Showing posts with label காற்று. Show all posts
Showing posts with label காற்று. Show all posts

Wednesday, July 30, 2014

கடற்கரையில் காற்று வாங்க போனோம்! -இன்னபிற சங்கதிகளுடனுமாக பார்த்த கடல்.

 கடற்கரையில் காற்று வாங்க போனோம்!
பெருநாள் தினத்தின்
மாலை நேரம்
குமரி முஸ்லிம்களுக்கு
கடற்கரையில்
காற்று வாங்கும் நேரம் !

ஒவ்வொரு பெருநாள்
மாலை நேரங்களும்
கன்னியாகுமரி கடற்கரை
ஒரு பொதுக்கூட்டம் நடத்தும் அளவுக்கு
முஸ்லிம்களின் சங்கமத்தால்
நிரம்பி விடுகிறது !

நேற்றும் அப்படித்தான்...
நாங்களும் சங்கமம் ! 

Tuesday, June 18, 2013

காவிரி உப்பு



இனத்தின் பெயரால்

மொழியின் பெயரால்

மண்ணைப் பிரித்தவர்கள்

இறுதியில்

மேகம் கொட்டிச் செல்லும்

மழையையும்

கொள்ளையடித்தார்கள் !

***

வானுக்கும் பூமிக்கும்

கதவு போட முடியாததால்

காற்று மட்டும்

வேலி தாண்டி வந்து

வருடிச் செல்கிறது!

***

ஜாதி மத வெறுப்பின்

அடுப்புக்கு

விறகாகாமல்

பசித்த வயிறுகளுக்கெல்லாம்

அமுத மழை பொழிபவர்கள்

ஏர் பிடித்து வாழ்பவர்கள்!