunday, November 16, 2014
உலக வாழ்க்கை....!
வாழ்க்கைப் பெருங்கடலை
நீந்திக் கடக்க முயற்சிக்கும்
மீன் குஞ்சுகளே மனிதர்கள்
வருத்தமே வாழ்க்கையென
வருந்துவோரே அதிகமிருந்தும்
வாழ்க்கையை வாழ்வோரும் அதிகம் அதிகம்
நாடியது நடக்க
வேண்டுமென ஓடோடி உழைத்து ஓடாய் தேய்ந்தொரும் இங்குண்டு
பணமே பிரதானமென
பண்பை தொலைத்து
பராபரனை மறந்து வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடியோரும் இங்குண்டு
அசுரவேக முன்னேற்றங்களும்
பிரம்மிக்கவைக்கும் வளர்ச்சியும் சர்வ சாதரணமாகவே நடைமுறையில் இருக்கும்.
காலங்கள் மாறும்
கவலைகள் தீரும்
வசந்த காலமும் வரும் இருந்தும் நிலையில்லாதது வாழ்க்கை.
நீந்திக் கடக்க முயற்சிக்கும்
மீன் குஞ்சுகளே மனிதர்கள்
வருத்தமே வாழ்க்கையென
வருந்துவோரே அதிகமிருந்தும்
வாழ்க்கையை வாழ்வோரும் அதிகம் அதிகம்
நாடியது நடக்க
வேண்டுமென ஓடோடி உழைத்து ஓடாய் தேய்ந்தொரும் இங்குண்டு
பணமே பிரதானமென
பண்பை தொலைத்து
பராபரனை மறந்து வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடியோரும் இங்குண்டு
அசுரவேக முன்னேற்றங்களும்
பிரம்மிக்கவைக்கும் வளர்ச்சியும் சர்வ சாதரணமாகவே நடைமுறையில் இருக்கும்.
காலங்கள் மாறும்
கவலைகள் தீரும்
வசந்த காலமும் வரும் இருந்தும் நிலையில்லாதது வாழ்க்கை.
ஆக்கம் ராஜா வாவுபிள்ளை
***************************************************
Tuesday, August 12, 2014
அப்பாவின் நினைவாக....
எப்போதும் என்மீது செல்லமாகவே இருக்கும் அப்பாவின் கையால் அடிவாங்கிய இரவு அது. அடித்தது வலிக்கவில்லை. அடித்து விட்டாரே எனும் எண்ணம் தான் வலித்துக் கொண்டிருந்தது.
எனக்கு அப்போது ஐந்து வயதோ, ஆறு வயதோ இருக்கலாம். ஒழுங்காக டவுசர் உடுக்கத் தெரியாத வயது. ஆனாலும் அந்த வலியை மனதுக்குள் கால் நூற்றாண்டுகளுக்குப் பிறகும் மீண்டெடுக்க முடிகிறது.
தூங்காமல் கண்ணை மூடியபடி படுத்துக் கிடந்த எனக்குள் சின்ன வயது சிந்தனைகள் நிரம்பின. “அப்பாவுக்கு என் மேல பாசமே இல்லை. இல்லேன்னா இப்படி அடிச்சிருப்பாரா?” என்பதே எனது மனசில் எழுந்து கொண்டிருந்த ஒரே கேள்வியாய் இருந்தது. அந்தக் கேள்வி எனக்குள் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்ததால் என்னால் தூங்கமுடியவில்லை.
Wednesday, July 30, 2014
கடற்கரையில் காற்று வாங்க போனோம்! -இன்னபிற சங்கதிகளுடனுமாக பார்த்த கடல்.
கடற்கரையில் காற்று வாங்க போனோம்!
பெருநாள் தினத்தின்
மாலை நேரம்
குமரி முஸ்லிம்களுக்கு
கடற்கரையில்
காற்று வாங்கும் நேரம் !
ஒவ்வொரு பெருநாள்
மாலை நேரங்களும்
கன்னியாகுமரி கடற்கரை
ஒரு பொதுக்கூட்டம் நடத்தும் அளவுக்கு
முஸ்லிம்களின் சங்கமத்தால்
நிரம்பி விடுகிறது !
நேற்றும் அப்படித்தான்...
நாங்களும் சங்கமம் !
பெருநாள் தினத்தின்
மாலை நேரம்
குமரி முஸ்லிம்களுக்கு
கடற்கரையில்
காற்று வாங்கும் நேரம் !
ஒவ்வொரு பெருநாள்
மாலை நேரங்களும்
கன்னியாகுமரி கடற்கரை
ஒரு பொதுக்கூட்டம் நடத்தும் அளவுக்கு
முஸ்லிம்களின் சங்கமத்தால்
நிரம்பி விடுகிறது !
நேற்றும் அப்படித்தான்...
நாங்களும் சங்கமம் !
Tuesday, February 18, 2014
சுய தொழிலில் சாதிக்கும் ஆஷா சுல்தானா!
''இதெல்லாம் ஒரு தொழில்னு...''
ஆஷாவை உயர வைத்த அக்கம்பக்கத்து கேலி!
''வாழ்க்கையில் முன்னேறணும்னு வேகம் இருக்கற பெண்கள், விமர்சனங்கள் பற்றி கவலைப்படக் கூடாது!''
- மன உறுதி வார்த்தைகளில் தெறிக்கிறது... திருச்சி பெண், ஆஷா சுல்தானாவுக்கு.
ஆஷாவை உயர வைத்த அக்கம்பக்கத்து கேலி!
''வாழ்க்கையில் முன்னேறணும்னு வேகம் இருக்கற பெண்கள், விமர்சனங்கள் பற்றி கவலைப்படக் கூடாது!''
- மன உறுதி வார்த்தைகளில் தெறிக்கிறது... திருச்சி பெண், ஆஷா சுல்தானாவுக்கு.
Friday, February 14, 2014
ஐ லவ் சென்னை எப்பவும்
சென்னை வந்து இந்த மாதத்தோடு ஒன்பது வருடங்கள் ஆகின்றன. இந்த வருடங்களில் சென்னையின் வரலாற்றில் எல்லாம் இடம்பிடிக்கவில்லை தான். ஆனால் வருங்காலத்தில் நான் என் வரலாற்றை எழுதினால் பெரும் சாட்சியாய் இருக்கப் போவது சென்னை தான்..
சென்னை மீது எப்போதும் பெருங்காதல் உண்டு.. பெருங்காதலின் உபவிளைவாய் அவ்வப்போது கோபமும், சலிப்பும் கூட ஏற்படுவது உண்டு தான்... எந்த ஊருக்குக் கிளம்பினாலும் திரும்பி வர விரும்புகிற இடமாய் சென்னை தான் இருக்கிறது. சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களும் சரி, பெண்களும் சரி சொந்த ஊர்ப் பெருமை பேசுவதோ, ஊர் திரும்புதலை பற்றி யோசிப்பதோ குறைவுதான். ஆதிக்கத்தின் கீழ் இருப்பதை யாரும் விரும்புவதில்லை தானே?
பயங்களும், குழப்பங்களும் நிறைந்த என் பால்ய காலத்தை எப்போதுமே நான் நினைவுபடுத்திக் கொள்ள விரும்புவதில்லை.. நினைவு தெரிந்த நாளில் இருந்தே அந்த ஊரின் மூச்சுத் திணறலில் இருந்து வெளியேற வேண்டும் என்பதே கனவாய் இருந்தது. சென்னைக்கு முதலில் வந்தபோது வேலையே இருக்கவில்லை.. வேலை கிடைத்து விட்டதாய் வீட்டில் பொய் சொல்லி, தி.நகர் தராசு அலுவலக வாசலில் அப்பாவை நிற்கவைத்து, அதெல்லாம் பெரிய டிராமா...:)
சென்னை மீது எப்போதும் பெருங்காதல் உண்டு.. பெருங்காதலின் உபவிளைவாய் அவ்வப்போது கோபமும், சலிப்பும் கூட ஏற்படுவது உண்டு தான்... எந்த ஊருக்குக் கிளம்பினாலும் திரும்பி வர விரும்புகிற இடமாய் சென்னை தான் இருக்கிறது. சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களும் சரி, பெண்களும் சரி சொந்த ஊர்ப் பெருமை பேசுவதோ, ஊர் திரும்புதலை பற்றி யோசிப்பதோ குறைவுதான். ஆதிக்கத்தின் கீழ் இருப்பதை யாரும் விரும்புவதில்லை தானே?
பயங்களும், குழப்பங்களும் நிறைந்த என் பால்ய காலத்தை எப்போதுமே நான் நினைவுபடுத்திக் கொள்ள விரும்புவதில்லை.. நினைவு தெரிந்த நாளில் இருந்தே அந்த ஊரின் மூச்சுத் திணறலில் இருந்து வெளியேற வேண்டும் என்பதே கனவாய் இருந்தது. சென்னைக்கு முதலில் வந்தபோது வேலையே இருக்கவில்லை.. வேலை கிடைத்து விட்டதாய் வீட்டில் பொய் சொல்லி, தி.நகர் தராசு அலுவலக வாசலில் அப்பாவை நிற்கவைத்து, அதெல்லாம் பெரிய டிராமா...:)
Sunday, February 2, 2014
பிரிவை நினைத்தே பிரியம் பீறிட்ட இவன், மோகம் முந்நூறு வருஷம் என்று சத்தியம் செய்கிறான்.
நினைத்துப் பார்க்கிறேன்
அவன் காசுதேடி வளைகுடா வந்தவன். காசு மட்டுமே வாழ்க்கை இல்லைதான். ஆனால் காசே இல்லாமல் வாழ்க்கை என்ற வார்த்தையைத் கூட எவராலும் உச்சரிக்க முடியாதே வளைகுடா கடலில் உப்பு அதிகம். இவன் போன்றவர்களின் கண்ணீரே காரணமாய் இருக்குமோ என்னவோ
ஒருமாத விடுமுறை என்பதுதான், ஒரு முழு வருடத்திற்கும் இவன் கொள்ளும் ஒரே நிஜமான உறக்கம். அந்த உறக்கத்தின் கனவுகளாய் வந்த எத்தனையோ இனிப்பான விஷயங்கள் பிறகெல்லாம் இவன் உயிரையே ஆக்கிரமிக்கும்.
தன் விடுமுறையை இரட்டிப்பாய் நீட்டித்து இம்முறை மணமுடித்த இவனுக்கு மோகம் முப்பது நாள் என்பது ஒரு தப்பான தகவல். பிரிவை நினைத்தே பிரியம் பீறிட்ட இவன், மோகம் முந்நூறு வருஷம் என்று சத்தியம் செய்கிறான்.
பிரிந்துவந்த அன்றே தன் புது மனைவிக்கு இவன் எழுதிய முதல் கடிதமாய் இக் கவிதை விரிகிறது
அவன் காசுதேடி வளைகுடா வந்தவன். காசு மட்டுமே வாழ்க்கை இல்லைதான். ஆனால் காசே இல்லாமல் வாழ்க்கை என்ற வார்த்தையைத் கூட எவராலும் உச்சரிக்க முடியாதே வளைகுடா கடலில் உப்பு அதிகம். இவன் போன்றவர்களின் கண்ணீரே காரணமாய் இருக்குமோ என்னவோ
ஒருமாத விடுமுறை என்பதுதான், ஒரு முழு வருடத்திற்கும் இவன் கொள்ளும் ஒரே நிஜமான உறக்கம். அந்த உறக்கத்தின் கனவுகளாய் வந்த எத்தனையோ இனிப்பான விஷயங்கள் பிறகெல்லாம் இவன் உயிரையே ஆக்கிரமிக்கும்.
தன் விடுமுறையை இரட்டிப்பாய் நீட்டித்து இம்முறை மணமுடித்த இவனுக்கு மோகம் முப்பது நாள் என்பது ஒரு தப்பான தகவல். பிரிவை நினைத்தே பிரியம் பீறிட்ட இவன், மோகம் முந்நூறு வருஷம் என்று சத்தியம் செய்கிறான்.
பிரிந்துவந்த அன்றே தன் புது மனைவிக்கு இவன் எழுதிய முதல் கடிதமாய் இக் கவிதை விரிகிறது
Wednesday, January 1, 2014
குடும்ப வாழ்க்கை ரகசியங்கள் - 3
மரியாதை கலந்த அங்கீகாரம்
மரியாதை என்றதும் பதற வேண்டாம். மரியாதை என்பதற்கு சமூகம் ஏகப்பட்ட அர்த்தங்களை வைத்திருக்கிறது. சிலருக்கு சாஷ்டாங்கமாய்க் காலில் விழுவது தான் மரியாதை. சிலருக்கு ஒரு சின்னப் புன்னகை கூட மரியாதை தான். சிலருக்கு வார்த்தைகள், சிலருக்கு வணக்கம், சிலருக்கு சின்னச் சின்ன செயல்களின் வெளிப்பாடுகள். மரியாதை என்பது மனித இனத்தின் தனித் தன்மை. அது கணவன் மனைவியரிடேயும் இருக்க வேண்டியது முக்கியம்.
Tuesday, December 31, 2013
எல்லா சுகங்களையும் துக்கங்களையும் பகிர்ந்துகிட்டு வாழற வாழ்க்கைத் துணைக்கு நன்றி சொல்ல எது நம்மை தடுக்குது?
நிச்சயமா இந்த நிலைத்தகவல் நான் உட்பட பெரும்பாலானவர்களுக்கு பொருந்தக் கூடியதுதான்.
பொதுவாகவே முகநூலில் நான் பார்க்கிற விஷயம் இது. தெரிஞ்சோ தெரியாமலோ ‘வெர்சுவல் உலக’த்துக்கு அடிமையாகிட்டோம். ஒரு நாளின் பெரும் பொழுதை முகம் தெரியாத நண்பர்களோடதான் கழிக்கிறோம். கொஞ்சறோம், சண்டை போடறோம், கை குலுக்கறோம். ஆண்டு கடைசில அந்த நண்பர்களை நினைவுகூர்ந்து நன்றியை தெரிவிக்கறோம்.
ஆனா, நம்மோட எல்லா சுகங்களையும் துக்கங்களையும் பகிர்ந்துகிட்டு சொல்லப்போனா சகிச்சுகிட்டு வாழற வாழ்க்கைத் துணை பத்தி ஏன் குறிப்பிட மறக்கறோம்? அவங்களுக்கு நன்றி சொல்ல எது நம்மை தடுக்குது?
எனக்கு அமைந்த தோழிகள் / தோழர்கள் இப்படி... அப்படினு நெகிழற நாம ஏன் நம்மோடயே மனதாலும், உடலாலும் இணைந்தும், முரண்பட்டும் இருக்கிற வாழ்க்கைத் துணை பத்தி எதுவும் சொல்ல முடியலை?
பொதுவாகவே முகநூலில் நான் பார்க்கிற விஷயம் இது. தெரிஞ்சோ தெரியாமலோ ‘வெர்சுவல் உலக’த்துக்கு அடிமையாகிட்டோம். ஒரு நாளின் பெரும் பொழுதை முகம் தெரியாத நண்பர்களோடதான் கழிக்கிறோம். கொஞ்சறோம், சண்டை போடறோம், கை குலுக்கறோம். ஆண்டு கடைசில அந்த நண்பர்களை நினைவுகூர்ந்து நன்றியை தெரிவிக்கறோம்.
ஆனா, நம்மோட எல்லா சுகங்களையும் துக்கங்களையும் பகிர்ந்துகிட்டு சொல்லப்போனா சகிச்சுகிட்டு வாழற வாழ்க்கைத் துணை பத்தி ஏன் குறிப்பிட மறக்கறோம்? அவங்களுக்கு நன்றி சொல்ல எது நம்மை தடுக்குது?
எனக்கு அமைந்த தோழிகள் / தோழர்கள் இப்படி... அப்படினு நெகிழற நாம ஏன் நம்மோடயே மனதாலும், உடலாலும் இணைந்தும், முரண்பட்டும் இருக்கிற வாழ்க்கைத் துணை பத்தி எதுவும் சொல்ல முடியலை?
Saturday, December 14, 2013
இந்தியாவில் ஓரின சேர்க்கை வாழ்க்கை முறையை....
இந்தியாவில் ஓரின சேர்க்கை வாழ்க்கை முறையை பல அரசியல் தலைவர்களும் அமைப்புத் தலைவர்களும் வரவேற்றிருக்கிறார்கள்.
இது முஸ்லிம்களுக்கு அதிர்ச்சியைத் தந்திருக்கிறது.
ஓரினச்சேர்க்கை பற்றி இஸ்லாம் )
ஆனால் பெரும்பாலான மக்கள் இதை ஒரு மேட்டராகவே எடுத்துக் கொள்ளவில்லை.
காரணம் இருக்கிறது.
இந்திய கலாச்சாரத்தில் ஓரின சேர்க்கைக்கு பெரிய அங்கீகாரமே இருக்கிறது.
பல மன்னர்கள் அதில் ஆர்வமுள்ளவர்களாக இருந்தார்கள்.
மக்களிலும் பலர் திருமணம் செய்யாமல் வாழ்கிறார்கள்.
இது முஸ்லிம்களுக்கு அதிர்ச்சியைத் தந்திருக்கிறது.
ஓரினச்சேர்க்கை பற்றி இஸ்லாம் )
ஆனால் பெரும்பாலான மக்கள் இதை ஒரு மேட்டராகவே எடுத்துக் கொள்ளவில்லை.
காரணம் இருக்கிறது.
இந்திய கலாச்சாரத்தில் ஓரின சேர்க்கைக்கு பெரிய அங்கீகாரமே இருக்கிறது.
பல மன்னர்கள் அதில் ஆர்வமுள்ளவர்களாக இருந்தார்கள்.
மக்களிலும் பலர் திருமணம் செய்யாமல் வாழ்கிறார்கள்.
Saturday, November 30, 2013
இதென்ன இப்படிக் கனக்கிறது!
எண்ணங்களுக்கு எடையுள்ளதா
எனும் கேள்விக்கு விடையுள்ளதா?
கண்டெத்திய பாவங்களின்
கணக்கொரு கனம் - நாவால்
சொல்லிச் சேர்த்த பாவச்
சுமையொரு கனம்
செயல்களால் சேர்ந்ததும் - செய்ய
முயல்தலால் சேர்த்ததும்
நனவினில் சேர்த்ததும் - கண்ட
கனவினில் சேர்ந்ததும்
Sunday, November 24, 2013
வாழ்கை என்னும் பாடம்
வெற்றிலையும் சுண்ணாம்பும் சேர்ந்தால் நாக்கு
...........வெளிக்காட்டும் செந்நிறத்தின் அழகு போல
வெற்றிகளை ஈட்டிவரும் சான்றோர் வாழ்வு
........... வீரியமாய்த் தந்திரமும் இணைந்த தாலே
சுற்றிவரும் சூழ்ச்சிகளை எளிதில் கண்டு
..........சுழற்றியதை முறியடித்தார் விரைந்து சென்று
கற்றிடுவோம் அவர்வாழ்வில் முன்னேற் பாட்டை!
..........கழற்றிடுவோம் நம்வாழ்வில் ஐயப் பாட்டை
...........வெளிக்காட்டும் செந்நிறத்தின் அழகு போல
வெற்றிகளை ஈட்டிவரும் சான்றோர் வாழ்வு
........... வீரியமாய்த் தந்திரமும் இணைந்த தாலே
சுற்றிவரும் சூழ்ச்சிகளை எளிதில் கண்டு
..........சுழற்றியதை முறியடித்தார் விரைந்து சென்று
கற்றிடுவோம் அவர்வாழ்வில் முன்னேற் பாட்டை!
..........கழற்றிடுவோம் நம்வாழ்வில் ஐயப் பாட்டை
Wednesday, November 20, 2013
புனிதமானது
நீ தேடாத ஒரு சுகம்
உன்னைத் தேடி வரும்
நீ அனுபவிக்கக் கூடாத ஒரு துக்கம்
உன்னை அனுபவிக்கும்
நீ நினைக்காத ஒரு பாவத்தை
நீ அறிந்தே செய்து முடிப்பாய்
நீ எண்ணாத ஒரு புண்ணியத்தை
நீ அறியாமலேயே செய்திருப்பாய்
உன்னைத் தேடி வரும்
நீ அனுபவிக்கக் கூடாத ஒரு துக்கம்
உன்னை அனுபவிக்கும்
நீ நினைக்காத ஒரு பாவத்தை
நீ அறிந்தே செய்து முடிப்பாய்
நீ எண்ணாத ஒரு புண்ணியத்தை
நீ அறியாமலேயே செய்திருப்பாய்
Sunday, November 17, 2013
"அவனுக்கு நிகராக எவரும் இல்லை."
இறைவனை அறியும் நிலை உயர்வான நிலை
இறைவனின் ஒளி ஆன்மாவின் அறிதல் நிலை
ஆன்மாவின் ஒளி வழி ஞானத்தை பெறுதல் நிலை
இறைவனின் அருள் இருளைப் போக்கி ஒளியை தருகிறது
இறைவனை அறிதல் ஆன்மீக ஞானம் பெற வைக்கிறது
ஆன்மீக ஞானம் அறியாமையும் மூடநம்பிக்கையும் .போக்குகின்றது
பயத்தை அகற்றி நேர்வழியில் நடை போட வைக்கின்றது
மறைந்து செயல்படும் பொய்யான வாழ்க்கையை போக்குகின்றது
இடையூறுகளை நினைத்து செயலில் தொய்வு விழ வைக்காமல் தொடர்கின்றது
நேர்மையான செயலில் ஈடுபடும் உறுதியான கொள்கையை உருவாக்குகின்றது
ஆன்மாவின் கோட்டை உறுதிப்பாட்டோடு நிலைத்து நிற்கின்றது
Friday, November 15, 2013
விலகல்
இக்கணத்தில்
உனை விலகிப்போவதைத் தவிர
வேறு மார்க்கம் ஏதுமில்லை
எல்லா அபிமானங்களையும்
ஒதுக்கிவிட்டால்
ஒரு சத்திரத்தைப் போல
எளிமையாக உள்ளது
வாழ்க்கை
Thursday, November 14, 2013
வில்லும் அம்பும் – கலீல் ஜிப்ரான்
உங்கள் குழந்தைகள்
உங்களுடையவர்கள் அல்லர்
அவர்களே வாழ்வும், வாழ்வின் அர்த்தங்களும் ஆவர்.
அவர்கள் உங்கள் வழியாக வருகிறார்களேயன்றி
உங்களிடமிருந்து அல்ல
உங்களுடன் இருந்தாலும் அவர்கள்
உங்களுக்கு உரியவர்களல்லர்.
Monday, November 11, 2013
மகிழ்வான வாழ்க்கையில் காலத்தை நீடித்தல்
பார்க்கும் இடம் புதிதாக இருத்தல்
புதியவர்களிடம் கணிவாகபேசுதல்
விளையாட்டில் ஆர்வம்
நம்பிக்கையில் உறுதி
இசையை ரசித்தல்
சிறந்த புத்தகத்தை படித்தல்
ஆரோக்கியமான உணவு
நல்லதை மற்றவருக்கு ஏற்றி வைத்தல்
அதிகாலை மகிழ்வான நடை
அந்தி மயங்கும் நேரத்தின் காட்சியை கண்டு ரசித்தல்
விரும்பிய படக்காட்சியை கண்டு மகிழ்தல்
செயல்களில் தைரியம்
செயல்களில் தீவிரம்
செய்த வேலையின் களைப்பை ஓய்வு பெறுதலால் கிடைக்கும் மகிழ்வு
செய்த வேலையின் சிறப்பான முடிவை நினைத்து மகிழ்தல்
புதியவர்களிடம் கணிவாகபேசுதல்
விளையாட்டில் ஆர்வம்
நம்பிக்கையில் உறுதி
இசையை ரசித்தல்
சிறந்த புத்தகத்தை படித்தல்
ஆரோக்கியமான உணவு
நல்லதை மற்றவருக்கு ஏற்றி வைத்தல்
அதிகாலை மகிழ்வான நடை
அந்தி மயங்கும் நேரத்தின் காட்சியை கண்டு ரசித்தல்
விரும்பிய படக்காட்சியை கண்டு மகிழ்தல்
செயல்களில் தைரியம்
செயல்களில் தீவிரம்
செய்த வேலையின் களைப்பை ஓய்வு பெறுதலால் கிடைக்கும் மகிழ்வு
செய்த வேலையின் சிறப்பான முடிவை நினைத்து மகிழ்தல்
Subscribe to:
Posts (Atom)


.jpg)








