கடற்கரையில் காற்று வாங்க போனோம்!
பெருநாள் தினத்தின்
மாலை நேரம்
குமரி முஸ்லிம்களுக்கு
கடற்கரையில்
காற்று வாங்கும் நேரம் !
ஒவ்வொரு பெருநாள்
மாலை நேரங்களும்
கன்னியாகுமரி கடற்கரை
ஒரு பொதுக்கூட்டம் நடத்தும் அளவுக்கு
முஸ்லிம்களின் சங்கமத்தால்
நிரம்பி விடுகிறது !
நேற்றும் அப்படித்தான்...
நாங்களும் சங்கமம் !
Showing posts with label காற்று. Show all posts
Showing posts with label காற்று. Show all posts
Wednesday, July 30, 2014
Tuesday, June 18, 2013
காவிரி உப்பு
இனத்தின் பெயரால்
மொழியின் பெயரால்
மண்ணைப் பிரித்தவர்கள்
இறுதியில்
மேகம் கொட்டிச் செல்லும்
மழையையும்
கொள்ளையடித்தார்கள் !
***
வானுக்கும் பூமிக்கும்
கதவு போட முடியாததால்
காற்று மட்டும்
வேலி தாண்டி வந்து
வருடிச் செல்கிறது!
***
ஜாதி மத வெறுப்பின்
அடுப்புக்கு
விறகாகாமல்
பசித்த வயிறுகளுக்கெல்லாம்
அமுத மழை பொழிபவர்கள்
ஏர் பிடித்து வாழ்பவர்கள்!
Subscribe to:
Posts (Atom)